To search this blog

Tuesday, May 3, 2022

Emperumanar Udayavar Pushpa pallakku 2022

Emperumanar Udayavar Pushpa pallakku 2022

 


**கல் மயமான காட்டினுள்ளே  - ஒரு கொடியில் புஷ்பித்த  புதுமலரினுடைய நல்ல பரிமளம்  யார்க்கும் பயன்படாமல்  அங்கே எவரும் வராத சூன்ய ஸ்தலத்திலே வீணாகக் கழிவது போல்  .. .. இந்த வரிகளை கேட்டு இருக்கிறீர்களா ?? 





பூக்கள் அழகானவைநறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளதுஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம்நில வளம்மக்களின் மனவளம்ஆகியவற்றை நன்கு உணரலாம்.  நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  

நமது  சங்க இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன.  வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம் வகிக்கின்றன.  குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர் குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன.  

பக்தி இலக்கியத்திலும் மலர்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. வண்ண நறுமணம் வீசும் மலர்களையே எம்பெருமானுக்கு சமர்பிக்கின்றனர்.  சைவ குரவர் திருஞானசம்பந்தர் -  முதல் திருமுறையில்,   திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பி உடன்  நேரே ஆலயம் சென்று "பூவார் கொன்றை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடினாராம்.  " பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா!  காவா யென நின்றேத்துங்.. .." - பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீர்காழிப் பதியினராவார். 


Today,  2.5.2022   is day 7 of Swami Udayavar Uthsavam ~ in the morning it was pallakku and in the evening the fragrant ‘pushpa pallakku’ (palanquin made of flowers).  Flowers are fragrant and are naturally attractive – the pushpa pallakku – with many strands of jasmine pervading  is unique as it is a treat to mind, eyes and ears.  

The most learned, most humble and most kind Sri Ramanujar showered us with his munificence .... here is how Thiruvarangathu Amuthanar hails the unswerving commitment of Ramanujar to the Lord Ranganathar at Thiruvarangam. In his words“*பூங்கமலத் தேனதி  பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும்  இராமானுசன்*“.... Udayavar has in his heart the lotus feet of Arangar, the Lord of Srirangam, whose golden feet  is flooded and cleansed  by honey gotten from the lotus flowers......... we also need to have Sri Ramanujar in our heart and be attached to the feet of our Acharyar.  






இந்த பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த - "கல் மயமான காட்டினுள்ளே  - ஒரு கொடியில் புஷ்பித்த  புதுமலரினுடைய நல்ல பரிமளம் " .. ..திருமங்கைமன்னனின் பெரிய திருமடல் பாசுர வரிகள் !!

கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,

நன்னறு வாசமற்றாரானும் எய்தாமே,

மன்னும் வறு நிலத்து வாளாங் குகுத்ததுபோல், 

Here are some photos taken during today’s pushpa pallakku purappadu.

 

adiyen Srinivasadhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.5.2022 














No comments:

Post a Comment