To search this blog

Saturday, February 25, 2017

Thirukachi Nambigal Avathara Sthalam at Poonamallee

Today evening was seeing photos on Facebook – Mr Rajagopalan Madhavan had posted some good photos of Acharyar Thirukachi Nambigal Uthsavam – a couple of photos attracted me … for I had read about that particular place in a blog post.

'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆசார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு,  வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.

இந்த பதிவு ஒரு  மகிழ்சி அளிக்கும் விஷயம் பற்றியது.

சுஜாதா தேசிகன் என்பவர்  2004 முதல் தமிழ் வலைத்தளம் அமைத்து எழுதி வருபவர்.  மிக்க புகழ்மிகுந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர்.  அவரது 'திருக்கச்சி நம்பிகள்' பற்றிய பதிவு 2010 வருடம் எழுதப்பட்டது.  ஆர்வத்தை தூண்டும்படி எழுதியுள்ளார். அவரது  முழு பதிவை இங்கே படிக்கவும் :- Kachi Nambigal avatharasthalam

தேசிகன் - ஆசார்யர் அவதார ஸ்தலத்தின் அப்போதைய அவலநிலை பற்றி எழுதியிருந்தது மட்டும் கீழே மறுபதிவு செய்துள்ளேன்..  
.. ..
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார். 

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.
அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”
“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.

திரு தேசிகன் -  நிச்சயம்  தேங்காய் உடைக்க வேண்டும்.  இது யாருடைய  முயற்சி; யாரெல்லாம்  இதற்கு வ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். நிச்சயம் பெரு முயற்சி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.    இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார்.  அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர்  திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது.  மகிழ்சியாக உள்ளது. 


ஆசார்யன் திருவடிகளே சரணம்.

The post referred is Sujatha Desikan’s post on Acharyar Thirukachi Nambigal written way back in 2010.  Upon searching for Acharyar Avatharasthalam, with none providing details [locals too were not aware !!] – he found it near a Vinayagar temple, occupied by somebody and had lamented that only God can save and restore the place.  The photos by Madhavan show Acharyar visiting the same Avatharasthalam this year.  For sure, this is made possible by great efforts by some group of people.  It does makes the believers, followers of Srivaishnava Acharyargal happy.  [that portion of Desikan’s search reproduced alongwith photos of Mr R Madhavan]


அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்

No comments:

Post a Comment