Thiruvallikkeni Garuda
Sevai 2026 - Sri Parthasarathi Emperuman
எதுகை (Ethugai) and மோனை (Monai) are foundational Tamil poetic devices
(prosody). There are no exact single-word English translations, but they are
categorized as specific types of rhymes, alliteration, and assonance.
Brahmothsavam is a grand festivity – each day it is different Vahanam, and
Perumal has classy alankarams … on Garuda vahanam day, thousands gather early
in the morning to catch glimpse of the Lord as he comes out of the gate (Gopura
vasal darsanam). In the grand Brahmothsavam, each Vahanam, every
purappadu has its own charm, yet, if one were to ask the most
majestic and most crowd-pulling ones, it would be Thiruther and Garuda
vahanam. !! .. .. .. On Garuda Sevai day, people from
far and away come to the temple, offer vasthram (new clothes), place before
Lord coconut, fruits & other offerings and have darshan of Lord in Garuda
vahanam.
In the ongoing Chithirai Brahmothsavam of Sri Parthasarathi Emperuman at Thiruvallikkeni divyadesam today 3.5.2026 is the third day – a very important day ~ it is
Garuda Vahanam for Perumal. Garuda is depicted as having the golden body
of a strong person, has a white face, wings, prominent beak, wears a
crown – massive, strong – and more than anything else – ever devoted to Sriman
Narayanan, carrying Him on his shoulders all the time. His devotion and being
close to Emperuman all the time – Garuda, is admired as ‘Periya Thiruvadi’
எம்பெருமான்
ஸ்ரீமன் நாராயணன் எளியன் .. .. தன் பக்தர்களை ஓடோடி வந்து காப்பவன்.
நற்பயன் பெற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? - திவ்யதேசத்தில், வசிக்கும்
நாம் ஒன்றுமே செய்யவேண்டாம் .. .. எம்பெருமானை நினைத்து, அவன்தம் பெருமைகளை நாம சங்கீர்த்தனம்
செய்து, அவன் உறையுமிடங்களுக்கு சென்று, அவர்தம் அர்ச்சாவதார திருமேனியை கைகூப்பி வணங்கினாலே
போதுமானது.
அவ்வாறு
திருத்தலங்களுக்கு செல்லும்போது எம்பெருமானுக்கு உகப்பான புஷ்பங்கள், பழங்கள் போன்றவற்றை
கொண்டு செல்லுங்கள் ! - எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்யுங்கள் ! - அவன் உகக்கும்
அவர்தம் அடியார்க்கு - பாகவதர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்வோம் ..
..
Before you proceed further, here is some Tamil Grammar !! இன்றைய கருட சேவை பற்றிய பதிவிற்கு தமிழ் தலைவன் பேயாழ்வாரின் பாசுரம்
எழுத ஆசைப்பட்டேன். கருடன் மீது ஸேவைஸாதிக்கின்ற பெருமானுடைய திருவடிகளிலேயே நெஞ்சே!
நீ பக்திபண்ணு என அவர் கூறும் பாசுரம். இதன் கடைசி இரண்டு வரிகள் :
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன் மேல் கண்டாய் தெளி.
- என வருகின்றன.
தெருடன் என்றால் என்ன ? இணையத்தில்
தெருடன் என்பதற்கு அர்த்தம் கிடைக்கவில்லை; நாம் ஏதோ திருடன் பற்றி தேடுவதாக
புரிந்து கொள்கிறது இணையம். Perplexityல் வினவிய போது :
“தெருடன்” என்று எழுதப்பட்ட இந்த வார்த்தை, தமிழில் ஒரு தனி சொல்லாக (dictionary word‑ஆக) பயன்பாடும்
அர்த்தமும் பெற்று வழங்கப்பட்டுள்ளதாக எந்த நிலையான அகராதி/நூற்பொருளும் காட்டவில்லை
என அறுதியிட்டு உரைத்தது.
ஒருவேளை - எதுகை மோனை போன்றதா என்ற ஐயம் எழுந்தது. மஹாகவி பாரதியார் உரைத்தார்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
போதினிலே - காதினிலே போன்று - கருடன் தெருடன் எதுகை மோனைக்காக எழுதப்பட்டதா !! கருடன்
மற்றும் தெருடன் ஆகிய சொற்களுக்கு இடையேயான தமிழ் இலக்கணப் பொருத்தங்கள் (மோனை மற்றும்
எதுகை) இல்லை. மோனை என்பது ஒரு சொல்லின் அல்லது
அடியின் முதல் எழுத்து ஒன்றி வருவது ஆகும். 'கருடன்' என்ற சொல்லின் முதல் எழுத்து
'க' ஆகும், 'தெருடன்' என்ற சொல்லின் முதல் எழுத்து 'த' ஆகும். முதல் எழுத்துக்கள் வெவ்வேறாக
இருப்பதால் மோனை நயம் இல்லை. எதுகை என்பது
ஒரு சொல்லின் அல்லது அடியின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஆகும். 'கருடன்' என்ற சொல்லின்
இரண்டாம் எழுத்து 'ரு' ஆகும், 'தெருடன்' என்ற சொல்லின் இரண்டாம் எழுத்து 'ரு' ஆகும்.எனினும்,
எதுகையின் இலக்கணப்படி இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்துக்களின் ஒலி
(குறில் - நெடில்) ஒன்றாக இல்லை ; எனவே, இவற்றை
முழுமையான எதுகைச் சோடிகளாகக் கொள்ள முடியாது.
தெருடன் என்ற
சொல் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தில் ஈற்று வரியில் வருகிறது. தெருடன்
என்பதற்கு அர்த்தம் காண இயலாது. இது தெருள் என்ற வினைச்சொல்லின் மருவு.
தெருள்(வி): தெரிந்துகொள்;
உணர்வுறு ; நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி !!
'தெருடன் மேல் கண்டாய்;'
என்பதை தெருள்தன் மேல்கண்டாய் - என உணர வேண்டும். –‘தெருள்‘ என்று ஜ்ஞானத்திற்குப்
பெயர், ‘கர்மஜ்ஞாந பக்திப்ரபத்திகள்‘ என்ற அடுக்கிலும் ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள்‘
என்ற அடுக்கிலும் ஜ்ஞாநத்திற்கு மேற்படியாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே தெருள்தன்மேல்
என்றது பக்தியைச் சொன்னபடியாய், அவனது திருவடிகளை பக்திக்கு விஷயமாக்கு என்றதாம். எம்பெருமான்
கழல் கண்டாய் ! - திருவடிகளையே அடையப்பெற்றாய் -இனிமேல் கலக்கம் நீக்கித்
தெளிந்திரு என்பதாக உரைக்கலாம்.
பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்த
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
Sriman Narayana appears
riding on the mighty Garuda – to Thirumylai Peyazhwar
- it is akin to a glorious dark raincloud lit by a lightning,
the most merciful Saviour of the Universe – Emperuman with lotus dame Sri
Mahalakshmi on his chest – provides darshan seated on Periya thiruvadi Garuda.
He ordains his heart, that having seen Emperuman’s feet through
knowledge, asks Heart to rise and understand the greatness of eternal
Saviour Sriman Narayana.
Here are some photos of the
Garuda sevai at Thiruvallikkeni divyadesam this morning.
adiyen
Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
3.5.2026
பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி ஸ்ரீ உ.வே
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம்
திராவிட வேதாவில் இருந்து !!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Excellent.
ReplyDelete