To search this blog

Monday, April 17, 2017

Sri Parthasarathi Brahmothsavam 2017 : Yaanai vahanam

Yanaivahanam~  SriParthasarathiBrahmothsavam 2017 – day 6 Eve





Elephants are famed for their memory and rememberance – recently Elephants have passed a test of intelligence which scientists say has “profound” implications for our understanding of their mental capabilities. They were found to be capable of performing a task that showed they have a level of self-understanding that is rare in the animal world and defeats humans until they are about two years old.Elephants have already shown they can recognise themselves in a mirror, something that is thought to be relatively rare among animals.The new test, which was described as “deceptively simple”, involved picking up a stick and handing it to a researcher.But sometimes the stick was tied to a mat on which the elephant had to stand to reach it. This meant they had to realise their own body was preventing them from passing on the stick and get off the mat in order to complete the task.

The ancient kingdoms of South India had perennial rivers, monsoon forests and many elephants.  Elephants played a great role in many wars and were treated as a great wealth for the Kingdom.  The anthologies and epics of Sangam literature have given heroic admiration to elephants. Elephants are majestic – the special battalion of elephants was sought after … its thick hide would protect from injury ~ the high riding portion gave the rider a good view to attack…   At Thiruvallikkenidivyadesam, on day 6 evening, it was  ‘Yaanaivahanam’  for Sri ParthasarathiPerumal ~ the one  at Thiruvallikkeni  is in sitting posture with  golden hue.



திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி  ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம். யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு,  பிடி, களபம், மாதங்கம், கைம்மா,  வாரணம், குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டதாம். யானைதந்தத்திற்கு கோடு, மருப்பு போன்றபெயர்கள் வழங்கப்பட்டன. பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப்படை முதன்மையான பங்கு வகித்தது. படையானைகளுக்குப் பெயரும், பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக்கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். பண்டையகாலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி, யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச்சிறப்புடைய ஒன்று. யானைமீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.

யானை  புக்க புலம்  போல""    - பிசிராந்தையார் - மன்னன் அறிவுடை நம்பிக்கு வழங்கிய அறிவுரை மிகவும் சிந்திக்கக் தக்கது. அந்த வரிகளின் அர்த்தம் : விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கி  யானைக்குக் கொடுத்தால்அது யானைக்கு  பல நாட்களுக்கு உணவாகும். ஆனால்நூறு வயல்கள் இருந்தாலும்யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால்அவ்வுணவு யானையின் கால்களால் மிதிபட்டு பெருமளவில் அழியும்.  அது போல அரசனானவன்  வரி திரட்டும் முறையை கட்டமைத்து மக்களை வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும்.  



திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில்தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்திபெருமாள் பின்பு பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்துநிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.   யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும்பின்னும் ஏளப்பண்ணும் வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவைமுழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும்போதுமிக துரித நடையிலும்அழகாகவும் ஏளப் பண்ணுவர்கள்.  பார்ப்பதற்கு யானை பீடு நடை போட்டு வருவதை போல் இருக்கும்.



திவ்யபிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பெருமாள் ஸ்ரீமகாவிஷ்ணு, கஜேந்திராழ்வானை முதலைவாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கைஆழ்வார் 'பிடிசேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம்திருவந்தாதியில் பேயாழ்வார்,  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்துகொண்டு, தனது துதிக்கையை எடுத்துக்கொண்டு வேகமாயோடி குத்தஓடுமாம் மதயானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை என்றென்றும் துதித்து வணங்குமாம்.     "வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" - என்கிறார். யானைமீது அமர்வது உயர்வானதாககருதப்பட்டது. குலசேகரர் அழகியதிருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின்மீது அமர்வதுகூட வேண்டாம் என்கிறார்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலை மேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

தன்னைக்பார்க்கின்றவர்க்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற மதங்கொண்ட யானையினது கழுத்தின்மீது அமரும் சுகங்களையும், ஐசுவர்யத்தையும் அரசாட்சியையும் விரும்பமாட்டேன்:   எமது தலைவனும் எம்பெருமானுமான ஸ்ரீமன்நாராயணன் வாழும் அழகியதிருமலையிலே புதராய் நிற்கும்படியான பாக்கியத்தை உடையவனாகக் கடவேன் ~ என்பது குலசேகரர் வாக்கு !! 
இன்றைய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட   சில படங்கள் இங்கே : 
அடியேன்   ஸ்ரீனிவாச தாசன். 





No comments:

Post a Comment