To search this blog

Tuesday, February 28, 2017

Sri Parthasarathi Theppam day 3 2017 : ஸ்ரீபார்த்தசாரதி "சிகத்தாடை"

Today 28th Feb 2017  is the third day of Theppothsavam – the first three days are dedicated to Sri Parthasarathi.  This morning Sri Parthasarathi had Thirumanjanam in Theppam itself –  and hence had purappadu in the morning to the Thirukulam of which I am making  a separate post.  In the oncoming days, there would the float festival, a day each for Sri Azhagiyasingar, Sri Ranganathar, Sree Ramar and Sri Varadhar. 


To those who worship Him daily too – He looks refreshingly fresh and different everyday.  Today, the added attraction was the kireedam (crown)  called ‘Sigathadai’.  On the Crown, reams of jasmine flower are tightly rolled and it is closed with ‘pure white silk’.  It was a great darshan to behold for the eyes of Bakthas.


தெப்போத்சவத்தில் முதல் மூன்று நாள்களும்       ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் எழுந்து அருள்கிறார்.  நாளை முதல் ஸ்ரீ அழகியசிங்கர்ஸ்ரீரங்கநாதர்ஸ்ரீராமர்,      ஸ்ரீ வரதர் தெப்போத்சவம் கண்டருள்வர்.    இன்று தெப்பத்தில் இருந்து இறங்கி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.   அற்புதமான சாற்றுப்படியில்  ஸ்ரீ பார்த்தசாரதி மிக அழகுற மிளிர்ந்தார்.  "சிகத்தாடை" எனும் தலைக்கிரீடம் ராஜாக்கள் அணியும் கொண்டை போல அழகு மிளிர்ந்தது. கிரீடத்தின் மீது பல முழங்கள் மல்லிகை பூ சாற்றிஅதன் மீது வெள்ளை பட்டு உடுத்தி தயாரான கிரீடம் அணிந்துஎங்கள் பெருமாள் சிறப்புற வீதி புறப்பாடு  கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:   




தெப்பம்பற்றி - கம்பரின்  இராமாவதாரத்தில்- அயோத்யா காண்டம் வனம்புகு படலத்தில், அண்ணல் இராமபிரான் யமுனை ஆற்றை  கடந்தது பற்றிய காப்பிய வரிகள் ஈர்த்தன*

வாங்கு வேய்ங் கழை துணித்தனன் மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து,   அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்;    தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி இரு கையால் நீந்தி,.

இளையோன் ஆன இலக்குவணன்,  வளையும் தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மானைக் கொடிகளைக் கொண்டு உயர்ந்த தெப்பம் ஒன்று அமைத்து -  அதன்மேல் திரண்ட தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி – கடந்தானாம்.


அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 





No comments:

Post a Comment