பரஞ்சோதி!
எனும் அற்புத எம்பெருமானை தாமரை முதலியவற்றை
உவமையாகக் கூறுதல் தகாதென்ற தெரிந்தும் இவ்வாழ்வார்தாமும் பிறரும் பலவிடங்களில் தாமரை
முதலியவற்றையே உவமை கூறுதல் ஏன்?
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
சுட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
அதியற்புத
சௌந்தர்ய லாவண்யம் கொண்ட எம்பெருமானுக்கு, அவர் தம் திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு,
தாமரைப்பூ உவமையாக இருக்க வல்லது அல்ல. நெருப்பிலிட்டச்
சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது எம்பெருமானின் திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது;
ஸ்வாமி நம்மாழ்வார் - திருவாய்மொழி மூன்றாம் பாத்து - முந்நீர் ஞாலம்
பதிகம்.
Most beautiful
Sri Parthasarathi Emperuman divya darsanam
- Thai Amavasai purappadu at Thiruvallikkeni divyadesam today 18.1.2026

No comments:
Post a Comment