கிளிஞ்சின் முதல் சுட்டன சுண்ணாம்பு
தானும்
கிளர் புனலில் எழும் குமிழி நுரை கடாமும்
விளைந்ததனில் முதல் மாலுக்கு ஈயா வெல்லாம்
களைந்த மனத்தார் மற்றும் கழித்த வெல்லாம்
–பலன் கொடுத்த பிறகு மறுபடியும் அதே காம்பில் இருந்து விளைந்தவை
திருவரங்கனுடைய பாதுகையைப்
பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத் சுவாமி
பாடியதால் - கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது. இவர்
“சர்வ தந்திர சுதந்திரர்”, என்று போற்றப்படுகிறார்
Today 2.10.2025 is ‘ Thiruvonam ‘ in the
month of Purattasi ~ the day marking the sarrumurai of Sri Vedanthachar. Today is ‘Vijaya dasami’ too.
ஆசாரமாக இருப்பவர்கள் அருந்தும் நீர் முதல் உண்ணும் உணவு
வரை பல கட்டுப்பாடுகளை பின்பற்றுவர். இன்று நாம் பலர் சாப்பிடும்
தண்ணீர் பல வடிவங்களில் இருக்கும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு தான் வருகிறது. பெரிய
பிராண்ட் என பெயர் பெற்ற நிறுவனங்கள் சுத்தமான தண்ணீர் என்று அதீத விலைக்கு விற்பது
எல்லாம் கூட சுத்தமான தண்ணீரே இல்லை. இன்று நாம் நம் நதிகளை அழித்துவிட்டு பாட்டில்
தண்ணீருக்கு அலைந்துகொண்டு இருக்கிறோம். எங்கு சென்றாலும் ஏகப்பட்ட தண்ணீர் பாட்டில்களை
தூக்கிக்கொண்டு - உணவை தேடி அலைகின்றோம்.
சரியான உணவு பழக்கம்
இல்லாமையே பல உடல் உபாதைகளுக்கு காரணம். மூக்கு
முட்டச் சாப்பிட்டுவிட்டு, நடக்க முடியாமல் நடப்பதினால் நோய்களை பொதி சுமக்கிறோம். சரி - என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது ? - இதோ ஒரு பட்டியல் (முழுமையானதல்ல ! ஆசார்யர் கூறியவற்றில் ஒரு சில)
கொடியவர்கள் கண்
பட்ட சோறு; தீய்ந்துபோன சோறு; எச்சில், தும்மல் ஆகியவை பட்ட சோறு; நாய் போன்ற
விலங்கினங்கள் வாய் வைத்த சோறு; மனிதர்கள், பசுக்கள் முகர்ந்த உணவு; ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை இருந்த உணவு;
மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவற்றின் வாய் பட்டது .. .. …
இவை மட்டுமல்ல
!! :
அன்போடு பரிமாறப்படாத சோறு; அடுத்தவர்களின் தோட்டத்தில் இருந்து உரியவரின் அனுமதியில்லாமல்
பறித்தவை; கடையில் இருந்து வாங்கிவந்து கழுவாமல் சமைத்த காய்கறி; முறைகேடாகவோ, தீய
வழியிலோ சம்பாதித்த மற்றும் சம்பாதித்தநபர் கொடுக்கும்உணவு; நாவுக்குப் பொறுக்க முடியாத
சூடு- காரம் உள்ளவை !!!!!
எவை எவற்றை உண்ணக்கூடாது என சுவாமி வேதாந்தாச்சார் எழுதிய "ஆகார நியமம்" என்ற நூலின் சில வரிகள். பகவானுடைய அடியவர்கள் பகவத்பக்தியை வளர்ந்துக்கொள்ள ஸாத்விக ஆஹாரங்களையே
உட்கொள்ள வேண்டும். சில ஆஹாரங்களை விட்டே தீர வேண்டும். எவையெவைகளை விட வேண்டும் என்று
ஆசார்யர் 21 பாசுரங்களாலே காட்டியுள்ளார்.
இவற்றையெல்லாம் கடைபிடிப்பது
கடினம் எனும் நல்லோர் தங்கள் ஆக்கையின் வழி உழலலாம். நாம் நிறுவனத்தில் டை கட்டச்சொன்னால்
கட்டுவோம் ! - அதிகாரி நினைப்பதற்கு முன்பே கை காட்டுவோம் - ஆனால் நமது நல்வாழ்க்கைக்கு
நியமனங்கள் பற்றி கூறினால் உதாசீனம் செய்வோம் !!
இன்று 2.10.2025 புரட்டாசி திருவோணம். ஸ்ரீ தூப்புல் பிள்ளை என்ற
கவிதார்க்க்கிக சிம்மம் என்ற ஸர்வதந்திரஸ்வதந்தரர் என்ற ஸ்ரீமந் வேதாந்தாசாரியார் - 757 திருநட்சத்திரம் இன்று !
காஞ்சியில் திருத்தண்கா என்கிற திவ்யதேசம் 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி
எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர்
பெரியோர். அதற்கருகில் இருக்கும் உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில்
உதித்தவர் உயர் வேங்கட குருவான வேதாந்தாசாரியார்.!
‘தூப்புல்’ வேதாந்தாசாரியாரின் அவதாரஸ்தலம். 'தூப்புல்’
தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும். உபய
வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்] என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்
'வேதாந்தாச்சார்யர்’. நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன்
என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம். தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள்.
மும்மணிக்கோவை என்பது
பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா,
கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள்
அந்தாதி வடிவிலும் இருக்கும். ஸ்வாமி வேதாந்தச்சார் எம்பெருமான் மீது ஒரு மும்மணிக்கோவையை
அளித்துள்ளார்.
Sri Venkatanathan was
the amsam of “Thirumani” (bell). One day, Kidambi
Appular, Venkatanathan’s Maternal Uncle, took him to the
“Kalakshepam” of Guru Nadathur Ammal. On seeing Vekatanathan’s
“divya thejas” (brilliance), Nadathur Ammal stopped the Kalakshepam and asked
the boy to come on stage. Young Venkatanathan grew up to become an astute
scholar, a preacher of Srivaishnava siddhantam. Venkatanathan travelled
to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his
consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an
“Ashwattha” tree and recited the Garuda Mantram. He also
composed Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath,
Achyutha-sadakam, and many more literary gems in future. Swami was
well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the
title “Kavitarkikasimham”(A
lion among poets). Of his many skills, he
confronted a mason in building a well which is now seen at his thirumaligai at
Thiruvahindrapuram.
Swami
Vedanthachar lived a full and fruitful life for 102 years. In the
misfortune when Islamic invaders looted Thiruvarangam, alongwith Swami Pillai
Logachar, he emerged at the forefront in protecting our
sampradhayam. In the year 1369, he rested his head on the lap
of his son Kumara Varadhachariar and left his mortal coil. During his
lifetime, Swami lived in Karnataka for 12 long years in a place know as
Sathyagalam.
At Thiruvallikkeni
divyadesam, Azhwar / Acaryas would have purappadu with Emperuman on their
sarrumurai day.. Today being Vijaya
dasami, Sri Parthasarathi Emperuman had parvettai purappadu – kulathangarai,
then Vasantha uthsava mandapam (vanni mara parvettai here) – then Bandala
Venugopala St, TP Koil lane, Besant Road, TP Koil street and at South Mada St /
Thulasinga Perumal koil street corner –sthothra padal goshti sarrumurai. Here Swami Vedanthachar accompanied
Perumal with Ramanusa noorranthathi arulicheyal goshti.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.10.2025.
.jpg)









arputhamana post - Lakshmi Desikan
ReplyDeletewow details - Ranjani Ashok
ReplyDeleteExceptionally well written with so much of new info - Thilaga
ReplyDelete