To search this blog

Sunday, January 1, 2023

Manikka VAsagar at Thirumylai

 Thirumylai Manicka Vasagar

This is the time of Pagal pathu uthsavam and today 29.12.2022   as I rushed towards Sri Madhava Perumal thirukovil in Thirumylai – was attracted by beautiful alankaram  at Sri Veerabhadreswarar temple.   It was  Manikka Vasagar  in central podium.    Carried away by the beauty here is something on this Nayanmar. 



இன்று திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவிலுக்கு செல்லுமுன்னர் அங்கே அமைந்துள்ள ஸ்ரீவீர பத்ரேஸ்வரர் திருக்கோவிலில்   - மாணிக்கவாசகர் தனியாக மத்திய மண்டபத்தில் கொலு வீற்று இருந்தார்.



மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.

பாண்டிவள நாட்டில் வைகையாற்றங்கரையில், மதுரை மாநகரத்திலிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில், திருவாதவூர் என்ற ஒரு தலம் உள்ளது. இத்தலத்து  இறைவன் வாதபூரீசுவரர்.  இத்தலம், வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என்றும் வழங்கப் பெறுகிறது. இவ்வூரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரார் என்பதாகும். தம்  பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார்.   வேத வித்தகர்,  நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்.  ஞான நெறியைப் பின்பற்றிய இவர், 32 ஆண்டுகளே வாழ்ந்து, ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தி யடைந்து, சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரம ராயன் என்ற பெயர்களும் உண்டு. 

மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார்.   திருவாசகம் என்பது   சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

  இதோ இங்கே ஒரு திருவாசக பாடல் :

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி .. ..

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்  கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய எனக்கு கருணையால் அருள்செய்து   உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்  அருள் புரிவாயாக!



தென்னிந்திய திரைப்படங்களின் ஆரம்ப நாட்களில் பல புராண படங்கள் எடுக்கப்பட்டன.  1939 ஆம் ஆண்டு, டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில்  வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயரின் தயாரிப்பில்  வெளிவந்த திரைப்படம் :"மாணிக்க வாசகர்"  -   இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், எம். எஸ். தேவசேனா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.   மாணிக்கவாசகர் இயற்றிய  சில பாடல்கள் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. ஏனைய பாடல்களை மாயவரம் கே. தியாகராஜ தேசிகர் இயற்றியிருந்தார்.

 
With regards – S. Sampathkumar
30.12.2022
 

1 comment: