To search this blog

Tuesday, July 3, 2012

Sri Azhagiya Singar - day 6 - Choornabishekam


திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஆனி ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள்.  இன்று [3rd July  2012]  காலை ஸ்ரீ அழகிய சிங்கர்  அழகு பொலிந்திட தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டு  அருளினார்.    புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

இன்று சூர்ணாபிஷேகம் சிறப்பு.  சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.

திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய  திருச்சந்த விருத்தம்"  அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  திருச்சந்த விருத்தத்தில் நிறைய எண்கள் வருகின்றன, எனவே இப்ப்ரபந்தம் எண்ணடுக்கிச் செய்யுள் என்னும் எங்களை கொண்டு அமைக்கப்படும் செய்யுள் வகைகளில் ஒன்றாகிறது.  திருச்சந்தவிருத்தத்தில் முதல் பாடல் : 
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்*
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்*
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.*

பூமியில் தங்கியிருக்கிற (சப்தம் முதலிய) ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; நீரிலே உள்ள நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; தேஜஸ்ஸிலே உள்ள மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய், [பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்;  புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.; தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.;  காற்றில் - சப்தம், ஸ்பர்சம்]  - பாட்டுக்கு அர்த்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியபடி  -  [source : www.dravidaveda.org]
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

3rd July 2012 - Today is the 6th day of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Azhagiya Singar. 

This morning after ‘Choornabishekam’, Sri ThelliyaSingar had purappadu in ‘Thanga Chapparam’.  In the purappadu,  ‘Thiruchanda Virutham’ composed by Sri Thirumazhisai Azhwaar was rendered.   These 120 songs fall under the type ‘virutha paa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘enn adukki cheyyul’. 

Some photos taken during the morning  purappadu are here.





Adiyen – Srinivasan Sampathkumar.

1 comment: