To search this blog

Tuesday, November 12, 2013

Allikkeni Sri Peyalwar Sarrumurai purappadu

Sure you would have travelled many a times on Kutchery Road, the road that links Luz Junction with Beach road….. next time, for sure you might take a turn and reach this place, if you have not visited this earlier…. It is Arundale Street, off Kutchery road – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection.

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham. 

Thiruvallikkeni Sri Peyazhwar


Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street [described in the first para of this post]  in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.

Today 12th Nov. 2013, happens to be ‘Sadhayam in the month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar.  In the morning Sri Parthasarathi swami had purappadu to Peyalwar sannathi, had thirumanjanam and in the evening there was the grand purappaud of Sri Peyazhwar with Sri Parthasarathi. Some photos taken during the purappadu are here.


ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என         ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - இவ்வுலகில் வந்துதித்த நாள்கள்பன்னிரு ஆழ்வார்களில் முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் இவர்கள்.  ஸ்ரீ மணவாள மாமுனிகள்  "உபதேச ரத்தினமாலை"யில் மேலும்  :

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - 
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு
நின்றது உலகத்தே  நிகழ்ந்து.                --         என சிறப்பித்தார்

ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்) அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்இவர்  அயோநிஜர்.  இந்த அவதார ஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப் படும் வீதியில் மிக சாதரணமாக உள்ளது.   

 இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர். ஸ்ரீமன் நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கை ஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாக  (உலகத்தையே விளக்காகவும் பெரிய கடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத் ஆழ்வார், 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக' (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்று, பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து "மூன்றாம் திருவந்தாதிஅருளிச் செய்தார்.
 "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
 அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
 பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*
 என்னாழி வண்ணன் பால் இன்று"  - என நூறு பாடல்கள் பாடினார்.  

முதலாழ்வார்களின் சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றதுதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்று சொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலை ஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு "பேயாழ்வார் தெரு".  பழமையான இந்த சன்னதி சமீபத்தில்  திருவல்லிக்கேணி ஸ்ரீ மணவாளமாமுனிகள் சபையாரால் புதுப்பிக்கப்பட்டு அழகுடன் மிளிர்கிறது

இன்று காலை [12.11.2013]  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இங்கே எழுந்து அருளி திருமஞ்சனம் முதலியன கண்டு அருளி - சாயந்தரம் பெருமாள் ஆழ்வார் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினர்.

திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானைநாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்) துக்கங்களை அனுபவிக்க மாட்டார்கள் ~ அவனது அடி சேர்ந்து இன்புறுவார்


அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 






Below are the photos of Sri Peyalwar Avathara sthalam







1 comment:

  1. Fantastic... having lived in Mylapore before marriage, I never knew so much of his.. Thanks - Sreelekha

    ReplyDelete