To search this blog

Saturday, May 12, 2012

Thiruvallikkeni Brahmothsavam - day 9 Morning - Porvai Kalaithal


12th May 2012 – Today is the 9th day of Sri Parthasarathi Brahmothsavam – Theerthavari.  This morning Sri Parthasarathi had purappadu in “Aaal mael pallakku” – a palanquin made with four men holding the pallakku on their shoulders. 

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 

ஒன்பதாம் உத்சவம் - காலை "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு மோதிரத்தை தொலைப்பதாகவும்,  பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது

கலியன் ஏளி பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு சுற்றி சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.  திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்'  - எனப்படும் பிணக்கு - பெருமாள் எழுந்து அருளும் போது,  உபய நாச்சிமார்  திருக்கதவை, சாற்றி விட, பெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ  ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.  பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   

இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :   அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 









No comments:

Post a Comment