வயலாலி மணாளன் வயல்வெளியில்
திருமங்கைமன்னன் - "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக்கினியாய்" என மங்களாசாசனம் செய்த .சிவந்த அக்னி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்
பௌர்ணமி தினம் சிறப்பானது. நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும், நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம்.
வேதராஜன் (வயலாலி மணவாளன்) - உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி. இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது. அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு எழுந்தருளி பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின் செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார்.
வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில
நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள்
அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.:
https://youtu.be/P395bs4pfGc
The celestial marriage of
Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and
around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on
hard roads, fields and difficult terrain. It is an out of world
experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of
accompanying Emperuman on 24.3.2024. Here is a video of the purappadu
adiyen Srinivasa
dhasan
Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment