To search this blog

Tuesday, January 25, 2022

Sri Andal Neeratta Uthsavam 2022 – @ Thiruvallikkeni

Sri Andal Neeratta Uthsavam 2022 – thiruveethi purappadu @ Thiruvallikkeni



திருவல்லிக்கேணிவாசிகளுக்கு  இன்று ஓர் அற்புத நாள். மார்கழி 21 (ஜனவரி 5) 2022 - திருவோணம் திருதியை சேர்ந்த நன்னாள்  - இன்று முதல் ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் ஆரம்பம். விடியல்  என்பது என்ன ? - எப்போது பகல் வரும் ?  - 'இரவு கழிந்தது ! - இரவி எழுந்தான் ?  எப்போது இருள் விலகும் ?  -  சூரிய உதயத்திலா !! - இல்லை !!  

ஏப்ரல் மாதம் 9ம் தேதி - எம்பெருமானார் இராமானுஜர் உத்சவம் ஆரம்பித்தது .. .. முதல் நாள் மட்டும் புறப்பாடு இனிதே நடந்தது.  பின் அரசாங்க கோவிட் விதிமுறைகளால் திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை.  நடுவில், திருக்கோவில்களில்  வாரத்தில் சில நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  அண்மையில் ஓர் நாள் பட்டணம் கோவில் கோஷ்டிக்கு சென்று இருந்தேன்.  பெரிய பிரகாரத்தில் ஆண்டாள் சன்னதி முன்பு பெருமாளை ஏளப்பண்ணி அருளிச்செயல்  கோஷ்டி ஆனது.  பூக்கடை காவல் நிலையத்தில் அருகில் இருந்து மனித வெள்ளத்தில் நீந்தி சென்று கோவில் வாசலை அடைய சுமார் இருபது நிமிடங்கள் ஆனது !  .. ..

திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் - பட்டர், கைங்கர்யபரர் என விரல் விட்டு எண்ணும் அளவில் பக்தர்கள் . .. .. கோவில் வாசல் அடைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக கைங்கர்யபரர்கள் மட்டும் !  .. .. நிற்க, அதே சமயம் - அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெரு, தங்கசாலை தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் - அங்குள்ள பிரபல உணவகங்களின் முன் நூற்றுக்கணக்கானோர் !  'கொரோனாவும் - கோவிலும்' - வீதிகளில் மாந்தர்களுக்கு எவ்வித தடையும் இல்லை, பெரும்பாலானோர் முகக்கவசம் கூட அணியவில்லை !! 

19.11.2021  கார்த்திகையில் கார்த்திகை நாள் -  கார்த்திகை தீப நன்னாள். திருமங்கைமன்னன் சாற்றுமுறை.   திருவல்லிக்கேணிவாசிகள் ஆனந்தத்தில் திளைக்க ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.    

அதன் பின் பல மாதங்கள் பின் இன்று  5.1.2022 ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு.  சேவித்த பக்தர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.  இது கூட முழுதாக புறப்பாடு இல்லை.  திருக்கோவில் வாசலில் திருப்பாவை கோஷ்டி ஆரம்பித்து, அங்கேயே சேவித்து, சில அடிகள் கடந்து திருத்தேர் முன்புள்ள நீராட்ட மண்டபம்.  இங்கே திருமஞ்சனம் கண்டருளி திரும்பி திருக்கோவிலுக்கு - மாட வீதிகள், திருகுளக்கரை புறப்பாடு கிடையாது !!

To those of us in Thiruvallikkeni divyadesam today (5.1.2022) dawned beautifully – today being day 1 of Sri Andal Neeratta Uthsavam.  Momentous – joyous moment at as it was  first thiruveethi purappadu after few months.  ..  . .. the  last purappadu  was day 1 of Udayavar Uthsavam way back on 9.4.2021     –   ever since there has been no veethi purappadu.

கோதைப்பிராட்டியின் திருப்பாவை ஒரு அற்புத காவியம். திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத் தமிழ்மாலை. முப்பது பாடல்களுமே எம்பெருமானை மட்டுமே விளித்து, அவனது குணாதிசயங்களை அதிசயித்து, தோழியர்களை அதிகாலை துயில் எழுந்து, நன்னீராடி - அவனை அடைய உபாயங்களை சொல்லும் வைர வரிகள்.  

** சிற்றஞ் சிறுகாலே, வந்து உன்னைச் சேவித்து .. ..  **  ஆண்டாள் தம்முடைய தோழிமார்களை எழுப்பி பறை போன்றவற்றை பேணி, கண்ணனிடத்திலே பேறுகொள்கிறார். மற்றைய பாசுரங்களுக்கு மகுடம் போன்றது இப்பாசுரம்.   ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே வேண்டியது உறவு அல்ல - ஏழேழு ஜென்மங்களிலும் பிரிக்க முடியாத உற்றதோர் உறவு.  குற்றேவல்? குறு + ஏவல் = சின்னச் சின்ன வேலை!  எம்பெருமானிடத்திலே செய்யும் சிறிய கைங்கர்யங்கள் ! ~ அல்லாமல் அவனிடத்தில் நாமாட்பட்டு  செய்யும் அந்தரங்க கைங்கர்யங்கள் தாமே !! 

In tradition, a Srivaishnava is supposed to chant all the 30 verses of Thiruppavai daily, if not possible,  chant this 29th  verse considered to be the quintessence, if even that is not possible one need to at least remember that Andal sung 30 verses and our preceptors dwelled in the meanings of this divine work every day.   

(ettraikkum ēzhēzh piavikkum undannōu uttrōmē yāvōm unakkē nām āt ceyvōm) [எற்றைக்கும், ஏழேழ்  பிறவிக்கும், உன் தன்னோடு உற்றோமேயாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்].   When Bagwan Lord Sri Kṛṣṇa said: — "I have now understood that You desire to serve me this day alone;  those damsels of Thiruvayarpadi responded stating  — “No, not to-day only! But for ever more and for all births to come, we shall not only do service to You and only You, but also will remain related to You.”   The Lord takes innumerable incarnations,  the gopikas aspire to take birth every time with Him to render eternal service;  and  that service is not for pleasure of self but only for pleasure of thyself ; bringing joy to Kṛṣṇa. 

Here are some photos of the glorious purappadu  of Kothai piratti at Thiruvallikkeni divyadesam this morning. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.1.2022 (posted belatedly now)













  

No comments:

Post a Comment