To search this blog

Monday, November 15, 2021

ஐப்பசியில் சதயம் : Sri Peyazhwar Sarrumurai 2021 @ Thirumylai

13th Nov 2021    being ‘Aippasiyil Sadayam’ marks the sarrumurai vaibhavam of –  Thamizh Thalaivan Sri Peyalwar.   

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – என  ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - இவ்வுலகில் வந்துதித்த நாள்கள். பன்னிரு ஆழ்வார்களில் முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் இவர்கள்.  ஸ்ரீ மணவாள மாமுனிகள்  "உபதேச ரத்தினமாலை"யில் மேலும்  :

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -

பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *

நின்றது உலகத்தே  நிகழ்ந்து.   --  என சிறப்பித்தார். 

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.  







திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்று சொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலை ஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு "பேயாழ்வார் தெரு".           

முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர்.  ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது, முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். 

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து:  

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,*

என்னாழி வண்ணன் பால் இன்று"  -

                                    என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார். 

Among the many things that we miss is Emperuman purappadu – On Peyalwar sarrumurai day – first Sri Peyalwar would come in pallakku to the sannathi – then there will be the short purappadu of Sri Parthasarathi perumal to Peyalwar sannathi – thriumanjanam – thirumozhi goshti, Moonram thiruvanthathi;  in the evening there would be periya mada veethi purappadu ; thiruvaimozhi goshti in Peyazhwar sannathi and Perumal along with azhwar would return to Thirukovil late in the day.  Next day morning would be ganthapodi uthsavam of Azhwar.  

Had the fortune of worshipping Sri Peyazhwar at Thirumuylai Sri Madhava Perumal thirukovil on his sarrumurai day on 13.11.2021. Here are some photos of Azhwar purappadu inside the temple and His Sarrumurai vaibhavam – with bahumanam from Thiruvallikkeni Sri Parthasarathi Perumal, Srivilliputhur Andal, Sri Poigaippiran, Sri Boothathazhwar from Kadanmallai were conferred on Thamizh thalaivan Sri Peyalwar. 

adiyen Srinivasadhasan.  
 Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.11.2021  


















1 comment: