அக்ஷய திரிதியை
20.4.2026 அன்று திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில்
'மங்கையற்கரசி' நாயன்மார் ஊஞ்சல் நடைபெற்றது.
நீங்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை விரும்பி படித்தவர் என்றால் - இந்த வரிகளை நினைவு கூறவும். : அத்தியாயம் 43 - பழையாறை - பொன்னியின் செல்வன்
வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், நம்முடன் பழையாறைப் பதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம்.
அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.
அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன.இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது.
இருநூறு
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான்,
“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை”
என்று வர்ணித்தார் என்றால், சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை - வடதளி - பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் சுவாமி, விமலநாயகி உடனுறை தருமபுரீசுவரராகவும், பழையாறையில் சுவாமி, சோமகமலாம்பிகை உடனுறை சோமேசராகவும் காட்சி அளிக்கின்றனர். இது மங்கையர்க்கரசியார் அவதரித்த திருத்தலம். மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
Mangayarkarasiyar Nayanar was a 7th century Chola princess, Pandya queen, and one of only three female Nayanmar saints. As the wife of King Nedumaran, she actively resisted the influence of Jainism in the Madurai kingdom, restoring Shaivism alongside minister Kulachiraiyar and saint Tirugnana Sambandhar. She is remembered for maintaining her devotion to Lord Shiva even though her husband and the kingdom were under the influence of Jainism
Along with the Prime Minister Kulachiraiyar, she invited saint Tirugnana Sambandhar to Madurai. She supported the transformation of the King from a follower of Jainism back to Shaivism, after which he was known as Ninra Seer Nedumaran. She is honored in the Periyapuranam and hailed as a "symbol of virtue and devotion," helping revive the Vedic traditions in the Tamil region. She is praised in Tiruthondar Thogai by Sundarar. Her efforts helped to restore the influence of Saiva tradition in the Pandyan kingdom.
சோழ இளவரசியாக அவதரித்து, இளமை முதற்கொண்டே சிவபெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த மங்கையர்க்கரசியார் நாயனார், பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைத் திருமணம் செய்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டிய மன்னர் நின்றசீர்நெடுமாறனுக்கு மன மாற்றம் ஏற்படுத்தி, சைவராக மாற்றினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை குருவாக ஏற்று, அவர் வகுத்து தந்த பாதையில் பயணித்து, நெடுங்காலம் சைவம் தழைக்க பெரிதும் பணியாற்றினார்.
“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகையில் மங்கையர்க்கரசியார் நாயனாரின் புகழை அழகுற விளக்குகிறது.
பாண்டிய
நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில்
மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி
என்று பிற்பாடு வழங்கினார்கள்
பெயர்: மங்கையர்க்கரசியார் நாயனார்
பூசை நாள்: சித்திரை ரோகிணி
அவதாரத் தலம்: பழையாறை (கீழப் பழையாறை)
முக்தித் தலம்: மதுரை
சென்னை
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில் 20.4.2026 அன்று நடைபெற்ற சிறப்பு பூஜை, ஊஞ்சல், கற்பூர ஹாரத்தி: https://youtu.be/TahB9E-l7TM
அன்புடன்
திருவல்லிக்கேணி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

No comments:
Post a Comment