To search this blog

Thursday, August 25, 2016

Celebrating birth of Lord Krishna *கண்ணன் நம் இல்லம் புகுந்தான்*


**கண்ணன் நம் இல்லம் புகுந்தான்**

கண்ணன் பிறந்த நந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லோருடைய இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம்.  நம் இல்லத்துக்கு பால கிருஷ்ணன் தளர்நடை நடந்து வருவதை வியந்து  கண்ணனின் திருப்பாதங்களை வரைந்துபூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும்,  பக்ஷணங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.


அந்த கிருட்டிண பகவான் குழந்தைகள் வடிவில் இல்லம் வந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் !! - இன்று ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் - குழந்தைகள் கண்ணன் ராதா போன்று உடை உடுத்தி வீதி வலம்  வந்து, இல்லம் புகுந்து இனிப்புகள்  தந்து - ஸ்ரீ பார்த்தசாரதியின் திருவல்லிக்கேணியை சிறப்புற செய்தனர்.








No comments:

Post a Comment