To search this blog

Tuesday, October 1, 2024

ThiruNarayanapuram (Melukote) Thirumanjana kudangal

திருமஞ்சன தீர்த்தம்  ~  திருமஞ்சன குட  புறப்பாடு

 

திருவரங்கத்தில் திருக்காவேரியில் இருந்தும், திவ்யதேசங்களில் திருக்கோவில் புஷ்கரினிகள் இருந்தும் புனித நீர் கொண்டு வரப்படும்.  திருவல்லிக்கேணியில் எனது சிறு வயதில் அதிகாலை, கைரவிணி புஷ்காரிணியில் இருந்து ஆழ்வான் யானை மீது திருமஞ்சன புறப்பாடு சேவித்த ஞாபகம் உள்ளது.
 

மேலகோட்டை திருநாரயண புறத்தில் அக்கா-தங்கை குளத்தில்  இருந்து  புனித நீர் கொண்டு வருகை : https://youtu.be/4huQVQGbX04?si=9rTcTgR1gtDfXmOZ
 
உடையவர் 12 ஆண்டுகள் வாழ்ந்த இந்த திருத்தலத்தில்,  நித்யப்படி காலை திருவாதாரனத்துக்கும் அக்கா தங்கை குளத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது.  இது காலை சுமார் 8 மணியளவில்.  பின்னர் 8.15 மணியளவில் முதலில் எம்பெருமானார் சந்நிதியில் திருவாராதானம்.   சுமார் 8.30 - 8.40 மணிக்கு யதுசைல சுப்ரபாதம். பிறகு திருநாராயணன் & யதுகிரித் தாயார் விஸ்வரூப சேவை பின்னர் அருளிச்செயல் நித்யாநுசந்தானம் என பரிமளிக்கிறது.
 
கடினமான கைங்கர்யங்களையும் எம்பெருமானிடத்திலே பக்தி மிக சிறப்புற செய்யும் கைங்கர்யபரர்கள் தாள் பணிவோம்.
 
1.10.2024 



No comments:

Post a Comment