सुधानिधिम् इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् ।
प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥
ஸுதாநிதிமிவ
ஸ்வைரஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||
தமது இஷ்டப்படி தாம் ஏற்றுகொண்ட
மிக அழகிய திருமேனியை உடையவராய், திருப்பாற்கடல்
போன்று வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,
மிக்க ஒளி படைத்தவர் ஆயினும், கண்கூசாமல் காணும்படியாகத் தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் கதிரவன் என சொல்லக்கூடிய திவ்யமான காந்தியினால் சூழப்பட்டவருமாகிய எங்கள் ஆசார்யன்
ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே சேவை சாதிக்கும் அழகு. …
ஆசார்யன் மணவாள மாமுனிகள் சிறப்பு - பூர்வ திநசர்யை - ஸ்வாமி
எறும்பியப்பா
அடியேன் ஸ்ரீனிவாச
தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
20.11.2023
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
20.11.2023
.jpg)
No comments:
Post a Comment