நாங்கூர் திவ்யதேசங்களில் அழகான ஒன்று - திருத்தெற்றியம்பலம். திருமங்கைமன்னன் தமது மங்களசாஸனத்தில் :
இலங்கிய நான்மறையனைத்தும் அங்கமாறும்
ஏழிசையும் கேள்விகளும் எண் திக்கெங்கும்,
சிலம்பிய நற் பெருஞ்செல்வம்
திகழும் நாங்கூர்
திருதெற்றியம்பலத்தென் செங்கண் மாலே.
- என உயர்த்தி பாடிய திருக்கோவில்.
நான்கு வேதங்களும், (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும், ஸப்தஸ்வரங்களும், இதிஹாஸ புராணங்களும் - ஆகிய இவை
யாவும், எட்டுத் திசைகளிலுமெல்லாம் கோஷம் செய்யப்பெற்றதும் அளவற்ற செல்வம் விளங்கப் பெற்றதுமான
நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துள் உறையும் என் செங்கண்மால் என்கிறார் கலியன்.
.jpg)
No comments:
Post a Comment