To search this blog

Wednesday, October 7, 2020

Sri Ramanujar Thiruther ~ எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று " “ஆரிய சம்பத்து”

 

இந்த நவீன விஞ்ஞான உலகத்திலும், மனிதன் அறியாத உலக விஷயங்கள் பற்பல உள்ளன.  கருந்துளை [blackhole]  என்பது, தனது  எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.  இதன் நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது 

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு, ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் அறிவியலுக்கான, இந்த ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு அண்டவெளியின் ஒரு பகுதியான கருந்துளை (blackhole) பற்றிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய ரோஜர் பென்ரோஸுக்கும் (Roger Penrose), ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (Reinhard Genzel), ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுச் சார்புக் கோட்பாடு (general theory of relativity)  கருந்துளைகள் உருவாக வழிவகுக்கிறது என்பதை பென்ரோஸ் காட்டினார். விண்மீனின் மையத்தில் உள்ள நட்சத்திரங்களின் இயக்கங்கள் கண்ணுக்குத் தெரியாத கனமான ஒரு பொருளால் ஈர்க்கப்படுகிறது என்பதை ஜென்சல் மற்றும் கெஸ் கண்டுபிடித்தனர். தற்போது, வரை அந்த கனமான பொருள் ஒரு ராட்சச கருந்துளை என்றே  அறியப்படுகிறது 

கொரோனா கண்ட இந்த ஆண்டில் மக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாயினர் என பலரும் சொல்ல - தற்சமயம் திறந்துள்ள கடைகளில் மோதும் மக்கள்  கூட்டத்தை பார்க்கும் போது அக்கூற்று ஏற்புடையதாய் இல்லை !   இக்கடின காலத்திலும், உயிரையே அச்சுறுத்தும் நோய் காலத்திலும் கூட, மனித இனத்துக்கு பொருட்கள் மீதுள்ள பற்று மிக அதிகமானது.  அவர்களுக்கும்  பட்டுப் பீதாம்பரங்கள்  என பல்வேறு விதமான  துணிமணிகள், தங்க வைர வைடூர்ய, வெள்ளி, நகைகள் என அணிகலன்கள், வாகனங்கள் என பல்வேறு செல்வங்கள் மாயமயக்கு மயக்குகின்றன.  

சம்பத்து என்றால் செல்வம்.  ஸம்பத்து என்பது ஸ்மஸ்கிருதச் சொல். செல்வம் என்பது திரவியத்தையும்பொருட்களையும், பணத்தையும், கால்நடைகள், வாகனங்கள் போன்றவை மட்டுமல்ல !  அறிவுச் செல்வம்; ஒழுக்கச் செல்வம்; பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும், “ஆரிய சம்பத்துஎன்பது  அறிவு வளர்ச்சி பற்றியதாகும். ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து - திரவிய ஸம்பத்து கூடத்தான் - இவை,  எதை நாம் பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை.    இது உலக இயல்பு.  ஆனால்   திருமாலடியார்கள் மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரேயன்றி மற்றைய செல்வங்களையும்,  சுவர்க்கலோகத்து இந்திர பதவியையும்  கூட விரும்ப மாட்டார்களாம்.    





Worshipping Sri Ramanujar at his Avathara sthalam and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain.   Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.   

Our Srivaishnavism hails Ubhaya Vedabta – there are philosophies restricted to having their scriptures in either Sanskrit or Tamil ~ Sri Vaishnavism has Sanskrit and dravida vedantha in equal parlance. .. .. and we have the noblest of preceptors  - Swami Ramanujar – the King of all hermits guiding us the path.  

The greatest reformer Sri  Ramanuja gave us many vedantic treatises:  Sri Bashyam, Vedarta sangraha, Vedanta deepa, Vedanta sara, the three Gadyams and more.  Blessed are the people, who regularly recite the 108 songs rendered by his disciple Thiruvarangathu Amuthanar known as “Ramanuja Noorranthathi”.   Ramanuja’s peregrinations earned him thousands of followers, wherever he set foot, and Sri Vaishnavism continued to thrive in these places, even  after Ramanuja’s departure from this world. Truly following our Acarya, We all take pride calling ourselves as Sri vaishnavas and more as Ramanuja Dasan / Dasi.  

Glory to num Iramanusan !  ~ today is Thiruvathirai nakshathiram in the month of Purattasi   – we hail the birth star [monthly] of our Great Acarya Swami Ramanujar.  Here are some photos of Udayavar mangalasasanam and thiruther purappadu on 22.4.2018. 

திருவரங்கத்து அமுதனார், ஒரு அளப்பரிய பக்தர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.   அவர் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார்.   இதோ இங்கே ஒரு பாசுரம்.  





எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்

தனக்குற்ற அன்பர் அவன்  திருநாமங்கள் சாற்றுமென்பா

இனக்குற்றம் காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே!!.  

இப்பூவுலகில், நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து (பெருஞ்செல்வம்)  உடையவர் இராமனுசரே என்று  அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத துஷ்டஹ்ருதயர்களான மனிசர்கள்,  இந்நூலைப்  பழிப்பார்களேயாயின்   அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்  புகழாய்விடும்; அவ்வெம்பெருமானாருடைய  நித்யஹித்தமான கல்யாணகுணங்களுக்கு  தகுதியான அன்பையுடையவர்களான மஹான்கள்  இந்நூலானது  பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியையுடையதென்று திருவுள்ளம் பற்றி, இராமனுசனது   திருநாமங்களைக் சொல்லுசின்ற என்னுடைய (இந்தப்) பாசுரமாலைகளிலுள்ள குற்றங்மளைக் காணமாட்டார்கள் என உடையவரைப்பற்றி பாடுவதனால், இந்நூலின் ஏற்றம் என்கிறார் அமுதனார். .

 உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்

புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம்.

 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
09.10.2020










1 comment: