To search this blog

Showing posts with label River. Show all posts
Showing posts with label River. Show all posts

Saturday, October 18, 2025

கங்கா சங்காஸ காவேரி !! ~ bathing in sacred Cauvery at Musiri

 

கங்கா சங்காஸ  காவேரி !!

 

அகண்ட காவிரியின் வடகரையில், திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில், மேற்கில் திருஈங்கோய்மலை, தெற்கில் காவிரி ஆறு, வடக்கில் புதுப் பட்டி, கிழக்கில் ஊமையாள்புரம் என நடுவே அமைந்துள்ளது முசிறி.

 


முசிறி பரிசல் துறை அருகே புனித காவேரியில் நீராடுதல்.

Thursday, May 22, 2025

Sunday, April 6, 2025

Celebrating the birth of Sri Rama : அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி ~ Sree Rama Navami 2025

Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami 2025

*  அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தியென்னும்  அணிநகரத்து  

        உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 

 

 


Today is Sree Rama Navami, the birth day of Bhagwan Sree Ramachandra Murthi.  Rāmāyaa is the first poem (Ādi Kāvya) in the world,  composed eons ago, adapted by people speaking multiple languages. It is handed down from generation to generation orally and through written versions on palm leaves. Bhagawān, ishi and self-realized Vālmeeki,  gave us  the entire life-story of Rāma, in  enchanting narrative.

The Ghaghara River, also known as the Karnali River in Nepal, Mapcha Tsangpo in Tibet, and as the _________  River in the lower Ghaghara of India's Awadh, is a perennial trans-boundary river that originates in the northern slopes of the Himalayas in the Tibetan Plateau, cuts through the Himalayas in Nepal and joins the Sharda River at Brahmaghat in India. Together they form the Ghaghara River, a major left-bank tributary of the Ganges. With a length of 507 km (315 mi), it is the longest river in Nepal. The total length of the Ghaghara up to its confluence with the Ganges at Revelganj in Bihar is 1,080 km (670 mi).  It is the largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.  Do you know this river ? 

This earth, in all its entirety and fullness has been under the care of many successful kings starting from Prajāpati. This glorious ithihasa purana  known as Rāmāyaa emerged from the descendants of the dynasty of great king Ikshwāku.  The mighty King Dasaratha conducted yagna for begetting progeny.  Six seasons after completion of the Yajña, on the  twelfth month after completion, on the ninth day of the Caitra month, when the five planets were in high position, as the Moon and Bihaspati were rising along with the star (Punarvasu) that was presided over by Aditi in the Karkātaka Lagna, Kousalyā gave birth to a son by name Rāma, who would enhance the stature and reputation of the Ikshwāku dynasty, with auspicious features, boding splendid fortunes, endowed with half as many aspects, qualities and powers of  Emperuman Sriman Narayana.


Thiruvallikkeni Sri Ramar

பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,

கண் அகன் திருநகர் களிப்புக் கைம்மிகுந்து,

எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,

சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 

நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்.  அற்புதமான நகரம் திரு அயோத்தி.  தசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலத்தனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானைமீதேறி முரசறைந்து அறிவித்தனர்.  மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர். 

जगुः कलं च गन्धर्वा  ननृतुश्चाप्सरोगणाः ।

देवदुन्दुभयो नेदुः पुष्पवृष्टिश्च खाच्च्युता ।

उत्सवश्च महानासीत् अयोध्यायां जनाकुलः ।

रथ्याश्च जनसम्बाधा नटनर्तकसङ्कुलाः ।

गायनैश्च विराविण्यो वादनैश्च तथाऽपरैः ॥

Sage Valmiki in his Ramakavya describes the moment of birth as :  at that  moment, Gandharvas sang melodiously, Apsaras danced with joy, celestial drums were sounded, flowers showered from the sky. Ayōdhyā became festive with people moving all around. Major pathways were clogged with boisterous crowds entertained by singers, musicians, dancers, actors and the like.  After eleven days passed, Vasishha performed the naming ceremony for the new borns with delight.

He named the great eldest son as Rāma, the son of Kaikēyee as Bharata and the sons of Sumitrā as Lakshmaa and atrughna.  All of them learned the Vēdas and became knowledgeable in all subjects. They were endowed with all the desirable qualities. They learned to share with everyone and care about everybody.  Those tigers among men were earnestly and equally interested in the study of Vēdas and in learning the skill of archery and in seeking and following the guidance of their parents.

பெண்கள் கூட்டத்திலும்,  ஆண்கள்  கூட்டத்திலும்    இடமகன்ற அந்த அழகிய அயோத்தி மாநகரத்திலே, களிப்பு உவகை உற்று,  மகிழ்ச்சி மேலிட்டு - ; எண்ணெயும் கலவைச்  சாந்து, வெண்ணெய்  புனுகு   வகைகளையும்;  பரிமளப் பொடி வகைகளையும்;  மக்கள் ஆனந்தத்தில் ஒவ்வொரு வீதியிலும் தூவினார்கள்.  இராஜ்யத்துக்கு அழகு வாரிசுகள்   பிறந்த   மகிழ்ச்சியால்   வீதிதோறும் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.  ‘’எண்ணெய்  சுண்ணம் எதிரெதிர்  தூவிட’’  என பெரியாழ்வார் இதனை விவரிக்கிறார்.  . 

Today (6th Apr 2025)  is the holy day of Sree Rama Navami – the day on which Lord Sri Ramachandramurthy,  the supreme avatar of Maryada Purush  was born in the blessed land of Ayodhya.  Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. 

Mentioned in the 2nd para – the  Ghaghara River, also known as the Karnali River  is River Sarayu !!    largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.   Lower Ghaghara is popularly known as Sarayu in India, especially while it flows through the city of Ayodhya.  Ayodhya, the birthplace of Lord Rama, is situated on the banks of the river Sarayu.  The Sarayu river   symbolizes spiritual merit, purification, and liberation.  

 




Awadh,  known in British historical texts as Avadh or Oudh, is a historical region in northern India, now constituting the northeastern portion of Uttar Pradesh. It is roughly synonymous with the ancient Kosala region of Hindu, Buddhist, and Jain scriptures. Sadly over the centuries, Islamic dynastics pillaged and ransacked this holy place and ruled in these places with Faizabad serving as capital for some time.    Later, the capital was relocated to Lucknow, which is now the capital of Uttar Pradesh. The British conquered Awadh in 1856, infuriated Indians and was recognised as a factor causing the Indian Rebellion (1857-58), the biggest Indian uprising against British rule.  The word Awadh is inherited from the Sanskrit word Ayodhya meaning "not to be warred against, irresistible”

 

After centuries of dispute and court cases – now stands a very majestic temple at the very place where Sree Ramapiran was born – the Rama Janmabhoomi.  There is only one by name Sri Rama, born in the lineage of Ikshwaku.  He is totally balanced, one in complete control of His words, thoughts and deeds; a man of great valour ~ a person of steadfast character and radiant countenance – Lord Sree Rama

The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’.  In the immortal Ramayana, there are learning of life ….. For the Universe, Sri Rama and Sita are the Ideal persons.  Sri Rama is all pervading principle of Truth, character, steadfastness, sincerity, valour, skill, correctness, just, compassionate, righteous and more.    

On the day of Sri Rama Navami, there will the purappadu of Sri Rama in Hanumantha vahanam later in the evening.  Mere chanting of His name [Sri Rama Namam] will bring us all good things and prosperity.  

श्री राम राम  रामेति रमे रामे मनोरमे ।

सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥ 

                                   Meditate again and again the divine name of Rama  - mind gets absorbed in the divine consciousness of Rama, it is transcendental and is capable of relieving all evils, giving us all prosperity. 

Sree Ram Navami 2025 holds special meaning for millions of devotees across the globe. This year, the festival not only marks the birth of Lord Rama, but it also comes at a time when the grand Ram Temple in Ayodhya nears its completion—an event long awaited and deeply symbolic for many. With the temple’s stunning architecture almost ready, the celebrations are expected to be more heartfelt, grand, and spiritually enriching than ever before.   Rama Navami  falls on the ninth day of the bright half (Shukla Paksha) of the Chaitra month, and in North India, the  auspicious time for worship, known as the Madhyahna Muhurat, is expected between 11:00 AM and 1:30 PM IST.  However,  timings can differ based on geographical location,  and the sampradhayam.   What makes this year even more historic is the recent installation of the majestic Shikhar (pinnacle) at the Ram Temple in Ayodhya. A special consecration ceremony was held on April 3, 2025, to honor the main spire and six others within the temple complex. This moment marks a major milestone in a dream that’s been cherished for generations. Naturally, Ayodhya is expected to see record pilgrim turnout and vibrant, large-scale celebrations this Ram Navami.

Devotees celebrate Ram Navami through fasting, prayers, and devotional singing. Many choose fasting  until the midday puja, offering flowers, fruits, and sweets to Lord Rama, Goddess Sita, Lakshmana, and Hanuman. Recitations from the Ramayana ithihasa, Divyaprabandha pasuram, slogas, aarti, and the sharing of prasad are integral parts of the rituals. Across towns and cities, processions known as Shobha Yatras and dramatic performances of Ram Leela bring communities together in joyful devotion.

Uthsavam for the Maryada Purush ~ Emperor of Kosala Kingdom is now on  at Thiruvallikkeni and other divyadesams.  Today evening there would be grand Hanumantha vahana purappadu. 

 
~adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6.4.2025
 










  

  

Tuesday, December 10, 2024

flowing river in Chennai ~ no, Thiruneermalai

 


 

flowing river, green trees, hills ~ oh what a scenery ? - it is namma Chennai – taken in 2017  from Azhwar malai @ Thiruneermalai ..




[no river this ... water in the depth in hills quarried by blasting]

Friday, October 18, 2024

Thula Sankramana Punniya Kalam 2024

Today 17.10.2024 is significant .. .. Pournami  pirappu – Thula sankramana punya kalam;  Aippaisi pandigai – the month where we celebrate the birth of Muthal Azhwargal and our great Acaryan Swami Manavala Maamunigal.



இன்று சிறப்பான நாள் - ரேவதி நக்ஷத்திரம் - முழு நிலவாக சந்திரன் பவனி வரும் பௌர்ணமி நன்னாள்.  இன்று துலா ஸங்க்ரமண புண்ய காலம்.    துலா மாசம் ஒரு சிறப்பான மாதம்  - துலை (இராசியின் குறியீடு:  துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள்.

ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி - ஆகாயத்தில் க்ரஹங்கள் ஸஞ்சரிக்கும் 360° வட்டப் பாதையை 30° கொண்ட 12 பகுதிகளாகப் பிரிப்பர். சித்ரா நக்ஷத்ரம் நிற்கும் புள்ளியை துலா ராசியின் தொடக்கமாக வைக்கப்படுகிறது.   புண்ய காலங்களில் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் முதலியவற்றைச் அவசியம் செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. செய்தால் மற்ற நாட்களில் கிடைப்பதை விட அதிக புண்யத்தைத் தரும்.  ஸூர்யன் வருடம் தோறும் 6 மாதம் வடக்கு நோக்கி நகருவதை உத்தராயணம் என்றும் 6 மாதம் தெற்கு நோக்கி நகருவதை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.  ஸூர்யனின் இந்த நகர்வினால்  தான் ருதுக்கள் அதாவது பருவ காலங்கள் அமைகின்றன. பருவ காலங்களின் அடிப்படையில் தான் விவசாயம் முதலியவை நடந்து மக்களின் வாழ்க்கையின் பல சிறப்பம்சங்கள் அமைகின்றன.  உத்தராயணம் ஆரம்பித்தவுடன் பாரதத்தில் குளிரும் இரவு நேரமும் குறைந்து வெளிச்சத்தின் காலம் கூடுகிறது. இதன் மூலம் செடிகொடிகளும் அவை மூலம் அனைத்து ஜீவராசிகளும் ஊட்டத்தைப் பெறுகின்றன.  

ஆகவே உத்தராயணத்தின் தொடக்கத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குவது இயற்கையே.  இந்த மாதத்தில் திருக்காவேரியில் புனித ஸ்னானம் செய்வது விஷேஹஸம். காவேரியின் பெருமை புராணங்களில் சொல்லபட்டிருக்கின்றது, அதில் ஐப்பசி துலா ஸ்நானமும் உண்டு.  ஶ்ரீரங்கத்தில், மற்ற மாதங்களில் வடதிருக்காவிரியில் (கொள்ளிடம்) இருந்து நன்னீர் கொணர்ந்து அரங்கனுக்கு திருமஞ்சனம் கண்டருள, இந்த துலா மாதத்தில் மட்டும் தென்திருக்காவிரியில் இருந்து தீர்த்தம் தங்க குடத்தில் கொணர்வர்!



The chants of ‘Jai Jai Maatha, Cauvery Maatha’ and other devotional callings filled the morning air at Talacauvery and the rituals were led by priests.  The chants ‘Ukki Baa Cauvery’ broke the morning mist at Talacauvery as the sacrosanct event of Cauvery Tula Sankramana was witnessed by thousands of devotees.  The holy water gushed out from the ‘Kundike’ at 7.41 am, a minute later than the predicted time. Rituals followed the holy event and the temple towns of Bhagamandala and Talacauvery flourished with devotion on Thursday.  

The roads leading to Bhagamandala and Talacauvery were flooded with devotees from midnight hours even as hundreds of devotees dressed in traditional Kodava attire marched barefoot to the temple from Bhagamandala. A few hundreds of  devotees  carried out ‘padayatra’ from Virajpet and the temple towns were witness to the endless devotions from thousands of devotees. Thousands  took a dip in the holy water even as arrangements were in place to distribute the holy water to the gathered devotees.

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனது பரத்துவத்தை அறுதியிட்டு உரைப்பவர் பக்திசாரர்.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதி பாசுரம் :  


தமராவார்  யாவருக்கும் தாமரை  மேலாற்கும்

அமரர்க்கும் ஆடரவர்த்தாற்கும் - அமரர்கள்

தாள்  தாமரை  மலர்களிட்டிறைஞ்சி, மால்வண்ணன்

தாள்தாமரை   அடைவோமென்று.

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே மிகவும் உயர்ந்தவன்.  அந்த கரியமேனியனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்  பல்வேறு மணம் கமழும் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி  அத்திருவடித்தாமரைகளையே  அடைவோமென்று பக்தராயிருக்குமவர்கள் -  திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்,  ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும், நித்யஸூரிகளுக்கும் மற்றுமெல்லார்க்கும்  மேற்பட்டவராவர். அத்தகைய எம்பெருமானை அனுதினமும் வணங்குவோர்க்கு எல்லா நலன்களும் தானே அமையும். 

Here are some photos of Sri Parthasarathi Perumal siriya mada veethi purappadu on the occasion of Pournami & Thula Sankramana Punya kalam this evening.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.10.2024.

  









Monday, July 22, 2024

Ganga Aarathi at Varanasi - Kasi

 

Enchanting Ganga harathi @ holy Varanasi. Harahar Mahadev



Ayodhya Sarayu glitters

 

 

Ayodhya Sarayu glitters  ~  laser show !!




Sandhya Vanthanam (Maathyahniham) - "பஸ்யேம ஸரதஸ்ஸதம்; ஜீவேம ஸரதஸ்ஸதம்;"

 

மாத்யாஹ்நிஹம் -  இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்து 

"பஸ்யேம ஸரதஸ்ஸதம்; ஜீவேம ஸரதஸ்ஸதம்;"

 

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக !

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக !!

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக !!

 


Sri Rajappa doing Sandhya vanthanam (on boat) travelling at Triveni Sangamam (Ganga Yamuna Saraswati rivers)

22.7.2024

Monday, August 21, 2023

Panoramic view of Hardiwar : Hari-ki-pauri

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களின் ஹரித்வாரும் ஒன்றும். மேலும் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் ஹரித்வார் நுழைவாயிலாக விளங்குகிறது.  மிக புண்ணிய நதியான கங்கை மலையிலிருந்து தோன்றி இங்கே ஹரித்துவாரத்தில்  சமவெளியை தொடுகின்றது. 

 

"Ayodhyā Mathurā Māyā Kāśī Kāñcī Avantikā

Purī Dvārāvatī caiva saptaitā mokadāyikā" – Garua Purāa I XVI .14 

Ayodhya, Mathura, Haridwar, Kasi, Kanchi, Avantika and Dwaraka are the seven holy places… .. Haridwar is mentioned here as Maya !! – mayapuri.   The legendary King, Bhagiratha, the great-grandson of the Suryavanshi King Sagar through his unstinted  penance,  brought the river Ganges down in Satya Yuga, for the salvation of 60,000 of his ancestors from the curse of the saint Kapila. ,   Sriman Narayana left His footprint on the stone that is set in the upper wall of Har Ki Pauri, where the Holy Ganges touches it at all times.

Haridwar came under the rule of the Maurya Empire (322–185 BCE), and later under the Kushan Empire (c. 1st–3rd centuries).   Haridwar is holy, peaceful, scenic, beautiful Haridwar has Ganga flowing through. A great sight and a holy place for bathing – on the foothills of Himalayas, it has ashrams and a very pious ambience enveloping all over.

The ‘Panch Tirth’ or the five pilgrimages located within the periphery of Haridwar, are Gangadwara (Har Ki Pauri), Kushwart (Ghat), Kankhal, Bilwa Tirtha (Mansa Devi Temple) and Neel Parvat (Chandi Devi).  



A panoramic view of Har-ki-paudi and Ganges at Haridwar taken way back in 2012 with Canon Powershot As1100

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2023 

Saturday, August 19, 2023

Acaryan Swami Aalavandhar sarrumurai 2023

Very important Pre-script .:  A post on sarrumurai vaibhavam of renowned Acarya – other than name this crime thriller has no relevance – yet for a change posting something on this murder that shook Madras in this post – hope my mature readers would not consider this a Crime !! 

Crime stories attract people.  Two old murder cases have not faded from Madras’ collective memory. One involved C. N. Lakshmikanthan, a brazen practitioner of scurrilous journalism, and the other, a small-time businessman and reportedly a womaniser of Casanova proportions.  The second murder was a sensational headline in The Hindu in Aug 1952 !!     

 $##$#$#$#$



Not all  would know or have  visited Kattumannarkoil  a panchayat town and taluk headquarters in Cuddalore district, extending over an area of 19.425 km2. The town is situated along 25 km South West of Chidambaram and lies on the Chidambaram - Coimbatore Highway and 25 km East of Srimushnam and a similar distance north-east of Gangaikonda Cholapuram. The entire road route from Sethiathoppu to Kattumannarkoil runs alongside the Veeranam Lake.   

Map pic from twitter page of TN Geography

1.8.2023  ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். **ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**இன்று கஜேந்திர மோக்ஷம் கூட.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி, யானையின் துயரம் தீர அதனை முதலையிடம் இருந்து காப்பற்றிய வைபவம் கொண்டாடப்பட்டது.  இந்த சுப தினத்தில்  நம் சம்பிரதாய ஸ்தாபகர் -   ஓராண் வழி ஆச்சார்யர்களில் பிரபலர் ஸ்வாமி  ஆளவந்தாரின் சாற்றுமுறை.  ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், நமக்கு அளித்த அற்புத காவியம் "ஸ்தோத்ர ரத்னம்" - நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைத்துள்ள  பழமையான க்ரந்தம் இதுவே. .. ..     

சோழர்  குலம்  (Chola dynasty)  பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் முக்கிய வீர மன்னர் பரம்பரை.  நெற்பயிர்கள் அதிகமாக விளைந்த நாடு  எனவே 'சோழ வளநாடு சோறுடைத்து’  என்பது பழமொழி.  சோழ அரச பரம்பரையில், அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரிவர்மன் முதலாம் இராசராசசோழன்   புகழ் பெற்ற மன்னர்.  இவர் இடைக்கால சோழ அரசர்.  இவ்வரசு பரம்பரை :   விசயாலய சோழன்; ஆதித்த சோழன்; பராந்தக சோழன் ; கண்டராதித்தர்; அரிஞ்சய சோழன்; சுந்தர சோழன்; ஆதித்த கரிகாலன்; உத்தம சோழன்; இராசராச சோழன் (மாமல்லன்); இராசேந்திர சோழன்..

                                           மதுரையும், ஈழமும் வெற்றி கொண்ட  கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .  பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்  பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.  போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.  இவ்வரசன்  தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். 

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.  1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது. 

அமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார்.  அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார்.   இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை.    அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !! 

நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர்.    ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.  நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  நம்முடைய தர்சனத்தில்ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர்.   




நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் ஆக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். யமுனைத்துறைவர்  தர்க்க சாஸ்த்ரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வனை தோற்கடித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவருக்கு சிஷ்யரானார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.   ராஜ மஹிஷியும் அவருக்கு சிஷ்யை ஆனாள். ஆளவந்தாருக்கும் பாதி ராஜ்யம் கிடைத்து அவரும் அதை நிர்வாகம் செய்யலானார்.

                    வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.   

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி  மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இவர் அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்,  ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி -  ஆகியவை  வடமொழி நூல்கள்.   

ஆளவந்தார் தம் பக்தி மிகுதியுடன் எம்பெருமானை ஸ்தோத்திரம் செய்யும் பாசுரம் ஒன்று இங்கே : - அவர்தம் ஸ்தோத்ர ரத்னம் கிரந்தத்தில் இருந்து : - லோக விஷயங்களில் தமக்கு இருக்கும் வெறுப்பை கூறி - அவற்றை தம்மிடம் இருந்து நீக்கி ரக்ஷித்து அருள வேணுமென்னு பிரார்திக்கின்றார்.

தேஹம் ப்ராணாந் சுகமஶேஷாபிலக்ஷிதம்

நசாத்மாநம் நாந்யத் பிமபி தவ ஶேஷ்த்வ விபவாத்

பஹிர்பூதம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா

விநாசம் தத் ஸத்யம் மதுமதன விக்ஞாபநமிதம் 

எம்பெருமானே ! பரம்பொருளே !  -   உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை என்பது ஆளவந்தாரின் அற்புத பிரார்த்தனை.





In recent past – for  two years (2020 & 2021) there was no  purappadu on this thiruvavathara uthsavam due to Corona.   Last year 2022, it was Acaryan purappadu with   Sri Parthasarathi Emperuman – this time, since it was Gajendra moksham, it was Garuda sevai purappadu for Sri Parthasarathi.

யத்பதாம் போருஹத்யாந வித்வஸ்தாஸேஷ கல்மஷ |

வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம்   நமாமிதம் ||  

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவை காட்டி சத்தை அருளி, எல்லா அஞ்ஞானங்களையும் விளக்கி, என்னை ஆஸ்ரயித்த யாமுநாசார்யாரின் திருவடிகளை த்யானிக்கிறேன்! 

~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18/8/2023

PS :  now something about the murder case referred at the start – that of a  man in his early 40s, who  worked as sub-divisional officer at the Army Headquarters at Avadi, a man from Hindu Vysya community, who after discharge ventured into plastics business, which caught fancy those days  The articles were colorful, light, and not so expensive. His friend  Cunnan Chetty, ly gave him a small space in the frontage of his pen company for him to display the goods and conduct his business. Gem & Company drew many customers and it seemed a fine venue of business for the novelty of the day. Alavandar also had another line of business. Selling saris on installments. The installment business was something new in Madras during that period. 

ஆளவந்தார் கொலை வழக்கு  தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு. ஒரு   பேனா வர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை என அவரது முதலாளி எஸ்பிளனேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந்திய-சிலோன் விரைவுத் தொடருந்தின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் தலையற்ற உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.   கொலையுண்ட ஆளவந்தாருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுள் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த தேவகி மேனன். தேவகி பின் அவரை விட்டு விலகி  பிரபாக்கர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆளவந்தார் திருமணத்துக்குப் பின்பும் தேவகியை தொடர்ந்து  வற்புறுத்தி வந்தார். இதனால்  தேவகியும் பிரபாக்கரும் இணைந்து ஆளவந்தாரைக் கொலை  செய்தனர்.  இந்த பரபரப்பு வழக்கில்  நீதிபதி - குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆளவந்தாரை தண்டிக்கவே  கொலை செய்தனர் என  குறைவான தண்டனையே வழங்கினார். பிரபாக்கருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தேவகிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.