Sri
Thelliya Singar Pushpa pallakku 2026
Both the
Gopurams and many Vimanas also seen in the backdrop !!
Sri Parthasarathi Perumal pushpa pallakku 2026
-
Puya raimondii !!!
Can you identify what
this is ? - these two plants are the
world’s largest bromeliad species, Puya raimondii !!!
திருவல்லிக்கேணி
ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சித்திரை ப்ரஹ்மோத்சவம்
2026 சிறப்புற நடந்தேறியது. ஏழு விடையாற்றி - சிறப்பு இன்னிசை கச்சேரிகள் முடிந்து இன்று 18.5.2026 - புஷ்ப பல்லக்கு.
Flowers
are beautiful . .. .. they pervade fragrance and happiness. Imagine
walking in a beautiful garden - sweet scent would waft through the
air. In a Temple they pervade divinity. The blooming and fragrance
is perhaps part of a strategy that helps flowering plants reproduce
themselves and spread their species. Plants flower to produce seeds that
can go on to become new plants. To make a viable seed, pollen from one part of
the flower must fertilize the ovules in another part of the flower. Some plants
can self-pollinate, using their own pollen to fertilize the ovule. Others
require pollen from another plant of the same species – that’s called
cross-pollination. A flower, sometimes known as a bloom or
blossom, is the reproductive structure found in flowering plants.
பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக
உள்ளது. ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். பெரியாழ்வார் தமது
பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த
கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு - செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ,
புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார். நாற்றம்
~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை
குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் நாற்றம் என்பது நறுமணத்தைக்
குறிக்கும் வார்த்தை.
நமது சங்க
இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன. வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு
பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய
முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது
இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம்
வகிக்கின்றன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர்
குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன.
பக்தி இலக்கியத்திலும்
மலர்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. வண்ண நறுமணம் வீசும் மலர்களையே எம்பெருமானுக்கு
சமர்பிக்கின்றனர். சைவ குரவர் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறையில்,
திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பி உடன் நேரே ஆலயம் சென்று
"பூவார் கொன்றை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடினாராம். "பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா! காவாயென நின்றேத்துங்..
.." - பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள்,
"கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று
துதித்துப் போற்றும் சீர்காழிப் பதியினராவார்.
Believe me ! - the
one at the start is a flower !! yes – it is Puya raimondii, also known
as Queen of the Andes, the largest species of
bromeliad, its inflorescences reaching up to 15 m (50 ft) in height. It is
native to the high Andes of Bolivia and Peru. It was once hypothesized to
be a Protocarnivorous plant. The plant begins as a massive, spiky rosette
of leaves spanning up to 2 metres wide. When it matures, it shoots up a
towering central flower spike that stands 9 to 15 metres tall. A single flower
spike produces between 8,000 and 20,000 creamy white flowers over a brief
3-month window. These blossoms heavily attract local high-altitude hummingbirds
for pollination.
The first scientific
description of this species was made in 1830 by the French scientist Alcide
d'Orbigny after he encountered it in the region of Vacas, Cochabamba, in
Bolivia at an altitude of 3,960 m (12,990 ft). However, as the plants he saw
were immature and not yet flowering, he could not classify them
taxonomically. Now, Queen of the Andes are classified as rare and
endangered because habitat loss and changes in climate have dramatically
reduced the wild populations. The Garden’s Puya raimondii are grown from seed
collected in 1990 in Bolivia by botanists from the NY Botanical Garden. The
first Queen of the Andes that ever flowered in captivity was at the UC Botanical
Garden in 1986. A sibling of these two plants flowered at the Garden in 2014.
Horticulture and Conservation experts at the Garden have never heard of two
flowering at once in captivity, making this a unique spectacle in the plant
world.
For us life is simple .. .. flowers are beautiful and fragrant
flowers are submitted to Sriman Narayana – there is Pushpa pallakku that is
beautifully made of flowers for our Emperuman… .. here are some photos of
pushpa pallakku at Thiruvallikkeni for Sri Parthasarathi Perumal this evening on 18th May 2026.
Sri
Parthasarathi Perumal pushpa pallakku 2026
-
Front decoration of pallakku aligned with backside of Rajagopuram
After
grand Chithirai Brahmothsavam and 7 days of Vidaayaarri
Today
18.5.2026 is Pushpa pallakku for
Sri
Parthasarathi Perumal @ Thiruvallikkeni
Pic
of Pushpa pallakku 2018
Sri Parthasarathi Emperuman Kannadi pallakku purappadu 2026
: https://www.youtube.com/watch?v=T4Niqe7Fx6g
Thiruvallikkeni Sri
Emperumanar Pushpa pallakku 2017
(Camera mine; super photos taken by Jilla - Thirumalai Vinjamoor Venkatesh) ....
.. mesmerising I must say !!
Kannadi pallakku - mind blowing !!
Chinna pasanga vahanam at Thiruvallikkeni Feb 2016
.. what to appreciate : being
an exact replica !? - the finesse and intricate vahanam, involvement of these
young kids or the bakthi of people - Triplicane is divine
வயலாலி மணாளன் வயல்வெளியில்
திருமங்கைமன்னன் - "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக்கினியாய்" என மங்களாசாசனம் செய்த .சிவந்த அக்னி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்
பௌர்ணமி தினம் சிறப்பானது. நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும், நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம்.
வேதராஜன் (வயலாலி மணவாளன்) - உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி. இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது. அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு எழுந்தருளி பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின் செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார்.
வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில
நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள்
அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.:
https://youtu.be/P395bs4pfGc
The celestial marriage of
Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and
around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on
hard roads, fields and difficult terrain. It is an out of world
experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of
accompanying Emperuman on 24.3.2024. Here is a video of the purappadu
adiyen Srinivasa
dhasan
Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar
பாவை நோன்பு
இருந்து - தனக்கு பொருத்தமுடைய நம்பியாம் எம்பெருமானையே கைப்பிடித்த கோதை பிராட்டி
- மணாளன் ஸ்ரீபார்த்தசாரதி - சங்கராந்தி ஊர்கோல உத்சவம்.
ஆண்டாள் நாச்சியாரும் ஸ்ரீபார்த்தசாரதியும் ஒருவரை ஒருவர் நோக்குமாறு அமர்ந்து திறந்த பல்லக்கில் ஊர்கோலம். இடையில் தெரியும் திருவல்லிக்கேணி இராஜகோபுரம்
15.1.2026
For Sri Vaishnavaites,
‘Acharyas’ occupy the most pre-eminent position ~ and in our Samprathayam it is
‘Swami Manavala Maamunigal’ known by various titles as ‘Sowmya Jamathru
Yogi’ ; ‘Varavara Muni’; Visada-Vak-Sikhamani; Yathindrapravanar, Varayogi,
and more is Most Reverred. Swami Maamunigal considered to to be last of
the Poorvacharyas, the early religious preceptors of Srivaishnavism, occupied
the pontific seat at Srirangam after Sri Ramanuja. Varavaramuni is the
reincarnation of Sri Ramanuja who was himself an incarnation of Adisesha. AchArya's mercy is the
ultimate benediction for our upliftment. ..
सुधानिधिम् इव स्वैर
स्वीक्रुतो दग्र विग्रहम् ।
प्रसन्नार्क प्रतीकाश
प्रकाश परिवेष्टितम् ॥
ஸுதாநிதிமிவஸ்வைர ஸ்வீக்ருதோ
தக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||
தமது இஷ்டப்படி தாம் ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,
திருப்பாற்கடல் போன்று வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும், மிக்க ஒளி படைத்தவர்
ஆயினும், கண்கூசாமல் காணும்படியாகத் தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் கதிரவன்
என சொல்லக்கூடிய திவ்யமான காந்தியினால் சூழப்பட்டவருமாகிய எங்கள் ஆசார்யன் ஸ்வாமி
மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே சேவை சாதிக்கும் அழகு. …
ஆசார்யன் மணவாள மாமுனிகள் சிறப்பு - பூர்வ திநசர்யை
- ஸ்வாமி எறும்பியப்பா.
This year during our
Acharyan Uthsavam it did not so heavily
– though Karthigai is a month of monsoon and there were many predictions of
heavy rainfall.
நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல்
தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்
நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை. .
Sri Manavala Mamunigal, is
the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy,
practised by Thennacharya Srivaishnavas
நமது பைந்தமிழ் ஒரு அற்புத மொழி. ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன்
மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை,பொன் மாலை என கவிஞர்கள் சிலாகிப்பர். ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல
பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்கிறார்கள். உழிஞை மாலை என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை
முற்றுகையிடல் உழிஞை. ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக்
கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர்
என்கிறது தமிழ் விக்கிபீடியா.
கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள்
சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன் : - *
பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில்
'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது. கலியன் அருளிச்
செய்தது போல : அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை உடையவனுமான,
இவ்வுலகோர்களாலே தியானிக்கப்படுபவனுமான மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும்
அணைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.
Monday 4.11.2024
அன்று திருவல்லிக்கேணியில் பொய்யிலாத மணவாள மாமுனிகள் மாலை நேரத்தில்
அழகான நறுமணம் தரும் மலர்களாலான புஷ்ப பல்லக்கில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.
நாளும்
பணிமின் பரமேட்டி தன் பாதமே !
பரமேட்டி என்றால் மிக மேன்மையான எம்பெருமான் என்று பொருள். எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம். மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும். சுவாமி நம்மாழ்வார் மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்குமாறு நமக்கு உபதேசிக்கிறார்.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடையாற்றி சாற்றுமுறை அன்று
(10.5.2024) மணமிக்க புஷ்பப்பல்லக்கில்
புறப்பாடு கண்டருளினார். இங்கே மூன்று படங்கள்
: -
1. புஷ்பப்பல்லக்கு மலர்களின் படம் (close-up)
2. உபயநாச்சிமார், எம்பெருமான் நடுவே அல்லிக்கேணி கோபுர
தரிசனம்
3. ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருவடிகள்.