To search this blog

Friday, April 16, 2010

உடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி {Emperumanar Uthsavam - significance of 6th day}


இன்று உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு  கண்டு அருளினார். யதிகளுக்கெல்லாம் இறைவனான எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா ?


காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். வைணவம் திக்கெட்டும் பரவியது. அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்தது. இராமானுஜரின் பெருமை எங்கும் பரவியது. இன்புற்றிருந்த ஸ்ரீரங்கஸ்ரீயில் தலைமைப் பொறுப்பினையேற்ற உடையவருக்கும் பெருந்துன்பம் ஏற்பட்டது .


சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு ”இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான். வைணவத்தின் தலைவராகயிருக்கும் இராமானுஜர் ஒப்புக்கொண்டாலேயொழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.


இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள் உணர்ந்ததால், வட திருகாவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார். வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணித்தார்.


பல தேசங்கள் புறப்பட்டு கண்டு அருளின உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். இங்குள்ள மிக பெரிய தொண்டனூர் ஏறி சுவாமியால் ஏற்படுத்தப்பட்டது. உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பதாக அறிந்து அங்கு சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா? முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். இப்படியாக எம்பெருமானார் பயணித்த ஆச்சர்யம் இன்று கொண்டாடப்படுகிறது.
                                                              கல்யாணி புஷ்கரிணி
                                                                    தொண்டனூர் ஏரி


ஸ்ரீ பெரும்புதூரில் காஞ்சி செல்லும் பாதையில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு உடையவர் இன்று குதிரை வாகனத்தில் எழுந்து அருள்வார். திருவல்லிக்கேணியில் காலை குதிரை வாகனத்தில் வெண் பட்டாடையுடன் உடையவர் புறப்பாடு  புகை படங்கள் சில. இவை போன வருடம் எடுக்கப்பட்டவை.


இராமானுசனை நமது இதயத்துக்குள்ளே இருப்பிடமாக கொள்பவர்கள் இன்புறுவர். அவரது தொண்டர்கட்கு அன்புத்திருதல் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று என்றும் பாக்கியம்






அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
*******************************************************
Dear (s)


Chithiraiyil seiya Thiruvadirai is most important for Vaishnavaites – as this marks the birth of Sri Ramanujar widely known as Emperumanar, Udayavar, Bhashyakarar.


Acharyar was born in the year 1017 AD and soon we will celebrate thousand years of his birth. Udayavar Utsavam is greatly celebrated at Sriperumpudur, Melkote and ofcourse at Thiruvallikkeni.


The 6th day of the Utsavam is “Vellai SAthupadi” where Acharyar adorns white garments without tridandam. This is to remember the circumstances under which Acharyar doned vellai veshti of grahasta instead of usual kashaya. History has it that Chozha king Kulothunga 1 ordered Acharyar to subscribe to his faith and Kuresar donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his eyes plucked out.


Swami Emperumanar went out of Cholanadu adorning white dress and went places, reached Melkot, Mandya where he performed many religious discourses and managed temples. He went to Delhi for bringing back the Utsava vigraham of "Ramapriyan" which had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar. Marking this, on sixth day of Udayavar Uthsavam - perumal alights Kuthirai vahanam donning white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to a place on way to Kanchi. Similar festivity takes place at Triplicane also.


For those who fall at the feet of Udayavar and who takes care of the disciples of Udayavar, there would never be any hardship.


Regards - S Sampathkumar.

No comments:

Post a Comment