To search this blog

Showing posts with label ஸ்ரீவைஷ்ணவம். Show all posts
Showing posts with label ஸ்ரீவைஷ்ணவம். Show all posts

Wednesday, January 18, 2023

Our refuge Emperuman - Thai Ekadasi 2023 - சார்வு நமக்கென்றும் சக்கரத்தான்

சார்வு என்றால் என்ன !!??!!



குற்றவியல் நடைமுறை விதிகள், குற்றவியல் சட்டங்களில் மிக முக்கியமானதாகும். இந்த சட்டத்தில் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்றங்கள் செயல்படும் நேரம், சாட்சிகள் பற்றிய விவரங்கள், அழைப்பாணை சார்வு செய்யப்படும் முறை, காவல்துறையினர் புலனாய்வு, வழக்கு தொடுக்கும் முறை போன்றவற்றுக்கான நடைமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. விதி - 11 - மருத்துவ சாட்சிகளுக்கு எப்படி அழைப்பாணையை அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. மருத்துவர்களுக்கு அழைப்பாணையை நேரில் சார்வு செய்ய வேண்டும். இந்த தகவலை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவர் இல்லையென்றால் மாவட்ட மருத்துவ அதிகாரி மூலமாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அழைப்பாணையை சார்வு செய்ய வேண்டும்.   

சார்வு,  எனும் பெயர்ச்சொல்லுக்கு :  இடம், ஒட்டுத்திண்ணை, புகலிடம், ஆதாரம், துணை, வழிவகை, பற்று, அயலிடம், ஒருதலைப்பட்சம் - என பல  பொருட்கள் உள்ளதாக தமிழ் அகராதி தெரிவிக்கிறது.   

A refuge is a concept in ecology, in which an organism obtains protection from predation by hiding in an area where it is inaccessible or cannot easily be found. 

In Buddhism, refuge or taking refuge refers to a religious practice, which often includes a prayer or recitation performed at the beginning of the day or of a practice session. Since the period of Early Buddhism until present time, all Theravada and mainstream Mahayana schools only take refuge in the Three Jewels (also known as the Triple Gem or Three Refuges)  which are the Buddha, the Dharma and the Sangha. However,  Vajrayana school includes an expanded refuge formula known as the Three Jewels and Three Roots. Taking refuge is a form of aspiration to lead a life with the Triple Gem at its core. In early Buddhist scriptures, taking refuge is an expression of determination to follow the Buddha's path, but not a relinquishing of responsibility.  

In 1880, Henry Steel Olcott and Helena Blavatsky became the first known Westerners of the modern era to receive the Three Refuges and Five Precepts, which is the ceremony by which one traditionally become Buddhist.  .. .. and there is - UNHCR, the UN Refugee Agency,  a global organization dedicated to saving lives, protecting rights and building a better future for refugees, forcibly displaced communities and stateless people.  The refugee crisis continues to swamp modern World.




Here is the concluding pasuram of Moondram thiruvanthathi of Sri Peyalwar.   

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும், - காரார்ந்த

வானமரும்  இன்னிமைக்கும் வண்டாமரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு.  

எம்பெருமானே பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று  ஆழ்வார் தலைக்கட்டுகிறார்.   எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - திருவாழியைக் கையிலே உடையவன்,  குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற மலைபோன்ற திருமார்ப யுடையனுமானவன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த   எம்பெருமானால்  ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்,  மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே   நிலைத்து நிற்கக் கூடியதான மின்னல்போல  விளங்குகின்றவளாய்,  அழகிய தாமரைப் பூப்போன்ற நீண்ட திருக்கண்களையுடையளாய்,  தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான பெரிய பிராட்டியார் தான் நமக்கு எப்போதும் சரணம், என அறுதியிட்டு உரைக்கின்றார் நமது தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.

Lord Krishna – the presiding deity of Thiruvallikkeni Sri Parthasarathi is our refuge who protects and takes us to salvation.  Today 18.1.2023  is Thai Krishnapaksha Ekadasi and at Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman had periya mada veethi purappadu.  Here are some photos of the purappadu at Thiruvallikkeni divyadesam.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18th Jan 2023.











Sunday, January 15, 2023

Sing only in praise of Emperuman !! - மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்

இன்று 15.1.2023  பொங்கல் நன்னாள் - இது போன்ற பண்டிகை விடுமுறை தினங்களில் தொலைக்காட்சிகளில் பட்டி மன்றம் / கவிதை மன்றம் நடக்கும்.  பலர் வார்த்தை தோரணங்களாலும் தலைவர்களை வரம்பின்றி புகழ்வதன் மூலமும் - கை தட்டலும் பரிசும் பெற முயலுவர் !!  கவிபாடினார்க்கு ஸகல சிறப்புகளையும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் எனும்படியான சாதாரண மனிதர்களை புகழ்வதில் என்ன பயன் என்று யோசிப்பார் உண்டோ !!

 


சங்க காலத்தில் மற்றும் பண்டைய களங்களில் ஏதோ புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து படி, முத்தும், குதிரைகளையும், பரிசுகளையும் பெற்றதை போல ஒரு எண்ணம் சில பத்திரிகைகளும் சினிமாக்களும் செய்து விட்டன !!  உண்மை அப்படி இல்லை !! மரபுக்கவிதை சிறப்பானது - இலக்கண பிழையில்லாமல் கவிதை எழுதுதல் கடினம்.  புதுக்கவிதை மரபு சார்ந்தது அல்ல.  சமயங்களில் - ஒரு வரியை இரண்டு தடவை வேறு தொனியில் படித்தால் கை தட்டல் விழும் !!  . வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவை வேறுபடும்.  சங்க காலத் தமிழ் மன்னர்கள் வெறும் புகழ்ச்சிக்கு மயங்கி கிடந்தவர்கள் அல்லர்.  . அரசர்கள் அறம் என்னும் நேர்வழியில் இருந்து தவறிவிடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. புலவர்கள் இனிய கவிதை நயம் பொருந்திய சொற்களால் கருத்துகளை உணர்த்தியுள்ளனர்.  

சங்க நூல்களில் ஒன்றான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பதிற்றுப்பத்து.  இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. தற்போது உள்ள எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இவற்றை வரலாற்று நூல்களாகவும் கொள்ளலாம். சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.  

தமிழ் இலக்கணம் தொல்காப்பியத்தில் சிறப்பாக குறைக்கப்பட்டுள்ளது :  ‘எழுத்து’ ‘சொல்’ ‘பொருள்’ என்று மூன்று நிலையில் இலக்கணத்தை விவரிக்கின்றார் தொல்காப்பியர்.  உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் இப்படி; இவற்றின் தன்மை, கால அளவு, உச்சரிப்பு, எது எது எந்தெந்த கூட்டணியில் வரும், எப்படிப் புணரும் இதைப் பற்றியெல்லாம் அலசுவது ‘எழுத்திலக்கணம்’. எழுத்துக்கள் சேர்ந்து ‘சொல்’ ஆகும். சொற்களின் வகை (பெயர், வினை, இடை, உரி – நான்கு!) அவற்றின் உருவாக்கம், பண்பு, பயன்பாடு கூறுவது ’சொல்லிலக்கணம்’.  சொற்கள் சேர்ந்து பாடலாகவோ, வாக்கியமாகவோ ‘பொருள்’ தரும். - இது ‘பொருளிலக்கணம்’.  

கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார்.  இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் :  

1.       இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது

2.       திரிசொல் - படித்தவர்க்கே புரிவது

3.       திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்

4.       வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்

 




பக்தி இலக்கியம் மிக சிறப்பானது - அதிலும் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்த பாசுரங்கள் பக்தியை சிறந்த இலக்கணத்தில் ஆழ்த்தி வழங்கப்பட்டன.  கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியானவர்களை கவிபாடுவதில் என்ன பயனுண்டு என கேட்கும் ஸ்வாமி  நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் இங்கே :  

என்னாவது  எத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்? ,

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,

தன்னாகவே  கொண்டு சன்மம்  செய்யாமையும் கொள்ளுமே.  

நல்ல வார்த்தைகளை கோர்வையாக அமைத்து கவிதைகள் இயற்றும்  பண்டிதர்களே! - சொற்ப காலமே நிலையற்று இந்த புவியில்  வாழும்  மனிதர்களை புகழ்ந்து  கவிபாடி - அவ்வார்த்தைகளால் நீங்கள் அடைகின்ற  செல்வம் எவ்வளவு நாட்கள் தங்கும் ?   அது உங்களுக்கு போதுமானது அல்ல !!  மணிமகுடத்தை உடையவனான  விண்ணவர் வணங்கும் தேவாதி தேவன் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை  கவி படி வணங்கினால், அவ்வெம்பெருமான்  உங்களை  தனக்கு அடிமையாகவே கொண்டு இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்!  அதை விட சிறந்த செல்வம் நினைப்பதற்கும் உள்ளதோ !!  

Happy Pongal Festival  2023 wishes to all  - and some photos from Swami Nammazhwar sarrumurai at Thiruvallikkeni – Azhwar Sri Parthasarathi Perumal purappadu on 12.6.2022.  

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.1.2023 














Tuesday, January 10, 2023

Sri Andal Neeratta Uthsavam 6 - 2023 : “மாலே மணிவண்ணா "

Sri Andal Neeratta Uthsavam 6 - 2023 : “மாலே மணிவண்ணா "

 

At Thiruvallikkeni divyadesam today [10th Jan 2023] is day 6  of Andal Neeratta Uthsavam.    

 

மஹாபாரதம் ஒரு அற்புத காவியம்.  தூது சென்ற கண்ணனின் ஏற்றம் விவரிக்கும் இதிஹாச புராணம். சந்திர வம்சத்து மன்னன் யயாதிக்கு தேவயானி, சன்மிஷ்டை என இரு மனைவிகள். தேவயானிக்கு இரு மகன்கள். அதில் மூத்த  மகனின் பெயர்  யது.  போஜர்களும், விருஷ்ணிகளும்.  யது வம்சத்தில் வந்ததால் யாதவர்கள் என அழைக்கப்பட்டனர். விருஷ்ணியின் பரம்பரையில் வந்த "ஆகுகன்"  என்ற மன்னனுக்குத்  "தேவகன்", "உக்ரசேனன்" என்ற இரு மகன்கள் இருந்தனர். தேவகனுக்கு நான்கு மகன்களும் , ஏழு மகள்களும் இருந்தனர். அதில் கடைசிப் பெண்ணே மாதவம் செய்தாலும் கிட்டாத  கண்ணனை  திருவயிற்றில் பெற்ற  மாதரசி   தேவகி.  தேவகியை யது குலத்தில் வந்த வசுதேவர் மணந்தார்.    

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பல அற்புத திருக்கோவில்கள்.   துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு  துவாரகாதீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இவ்வாலயத்தின் பிரதான வாசலுக்குப் பெயர் சுவர்க்க துவாரம்.  பல்லாயிரக்கணக்கான பேர்களால் அர்ச்சிக்கப்படுபவன் கண்ணன்.

பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக் கொண்டது.  ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில்  ஆறாம் நாள் இன்று  (10.1.2023) .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் =   “மாலே மணிவண்ணா மார்கழி  நீராடுவான்  ” !!  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவன்; நீலமேக ஷ்யாமளன்.  அவனிடத்திலே  தாங்கஓல்  அனுஷ்டித்து வந்த பாவை நோன்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் அருளும் படி ஆண்டாள் வேண்டும் பாடல் இன்றைய பாசுரம்.  

ஹ்ருஷீகேசன்; அச்யுதன்; கேசவன்; கோவிந்தன்; மதுசூதனன்; ஜநார்தனன்; மாதவன், கோவிந்தன்,   கோபாலன், கோவர்தனன்,  இராதா கிருட்டிணன்-  இன்ன பிற !!  ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக்  கண்ணனை மணிவண்ணன் என்று அழைக்கின்றார்.  பாவை நோன்பு காணும் பெண்கள் கண்ணனிடம் பறை மட்டுமல்ல ,  சின்னச்சின்ன பொருட்களை  விழைகிறார்கள்.  அதுவும், கண்ணனுடன் சேர அவர்கள் மேற்கொண்ட நோன்பிற்காகவே!

எம்பெருமானே !, பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று நோன்பு செய்தவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள்.  நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம்.  இத்தகைய நோன்பு நோற்பதற்க்கு  இந்த ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று  அவனிடமே யாசிக்கிறார்கள்.. திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்; நெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்; புறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்?  ஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள். இப்படி இவர்கள் முறையிட்டபடியே -  தன்னுடைய சின்னங்களையெல்லாம் எம்பெருமான் கொடுத்து அருளினான்.   

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் *

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*

பால்அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே*

சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே*

கோல விளக்கே கொடியே விதானமே *

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.   

மாலே என விளித்து - பக்தர்கள் தம் பக்கல்  வியாமோஹமுடையவனே! என்பதை உணர்த்துகிறார்.  எங்கள் எம்பிரானே,  நீலமணி போன்ற வடிவை உடையவனே! - முன்னொரு நாளிலே  அண்டம்  முழுதும் ப்ரளயத்தால் அகப்பட்ட காலத்திலே,  ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே!   மார்கழி நீராட்டத்திற்காக உத்தமபுருஷர்களான ஆசார்யர்கள் அநுட்டிக்கும் முறைமைகளில் வேண்டியவற்றை உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம்.    பூமியடங்கலும்  நடுங்கும்படி ஒலிசெய்யக் கடவனவும்ஆன பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஒத்திருப்பனவுமான சங்கங்களையும் மிகவும் இடமுடையனவும்  பெரியனவுமான பறைகளையும் திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் மங்கள தீபங்களையும்,  த்வஜங்களையும் மேற்கட்டிகளையும்  எங்களுக்கு நீ ப்ரஸாதித்தருளவேணும்,  என முறையிடுகிறார் நம் ஆண்டாள்.

                                           Andal prays to the Lord who slept  as a child on a fig leaf during Mahapralaya, the great deluge.  She appeals to that Lord holding the milky white conch that would reverberate,  to hear our aspirations, grant that wide drum, persons who would sing pallandu, bright lamp, festoon and flags and more as her group has performed the margazhi rites as decreed by the elders. Here are some photos of Andal neeratta uthsava  purappadu this morning. 

 
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.1.2023.  

Monday, January 9, 2023

Thiruvallikkeni Sri Andal Neeratta Uthsavam “ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்"

Sri Andal Neeratta Uthsavam 4 2023 - “ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்"



பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக் கொண்டது.   ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில்  நான்காம் நாள் இன்று  (9.1.2023) .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் =   

“ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர” !!


பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக தேவகிக்கும் வாசுதேவருக்கும் - கம்சன் சிறைதனிலே  அவதரித்தது  ஒரு அற்புதம் எனின், அன்று கொட்டும் மழையிலே, யமுனை ஆறு வழி விட, ஆதிசேஷன் குடை பிடிக்க, கோகுலம் சென்று  யசோதா நந்தகோபரிடம் வளர்ந்தது ஒரு அத்புதம். தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான்.   கோதை பிரட்டி தனது திருப்பாவையிலே செப்பியது :  ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

 Of the incarnations of Sriman Narayana,  His descent in human form as Krishna has been glorified as the most accessible and endearing.  Among the Azhwargal, Sri Goda devi [Kothai Piratti @ Andal] is unique and her immortal hymns of Thiruppavai and Nachiyar Thirumozhi, do stand out.  Thiruppavai is on ceremonial austerity [Pavai nonbu] and her singleminded devotion in service to the Lord  is explicitly abundant.  



During the month of Margazhi, Thiruppavai is recited and to each day is attributed one pasuram.  At Thiruvallikkeni divyadesam today [9th Jan 2023] is day 4 of Andal Neeratta Uthsavam.  Here is pasuram 25 of Thiruppavai : 

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்*

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

 

Sri Andal praises the Lord who was born in anonymity as Devaki’s child and overnight moved out of incarceration to grow incognito as Yasodha’s child at Gokulam.  As He grew, he foiled the intent of depot Kamsa.  Andal with her group  pays obeisance  and beseeches upon that Lord to grant measureless wealth and blessed service to Him – the only thing which is capable to ending sorrow and providing eternal rejoice. 

Let us all pray to Goda Devi whose hymns offer us the right guidance and intent to look to the lotus feet of Lord.  Here are some photos taken during today’s morning purappadu. 

 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar
9.1.2023.
** pasura vilakkam - with pranams and thankful gratitude to Sri Srinidhi Akkarakkani Swami.. 









Thursday, January 5, 2023

Thiruvallikkeni thirukudai kainkaryam 2023 - Ajay

 
திருவல்லிக்கேணி புண்ணிய பூமி .. ஸ்ரீபார்த்தசாரதியின் தாளிணைகளில் கைங்கர்யம் செய்வோர் பலர், வயசு வித்தியாசம் இல்லாமல் முதியோர் முதல் பற்பல இளைஞர்கள் பல்வேறு கைங்கர்யங்கள் செய்கின்றனர்.


 
இப்போது இராப்பத்து  உத்சவம் .. தினமும் மாலை பெரிய மாடவீதி புறப்பாடு.  எம்பெருமானுக்கு  திருக்குடை கைங்கர்யம் சற்று கடினமானது அதுவும்  காற்று பலமாக அடிக்கும்போது குடை போடுவது கடினமானது.



 
திரு அஜய் ஸ்ரீவத்சாங்கன்  [திரு பிரவீன் புதல்வர்] குடை மற்றும் ஸ்ரீபாதம் கைங்கர்யம் சிறப்புற செய்து வரும் இளைஞர்.  மிக அமைதியானவர்.  எம்பெருமான் சேவை மட்டுமே பிரதானம் என உள்ள இவர் போன்றவர்கள் நீடுழி வாழ அவ்வெம்பெருமானையே வேண்டுகிறேன். 
 
Couple of photos taken during Irapathu day 4  purappadu at Thiruvallikkeni this evening  .. .. seen in the photo among others  Ajay Srivathsangan doing thirukudai kainkaryam,
 
5.1.2023 

Tuesday, December 27, 2022

Patnam Koil - "Sri Rama Krishna Srinivasar" 2022 - ಪಲ್ಲವಿ || ಪಿಳ್ಳಂಗೋವಿಯ

Île-Royale was a French colony in North America that existed in 18th century !   The siege of Louisbourg took place in 1745 when a New England colonial force aided by a British fleet captured Louisbourg, the capital of the French province of Île-Royale  !  what could be its connection to Chennai and today’s Pagal pathu uthsavam post ? 




The 1748 Treaty of Aix-la-Chapelle, ended the War of the Austrian Succession. The two main antagonists in the war, Britain and France, opened peace talks in the Dutch city of Breda in 1746. Agreement was delayed by British hopes of improving their position; when this failed to occur, a draft treaty was agreed in  April 1748. A final version was signed on 18 October 1748 by Britain, France, and the Dutch Republic.  Among many items in Agenda was :   Britain and France exchange Louisbourg on Île-Royale for Madras in India !! 

When the French occupied Madras in 1746 and returned it to the English in 1749 in exchange by the Treaty of Aix-la-Chapelle, the English flattened a part of Black Town in order to have a clear field for fire in the event of a future attack. In 1773, the English erected 13 pillars along the flattened area of the Black Town and banned construction in any form between the pillars and the fort which would otherwise block the view of possible invaders. Soon a new township, known as the new Black Town, came up beyond these pillars and the old Black Town gave way to the Madras High Court. A thoroughfare was formed along the stretch between the pillars and the high court which later became the China Bazaar Road. 

During the colonial period, the area in and around Muthialpet was renamed as "George Town" by the British in 1911, in honour of King George V when he was crowned as the Emperor of India.  A statue of King George V still stands in front of Flower bazaar Police Station.  The city of Madras is less than 400 years old but areas like Thiruvallikkeni, Mylapore, Chintadripet, Egmore and more existed centuries preceding that .. ..  

The narrow, forgotten streets of Georgetown has many marriage halls and some beautiful temples – among them are the twin temples of Chenna Kesavar and Chenna Mallikeswarar – fondly called Patnam kovil.  It is stated that the present Patnam Kovil existed nearer the seashore ~ in the area where the Reserve Bank of India stands now…   it was razed by East India Co, which enraged the locals who agitated.  Later it was re-built in the present place, reportedly with the same building materials… !!    Besides the grant of the Council, Manali Muthukrishna Mudaliyar contributed 5,202 pagodas, and subscriptions from the congregation amounted to 15,652 pagodas. With this the work on the Chennakesava Perumal temple began in 1767, was completed in 1780. 

For  Srivaishnavaites – Adhyayana uthsavam is extremely significant as it offers golden opportunity of worshipping Emperuman, offering arulicheyal and more.  Pagal pathu is now on at all Divyadesangal and other temples  - on its culmination comes Vaikunda Ekadasi on 2.1.2023 followed by Irapathu uthsavam and Iyarpa Sarrumurai.  

Today  is day 5 of Pagal pathu uthsavam –  Muthal ayiram sarrumurai – arulicheyal goshti of Thiruchanda Virutham, Thirumalai, Thirupalliyezuchi, Amalanathipiran and Kanninum siru thambu.    At  Thiruvallikkeni it ie “Aeni Kannan thirukolam”   - at    Chenna Kesava Perumal Temple, it was uniquely Sri Rama Krishna Srinivasa thirukolam.  There is an image of the same thirukolam on the walls of temple too !!  

 


ಪಲ್ಲವಿ  || ಪಿಳ್ಳಂಗೋವಿಯ ಚೆಲುವ ಕೃಷ್ಣನ ಎಲ್ಲಿ ನೋಡಿದಿರಿ...  ರಂಗನಾ ಎಲ್ಲಿ ನೋಡಿದಿರಿ? 

Pillangoviya Cheluva Krishnana Elli NODidiri?

Ranganaa elli nODidiri rangana elli nODidiri 

nandagOpana mandiragaLa sandugondinali canda candada gOpa bAlara vrndA vrnadadali

sundarAngada sundariyara hindu mundinali andadAkaLa kanda karugaLa manda mandeyali

 


Where have you seen the beautiful Krishna playing with flute? Where have you seen Ranga (another name for Sri Krishna).  Maya Kannan may not be visible for our eyes and may not be in sight .. .. wise people realize that with lots of devotion, One can see Lord Krishna, Everywhere !!  

The keerthana here “Pillangoviya Cheluva Krishnana Elli NODidiri?” –  was written by Purandhara dhasar.  Purandhara dasa, a follower of Madhwacharya lived in 15th century and composed many keerthanas, widely referred as Pitamaha of Carnatic music in Kannada and considered incarnation of Saint Naradha.  

Born as Srinivasa nayaka, he was a wealthy merchant of gold, silver and jewellry but  gave away all his material riches to become a Haridasa,  a devotional singer who made the difficult Sanskrit tenets of Bhagavata Purana available to everyone in simple and melodious songs.   He formulated the basic lessons of teaching Carnatic music by structuring graded exercises known as Svaravalis and Alankaras, he introduced the raga Mayamalavagowla as the first scale to be learnt by beginners in the field – a practice that is still followed today.  Purandara Dasa is noted for composing Dasa Sahithya.  

Here are some photos of the most beautiful sarruppadi of Chenna Kesava Perumal as “Sri Rama Krishna Srinivasar”

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.12.2022