To search this blog

Saturday, May 26, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Pushpa Pallakku


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Parthasarathi Perumal and after 10 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’.  It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas. 

On the evening of 23rd May 12, Sri Parthasarathi had purappadu in Pushpa pallakku and photos taken can be worshipped below :-

திருவல்லிக்கேணி புஷ்பப் பல்லக்கு புறப்பாடு   -    புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் பத்து நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.

மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே. நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் :

"தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*
  தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமே?  - என்கிறார். 

தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!!

23.05.12 அன்று மாலை, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அன்று எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 






அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

No comments:

Post a Comment