How to name this ! what to caption ! - when modern kids are busy elsewhere playing on electronic gadgets, Thiruvallikkeni vasigal are different !
வயதானால் சிலருக்கு ஞானம் வரும், பக்தி வளரும் ! திருவல்லிக்கேணி புண்ணிய பூமி. தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளுக்கு தவழும் வயதிலியே பக்தியை புகட்டுவர். குழந்தைகள்,
சின்னக் குழந்தைகள் - ஏதோ பொழுது போக்க விளையாடுகின்றனர் என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம். இந்த இளம்சிங்கத்தின்
பக்தி பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டால் தெரியுமோ ?
எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இருக்கும் இவர்கள்
பெருமையை அளவிடமுடியுமோ? திருவல்லிக்கேணி சிறார்கள் யானை வாகன சிறப்பு 2025
No comments:
Post a Comment