மிதிலையில்
வளர்ந்த சீதாபிராட்டி மிக மிக அழகானவர். ‘மதனற்கும்
எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். ஓவியக்கலையில்
மிக தேர்ச்சி பெற்ற மன்மதனால்கூடச் சீதையின்
அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,
‘அவயவம் அமைக்கும் தன்மை யாது?’
எனத் திகைக்கும் அல்லால்,
மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே,
திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும்,
பொன் மதில், மிதிலை புக்கார்
கம்ப நாட்டாழ்வார் வரிகளில் : மன்மதன் உலகத்தவர் அனைவரது அழகையும் வரையறுத்து உணர்ந்தவன்; ஆண் பெண்களாகிய மக்களின் மனத்திலே தோன்றியுள்ளவன்: தனக்கு வடிவம் இல்லாமல் இருந்தும் ஐந்து அம்புகளைக் கொண்டு மூவுலகையும் தன்வயப்படுத்தும் திறமை பெற்றுள்ளான் இத்தகைய இயல்புடைய அம்மன்மதன் எல்லையில்லாத பேரழகு உடைய சீதையின் உருவத்தைத் தானே சித்திரத்தில் அமைக்கக் கருதினான்; அதற்கு வண்ணப் பொருள் அமுதமேயெனத் தீர்மானித்து. அந்த அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை முழுமையாக எழுத முடியாமல் திகைப்பானேயல்லாமல் அச் சீதையின் அழகை அவனால் சரியாக எழுத முடியாதாம்.
நிற்க
! நீங்கள் இங்கே செவிப்பது சீதாபிராட்டி அல்ல
! வடிவழகனான ஸ்ரீ ராமபிரான், திருவல்லிக்கேணியில்
இன்று நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலித்த அழகு இங்கே
The God of Love Manmatha (cupid) is known to be the Best known Artist ever in the world for Paintings and creating sculptures etc., Kambar says that even Manmatha cannot properly bring out the beauty of Seetha Piratti.
Here it is not Sita but Sree Ramapiran himself – Nachiyar
thirukkola avasaram at Thiruvallikkeni on day 5 of Sri Rama Navami Uthsavam
today
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.3.2026
.jpg)
No comments:
Post a Comment