To search this blog

Sunday, May 17, 2026

தமிழும் எமக்கு தகராறு !! ~ அருகாமையில் + ! ? !

 

தமிழும் எமக்கு தகராறு !!  அண்மையில் இந்த படத்தை போட்டு - இப்படி எழுதி இருந்தேன்.  

 


இடுங்கண் வருங்கால் நகுக ~ அனைவரும் அறிந்த வள்ளுவன் மொழி.

நம் பாபு பட்டர் ஸ்வாமிகள் சிங்கத்தின் அருகாமையில் கூட  மனமார நகைக்கிறார்

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ப்ரஹ்மோத்ஸசவம் 2026 

என் நோக்கம் சிங்கத்தின் பக்கத்தில் சிரித்துக்கொண்டு நிற்கும் பாபு பட்டர் என்பதே. 

தமிழ் இலக்கணம் நன்கு அறிந்த, அழகாக சொல்லாடல் கொண்ட திருமதி ஜெயந்தி திருநெல்வேலி இன்று தொலைபேசியில், என் தவறை உணர்த்தினார். அருகாமை என்றால் தொலைவு என்று பொருள் தரும்.  நான் அருகில் அல்லது அண்மையில் என்றே எழுதி இருக்க வேண்டும்.  

இணையத்தில் தேடியதில் -  அருகாமை என்றால் 'தொலைவு' அல்லது 'சுருங்காமை' (குறையாமல் இருத்தல்) என்று பொருள் படும். .  அருகண்மை - அருகண்மை என்பது "அருகில் இருத்தல்" அல்லது "நெருக்கம்" (Proximity) என்று பொருள்படும்.சொற்பிறப்பு: இது "அருகு" (அருகில்) மற்றும் "அண்மை" (நெருக்கம்) ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அருகாமை அருகு +ஆ+ மை என்று பிரிக்கலாம். ஆ என்பது எதிர்மறை இடைநிலை. ஆகவே அருகாமை என்ற சொல் தொலைவு என்ற எதிர்மறைப் பொருளைக் கொடுக்கும்.  

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே ஏதாவதை ஒன்றை கற்க வாய்ப்பு அளிக்கின்றன.  நன்றி திருமதி ஜெயந்தி.  

அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

17.5.2026

No comments:

Post a Comment