To search this blog

Sunday, July 3, 2022

மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!!

 

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ

சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த

மன்னுலகம் வாழ – மணவாள மாமுனியே

இன்னுமொரு நூற்றாண்டிரும்



பகவத் பாகவத அடியார்கள் வாழ! திருவரங்கப் பெருநகர் வாழ! நம்மாழ்வாரின் குளிர்ந்த ப்ரபந்தங்கள் வாழ! கடல் சூழ்ந்த, பொருந்தியிருக்கும் இவ்வுலகம் வாழ! மணவாள மாமுனிகளே! தேவரீர் எங்களுடன் எப்பொழுதும் இருந்து க்ருபை பண்ண வேண்டும்.   பகவத் ராமானுஜரின் திவ்ய ஆணையானது (ஸித்தாந்தமும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளும்) சிறந்த முறையில் எந்தத் தடையுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் வளரட்டும்! நன்றாக வளரட்டும்!!.

 

திருக்கச்சி அருகே உள்ள தூசி மாமண்டூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தரவல்லி சமேத லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவிலில் சேவை சாதிக்கும் மாமுனிகள்

No comments:

Post a Comment