To search this blog

Sunday, July 8, 2012

Thiruvallikkeni Azhagiya Singar - Day 9 Purappadu


6th July 2012 – Today is the 9th day of Sri Azhagiya Singar  Brahmothsavam – Theerthavari.  Due to the passing away of Sri U.Ve. Sthalasayanathuraiyavar Swami, there was no purappadu in the morning and the morning purappadu itself occurred in the evening.  It was the purappadu known as  “Aaal mael pallakku” – a palanquin made with four men holding the pallakku on their shoulders. 

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Azhagiya Singar with no floral garlands – then many flower garlands adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 


திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் - ஒன்பதாம் நாள் புறப்பாடு- ஆள்மேல் பல்லக்கு 

ஒன்பதாம் உத்சவம் - காலை "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு மோதிரத்தை தொலைப்பதாகவும்,  பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்துஅதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது

இந்த வருடம், திருவல்லிக்கேணி ஸ்தலசயனதுரையவர் சுவாமி பரமபதித்ததால், காலை நடக்க வேண்டிய புறப்பாடு, சாயம் நடைபெற்றது. நல்ல வெய்யிலில் பெருமாள் புறப்பாடு நடந்தது.  குதிரை வாகன மண்டபம் முன்பே,  திருமங்கை மன்னனை ஆட்கொண்ட  இடத்திலே, பல்லக்கு சுற்றி சுற்றி  ஏளப்பண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் போதும், கற்பூர ஹாரத்தி காண்பிக்கப்பட்டு, ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் கீழே இறங்கிய பிறகு, அழகான, பல மாலைகள் அலங்கரிக்க, மறுபடி புறப்பாடு கண்டு அருளினார். 

குளக்கரை புறப்பாடு கண்டு அருளி, வாகன மண்டபத்தில் பல்லக்கில் இருந்து இறங்கி, தெற்கு மாட வீதி புறப்பாடு கேடயத்தில் எழுந்து அருளி, அழகியசிங்கர் தம் சன்னதி  அருகே சென்றடைந்ததும்  'மட்டையடிஎனப்படும் ப்ரணய கலஹம்'  - எனப்படும் பிணக்கு - பெருமாள் எழுந்து அருளும் போது,  உபய நாச்சிமார்  திருக்கதவைசாற்றி விடபெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடை பெற்றது.     ப்ரணய கலஹ  ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் அழகிய சிங்கர் உள்மண்டபத்தில் நடந்தது.   பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடினர்.

இன்று புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 







3 comments:

  1. Sir, the last photo is exceptionally radiant

    - Kumuda

    ReplyDelete
  2. Exceptional photo and great write up - pranams - Rani

    ReplyDelete
  3. very nice write up Sampath

    ReplyDelete