To search this blog

Showing posts with label Udayavar. Show all posts
Showing posts with label Udayavar. Show all posts

Friday, August 21, 2026

Udayavar arulicheyal goshti 2009

 

This photo came up in FB memory today – arulicheyal goshti coming out of Gangaikondan mandapam – Udayavar vellai sarruppadi kuthirai vahana purappadu  2009.

In the first line Sri U.Ve  :  Kuvalai Kannan Swami, MA Venkatakrishnan swami,  Kuram Bahsyam Swami, Kavanoor Srinivasaraghavan swami, Ashtagothram NC Parthasarathi swami



.. .. in the second line – four swamis, who are now adhyapakars. .. .. adiyen also there in the goshti ..[may be I had circulated this earlier too !!]

21.8.2026

Thursday, August 13, 2026

Aadi Thiruvathirai 2026 - Udayavar purappadu at Melukote

 

Aadi Thiruvathirai - Udayavar purappadu at Melukote Thirunarayanapuram 2026

Today 10th of August 2026 is – Aadi 25 – Thiruvathirai thirunakshatiram –   of Swami Emperumanar Yathirajar Ramanujacharya.




நலந்தரும் சொல் 'நமோ நாராயணா' என்னும் நாமம்  .. ... ஸ்ரீவைணவர்களான நாம் அனுதினமும் அனுசந்திக்க வேண்டியது - நம் ஆசார்யனின் திவ்யநாமம். ஸ்ரீராமாநுஜ திவ்யநாமத்தை வாயாரச் சொல்லுவோர்க்கு  எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும் என்பது திண்ணம்.  எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப்பெறமாட்டான்;   அத்திருநாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள் - எம்பெருமானாரே !, உடையவரே !!  பாஷ்யகாரரே !  நம்மிராமனுசரே  ~ என விளியுங்கோள் .  !!

Worshipping Sri Ramanujar at his Avathara sthalam and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain.   Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.     

The greatest reformer Sri  Ramanuja gave us many vedantic treatises:  Sri Bashyam, Vedarta sangraha, Vedanta deepa, Vedanta sara, the three Gadyams and more.  Blessed are the people, who regularly recite the 108 songs rendered by his disciple Thiruvarangathu Amuthanar known as “Ramanuja Noorranthathi”.   

We must fall and do service to the lotus feet of Swami Ramanuja ~ immerse ourselves to Him -  “ Ramanujam Yatipatim pranamami moordna”  - prostrate by putting our head at his feet saying  I am worshipping (pranamami!).     There are so many places connected  to him – Thiruvallikkeni, Sriperumpudur, Thirukachi, Thiruputkuzhi, Thiruvarangam, Thiruvellarai, Thirumalai, Maduranthakam, Thirunarayanapuram – the list extends to Delhi, Kashmir, Simhachalam, Puri, Thiruvananthapuram and more 




His birth nakshathiram is celebrated widely ~ at every divya desam, for sure there would be rendering of ‘Ramanuja noorranthathi’ of Thiruvarngathu Amuthanar. 

திருவரங்கத்து அமுதனார், ஒரு அளப்பரிய பக்தர். எம்பெருமானாரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.   அவர் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார்.   இதோ இங்கே ஒரு பாசுரம்.    

இயலும் பொருளும்   இசையத்தொடுத்து, ஈன் கவிகள்   அன்பால்

மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,  மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில்லாத  என் பாவி  நெஞ்சால்

முயல்கின்றனன் அவன்றன்   பெருங்கீர்த்தி மொழிந்திடவே. 

கவிதை பாடுதல் மிகவும் கடினம்.  மொழி இலக்கணம் பழக வேண்டும், நல்ல கருத்தாழமுள்ள பொருளை சரியான சொற்களால், சந்தத்தோடு விவரிக்க தெரிய வேண்டும்.   அத்தகைய விலக்ஷணரான கவிகள், தங்கள் அன்பின் வெளிப்பாடாக சப்தமும் அர்த்தமும்,  நன்கு பொருள் வரும்படியாக  தொடுத்து - அவ்வளவு உயர்ந்தவன் அல்லாதவனும்,   பக்தியற்றதான பாவி நெஞ்சையுடையவனும் ஆன நான்  அவ்வெம்பெருமானாரிடம் பெரும் மையல் கொண்டவனாய் அவரையே துதித்து அவர்தம்  அளவற்றகீர்த்திகளை மொழிந்திட முயல்வது, என் மதியின்மையே !  எனினும் கருணை கடலான நம் இராமானுச முனியை நினைந்துருகி அவரை போற்றி பாடுகிறேன் என்கிறார் - அளவறிய ஞானம் படைத்த திருவரங்கத்து அமுதனார்.  திறமையோ, வார்த்தைகளோ, பக்தியோ முக்கியம் அல்ல, எம்பெருமானார் இராமானுஜரை புகழ்தலே நமக்கு சரியான பாதை.

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்

புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம். 

This year we had the fortune of being at Melukote on 8.8.2026 – and had darshan of Krishna Rajamudi Uthsava theervari at Kalyani Pushkarini.     Here are some photos of Udayavar  purappadu at Melukote Thirunarayanapuram. 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar





Thursday, July 23, 2026

74 Simhasanathipathigal !! ? - Simhagiri (Belagola) Temple

 

The quintessential of Srivaishnavism is undiluted devotion to Sreeman Narayana as the Supreme eternal Bhagwan. We reach Emperuman through kainkaryam as ordained by our Azhwar / Acaryas and by following the path guided by Acaryas. 

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே !

 


A very beautiful painting at Shree Vishvamangala Lakshmi Narasimha swami thirukkovil, (Simhagiri) Belagola, Srirangapatna Taluk, Karnataka, near Mysore. Regards to Sri Pattanna Swami and his kumarar Sriram [taken in 2025] 

The pic reminisces the 74 Simhasanathipathis  ordained by our Emperumanar to propagate Srivaishnavism .. Udayavar gave the vigraham of Lakshmi Nrusihma for thiruvaradhana to all the simhasanapathis as per Guru Parampara.  … .. and other eminent disciples of Udayavar :  Mudaliāṇḍān (Dasarathi); Kūrathāzhwān; Embār; Kidambi Ācchān; Ananthāzhwān; Vaduga Nambi;        Tirukkurugai Pirān Piḷḷān; Arulaa Perumā Emberumāār; Piḷḷai Urangāvilli Dāsar (my thoughts! – may not be the exact description of the representation)

Thursday, July 16, 2026

Melukote Ramanujar thirumanjanam 2023

 

Aani thirumanjanam - Swami Emperumanaar

@ Melukote ThiruNarayanapuram 2023

: https://youtu.be/E5GzDLEevoM



Tuesday, April 28, 2026

Thiruvallikkeni Sri Emperumanar Pushpa pallakku 2017

 

 

Thiruvallikkeni Sri Emperumanar Pushpa pallakku  2017



(Camera mine; super photos taken by Jilla -  Thirumalai Vinjamoor Venkatesh)  .... 

.. mesmerising I must say !!

Saturday, April 25, 2026

Swami Ramanujar darsanam 2026

 

Emperumanar Darisanam – Chithirai Thiruvathirai

Sarrumurai purappadu @ Thiruvallikkeni 2026


Thursday, April 23, 2026

Swami Ramanujar sarrumurai purappadu @ Thiruvallikkeni 2026

 

ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமுறை புறப்பாடு மாலை வேளை 

சித்திரையில் செய்ய திருவாதிரை 23.4.2026


திருவல்லிக்கேணி வீதியில் ஒரு வித்தியாசமான பார்வையில் !!

Swami Udayavar gandhapodi uthsavam 2026

Swami Ramanujar gandha podi uthsavam @ Thiruvallikkeni 2026

https://youtu.be/Lo2xqsYoO6g



Wednesday, April 22, 2026

Celebrating Chithirai Thiruvathirai 2026 - Swami Ramanujar

Celebrating Thiruvavatharam of Swami Emperumanar –

Chithirai Thiruvathirai 2026 @ Thiruvallikkeni


Throwing up uthareevam in air elated at the birth of our Universal preceptor

: https://youtu.be/BEV2KXwDZ-0


Monday, April 20, 2026

Iramanusa muni Vezham ......... elephants of Triplicane

 

இராமானுஜ முனி வேழம், வெள்ளி யானை வாஹனமும் 

வரவேற்கும்  கீதாச்சார்யன் இல்ல யானை வரைபடமும்.

 


பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் –

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம்

திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி பாசுரம். 

நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்னும் செந்தமிழ் மகிழ்ச்சி, மதநீராகப் பெருக,  எம்பெருமானார் (இராமானுசர்) எனும் ஞான மத்தகஜம், சத்தியமான வேதமாகிய பெரிய தடியைத் தாங்கி  இப்புவியில் வந்து, மற்ற சமயவாதிகளை வென்றது.  நம் ஸ்ரீவைஷ்ணவ  சம்பிரதாயத்தில், இராமானுஜரை "மதயானை" (அஞ்ஞானத்தை அழிக்கும்) எனக் கூறிப் போற்றுவது இந்த பாசுரத்தின் சிறப்பு. 

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

அக்ஷய திரிதியை நன்னாள் - உடையவர் உத்சவம் 8 - 20.4.2026

Sunday, April 19, 2026

Thiruvallikkeni Udayavar Pushpa pallakku avasaram 2026

 

போற்றற்கரிய, மிகச்சிறந்த நற்பண்புகளைக் (சீலம்) கொண்ட இராமானுசரே!

திருவரங்க மாநகரில் நிலைபெற்ற உமது திருவடிகளோடு

என் அன்பு சேர்வதே  மிகுந்த சிறப்பு

Swami Ramanujar @ Thiruvallikkeni – pushpa pallakku purappadu 2026



Sri Ramanujar Uthsavam 7 - 2026

 

Sri Udayavar thiruvavathara uthsavam day 7 - 2026 @ Thiruvallikkeni

Yajur - Sama vedha sarrumurai 

https://youtu.be/vHzktF6il1w?si=muiCjmDMjZV8fpkd



Monday, April 13, 2026

Udayavar at Gangaikondan mandapam 2026

 

Swami Emperumanar Uthsavam – 1E – 2026

Udayavar at Gangaikondan mandapam with Periya & siriya thiruvadi



Udayavar 2026 - Uthsavam started today

 

 


Swami Emperumanar Ramanujar uthsavam 2026 started art Thiruvallikkeni  today

Udayavar in pallakku with neerazhi mandapam & rajagopuram in background 

13.4.2026


Tuesday, April 7, 2026

"ராமானுஜனே தெய்வம்" ~ celebrate Udayavar Uthsavam 2026

 

Srivaishnavaite life is exquisitely woven to Emperumanaar Udayavar Ramanujar.  Udayavar uthsavam starts on 13.4.2026 – Sarrumurai is on 22.4.2026 

ஸ்ரீ ராமானுஜ ஜயந்தியை மிகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுவோம்!   எம்பெருமானார் திருவடிகளே சரணம்! 

"ராமானுஜனே தெய்வம்" எனப் போற்றும் இந்த பாடல்                                                             ஸ்ரீ உ.வே.தனுர்தாஸ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி அவர்களுக்கு சமர்ப்பணம்.

:  https://youtu.be/CogNPdPzfY8



Monday, February 23, 2026

the most merciful Bashyakarlu Swami Ramajunar

 


காரேய் கருணை இராமானுசன்

திருமலை அநந்தான்பிள்ளை தோட்டம் - திருமலை திருப்பதி

 

Saturday, February 7, 2026

Swami Udayavar Guru Pushyam purappadu 2026

 

Swami Emperumanar Ramanujar Surya Prabhai purappadu

at Boothapuri Sriperumpudur


Guru Pushya uthsavam on 1.2.2026

https://youtu.be/O4JaoEJLZRM

Friday, September 12, 2025

Udayavar at Thondanur !

 


 


Nammi  Iramanusan at Thondanur near Melukote –

  this thirumeni was installed by  His Holiness Sri Sri Yathiraja Jeeyar Swami   

of Thirunarayanapuram – a few years ago !!


Sunday, July 27, 2025

Swami Ramanujar places !! ~ Udayavar Anushtana kulam !!!

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு

ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி  !!!

Swami Emperumanar and a post on this person !!



We go to Temples daily and worship Emperuman – frequently we visit other Divyadesams and other important places where there are glorious ancient temples of our Emperuman and some newly built Temples too ..  life for a Srivaishnavaite is simple – surrender unto Emperuman through Acaryas, live in divyadesams, visit Temple daily, do kainkaryam of every sort in Temples and places associated with Ithihasa Puranas and Acaryas.

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியை அடைந்து  உள்ளம் தேறி*

The aim of life is to reach Him by serving Him and those who do kainkaryam to Him. Srivaishnavaite way of life is singing paeans, chanting divyaprabandham, doing service and having darshan at His various abodes 

சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நாகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று  ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம்.  ஆழ்வார்கள் மங்களாசாசனம் பண்ணின திருத்தலங்கள், ஆழ்வார்கள் ஆசார்யர்கள், வாழ்ந்த, அவர்களோடு சம்பந்தம் உள்ள புண்ணிய பூமிகளுக்கு சென்று சேவித்தல், கைங்கர்யம் செய்தல் சிறப்பு.  நம் யதிகட் இறைவன் ஸ்வாமி இராமானுஜருடன் சம்பந்தம் கொண்ட ஒரு புண்ணிய பூமியை பற்றிய சிறப்பு பதிவு இது !

Of the three great exponents of Vedanta philosophy, Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar has the pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, ThiruppavaiJeeyar, NumKovilannan, amongst other names.  Worshipping Sri Ramanujar at his Avathara sthalam (birthplace) Sriperumpudur  and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain.  

The list of places associated with Emperumanaar, is long .. .. as he travelled long and wide during his 120 years.  Some of them would include :  Thiruvallikkeni, Sriperumpudur, Thirukachi, Thirumala Thirupathi,  Thiruputkuzhi, Thiruvellarai, Thiruvarangam, Maduranthagam, Thirukoshtiyur,  Thondanur, Thirunarayanapuram, Kachmeeram, Pushkar,  Thiruvananthapuram, Srikurmam, Thiru Puri Jagannatham (not in this order !!)

You may have brushed aside the news that Highways Department is preparing the estimate for the construction of a bridge across the Palar River at Sevilimedu on the Kancheepuram-Vandavasi SH 116 that  provides connectivity to areas including Walajahbad, Oragadam, Padappai and Vandalur. The 900-metre-long bridge is to come up adjacent to an existing one which is two lanes wide. “The proposed one too will be two lanes wide so that one bridge can be used for outbound traffic and the other, in the opposite direction,” explained an official.

Palar (பாலாறு pālāu  literally "milk river") rises in the Nandi Hills in Chikkaballapura district of Karnataka state, flows 93 kilometres (58 mi) in Karnataka, 33 kilometres (21 mi) in Andhra Pradesh and 222 kilometres (138 mi) in Tamil Nadu before reaching its confluence into the Bay of Bengal at Vayalur about 75 kilometres (47 mi) south of Chennai. It flows as an underground river for a long distance only to emerge near Bethamangala town, from where, gathering water and speed, it flows eastward down the Deccan Plateau. The Towns of Bethamangala, Santhipuram, Kuppam, Mottur, Ramanaickenpet, Vaniyambadi, Ambur, Melpatti, Gudiyatham, Pallikonda, Anpoondi, Melmonavoor, Vellore, Katpadi, Melvisharam, Arcot, Ranipet, Walajapet, Kanchipuram, Walajabad, Chengalpattu, Kalpakkam, and Lattur are located on the banks of the Palar River. Of the seven tributaries, the chief tributary is the Cheyyar River.  – of particular reference to a place situate on its bank is Sevilimedu !! – does not strike any bell ?

செவிலிமேடு (Sevilimedu), தமிழ்நாடு மாநிலத்தில் - காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஒரு பகுதி.  செவிலிமேடு பாலாற்றின் கரையில் உள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே 4.1 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

யதிகட்கெல்லாம் இறைவன் என புகழ்ப்பெற்ற ஸ்வாமி இராமானுஜர் -   சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் [25 April 1017] அவதரித்தார். தன்னுடைய பதினாறு வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை மணந்தார். திருமணமான சில மாதங்களில் தந்தையை இழந்தார். பின், கல்வி கற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார். காஞ்சிபுரத்திற்கு பக்கத்திலுள்ள திருப்புட்குழி என்ற ஊரில் யாதவப்பிரகாசர் என்ற அத்வைத பண்டிதரிடம் கற்றார். ஆசிரியர் வேத வார்த்தைகளுக்கு பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதினால், பகவத் இராமானுஜர் அவரிடமிருந்து விலகினார். அதன் பின் தனக்கு வரும் சந்தேகங்களை, காஞ்சி ஸ்ரீவரதனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்யும் வேளாள குலத்தவரான திருக்கச்சிநம்பி என்ற கஜேந்திரதாசரிடம் தீர்த்துக்கொண்டார்.  திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனைப்படி, தினமும் காஞ்சி ஸ்ரீவரதனுக்கு சாலைக் கிணற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்து சமர்ப்பித்து வந்தார். சாலைக் கிணறு காஞ்சிபுரத்துக்கு அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் வழியில் இருக்கிறது. ராமானுஜர் இங்கிருந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தினசரி நடந்து சென்று கைங்கர்யம் செய்து வந்தார்.  நிற்க !  இதற்கிடையே அவர்தம் வாழ்வில் ஒரு மிகப்பெரிய நிகழ்வு நடந்தேறி இருந்தது !!!

அக்காலத்தில் கல்வி ஞானம் பெறுவது கடினமானது !  சரியான குருவும், அவருக்கு சரியான சிஷ்யரும் அமைவது சிரமங்கள் மிக்கதே !!  திருப்புட்குழியில் வாழ்ந்து வந்த யாதவ பிரகாசர்  மிகவும் சிறந்த படிப்பாளி. இராமனுசனுடன்,  அவர் சித்தி மகனான கோவிந்தனும் அங்கேயே பயில வந்தார். யாதவர் அத்வைத சித்தாந்தத்தை போதித்து வந்தார்.  அவர் கூறும் கருத்துகள் விபரீதமாக இருந்தன. பொருந்தாதப் பொருளைக் கூறும் போதெல்லாம் இராமானுஜர் அதைத் திருத்திக் கூறுவார். ஒரு முறை ‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ ’ என்ற வேதத்துக்குப் பொருள்- பிரம்மத்துக்குக் கண்கள் கப்யாஸம் குரங்கின் பின்புறம் போல் இருக்கிறது என்று கூற, உடையவர் வேதனையுடன் - ‘அந்தப் பிரம்மத்துக்குச் சூரியனால் அலர்த்தப்படுகிற தாமரை போன்ற கண்கள்’  என்று உண்மைப் பொருள் இருக்கப் பிரம்மத்தை இப்படி இழிவுபடுத்தலாமா என வினவினார்.

இது போன்று அபிப்ராய பேதங்கள் மிக, இராமானுஜர் மேல் கோபம் கொண்ட யாதவப்ரகாசர்  ஒரு சூழ்ச்சி செய்தார். காசிக்கு அவர் சீடர்களுடன் யாத்திரைக் கிளம்பினார். காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமானுஜரை தண்ணியில் மூழ்கடித்து விடுவதே அவர் திட்டம். அது தெரியாமல் இராமானுஜரும் கோவிந்தரும் மற்ற பிள்ளைகளுடன் கிளம்பினர். விந்திய மலையை சமீபிக்கும் பொழுது கோவிந்தருக்கு இந்த சூழ்ச்சித் தெரிய வந்து. உடனே தன் தமையனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி தப்பித்துப் போகும்படிக் கூறிவிட்டு அவர் அந்தக் குழுவில் போய் கலந்து விட்டார்.  திக்குத் தெரியாத காட்டில் கண் போன போக்கில் இராமானுஜர் நடந்து, களைத்து, மாலை இருட்டத் துவங்கிய நேரத்தில் மிகவும் கவலைக் கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு வேடனும் வேடுவத்தியும் அவர் முன் தோன்றி ஏதாவது உதவி தேவையா என்று கேட்டனர். அவர்கள் காஞ்சிக்குப் போவதாகச் சொல்லவும் நிம்மதி அடைந்த இராமானுஜர் அவர்களுடன் நடக்கத் தொடங்கினார். இரவு முழுதும் பயணித்தனர். நடுவில் ஒரு முறை வேடனின் மனைவி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். அனால் வேடனோ உடனே நீர் தேடிப் போகாமல் காலையில் இனிய நீர் கிடைக்கும் பொறுத்துக் கொள் என்றார். விடிகாலையில் கிணறு ஒன்றைக் கண்டனர். அங்கிருந்து நீர் இறைத்து வேடுவன் மனைவிக்குக் கொடுத்தார் இராமானுஜர். நீர் அருந்திய பின் நொடி நேரத்தில் வந்த இருவரும் மறைந்து விட்டனர்.

 

உடையவருக்கு உதவ பெருமாளும் தாயாரும் - வேடுவன் வேடுவச்சியாக வந்து, அவரை அதி பத்திரமாக திருக்கச்சிக்கே கொண்டு சேர்த்து அருள் பாலித்தனர்.  அவர்களை  கரையேறி  தேடி பார்த்த இளையாழ்வாரும்   “இது என்ன இடம்? எந்த தேசம் ? எந்த ஸ்தலம் ?” என்று வினவி - அங்கிருந்தே தெரிந்த திருக்கோவிலின் விமானத்தை கண்டு அதிசயித்து, பிரமித்தார்.   பின்னர் அனுதினமும்  சாலைக் கிணற்றில் இருந்து  பெருமாள் திருவாராதனத்துக்குத் திருமஞ்சன நீர் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். அத்தகைய அதி சிறப்பு வாய்ந்த  அந்தக் கிணறு இன்றும் செவிலிமேடு கிராமத்தில்  இருக்கிறது.  இது வந்தவாசி செல்லும் பாதையில், பாலாறு பாலம் மிக அருகேயே உள்ளது. செவிலிமேடு   கிராமத்தில் சில நூறு குடும்பங்கள் உழவு தொழிலோடு சம்பந்தப்பட்டு வாழ்ந்து வருகின்றது.

நிற்க !!!  நிற்க !!!  இது எம்பெருமானாரின் வரலாற்று பதிவல்ல !!  - அண்டை மாநிலமான கர்நாடகத்தில், உடையவர் 12 ஆண்டுகள் வாழ்ந்த மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் - அவருக்கு அனுதினமும் உத்சவங்கம் அற்புதமாக நடக்கின்றன.  உடையவரோடு நேரடி தொடர்புடைய - 'சாலைக்கிணறு' இன்று எந்த நிலைமையில் உள்ளது தெரியுமா ??

இன்றும் அச்சாலையோர கிணற்றிலிருந்து பெருமாளுக்கு தினமும் தீர்த்தம் சமர்ப்பிக்க படுகிறது என அறிகிறேன்.   வைகுண்ட ஏகாதசி முடிந்து, 12ஆம் நாள் அனுஷ்டான குள உற்சவம் என்று நடக்கிறது.  வருடந்தோறும் அத்யயன உற்சவத்தில் இயற்பா சாற்றுமறைக்கு மறுதினம் காஞ்சி பேரருளாளன், எம்பெருமானார் உடையவருடன்  சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி அனுஷ்டான குள உத்ஸவம் கண்டருளுகிறான். திருக்கச்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவிலிலிருந்து பெருமாள், உபயநாச்சியார் ஸ்ரீபாஷ்யகாரருடன் மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு அனுஷ்டான குளம் எழுந்தருளுகிறார். செவிலிமேட்டில் உள்ள இம்மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் ஸ்ரீ பாஷ்யகாரர் சாலைக்கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்.  சாலைக்கிணற்றின் தீர்த்தத்தால், பெருமாளுக்கு  திருமஞ்ஜனம்  நடைபெறுகிறது.  பின்னர் பெருமாள் சார்ங்க தந்வாவாக (வில்லை சாற்றிக் கொண்டு வேடுவகோலத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரருடன் விளக்கொளி எழுந்தருளுகிறார். விந்த்ய மலையிலிருந்து ஸ்ரீபாஷ்யகாரருடன் நடந்து வந்தான் வரதன்.  விந்த்ய மலைக் காடுகளிலிருந்து எவ்விதம் எழுந்தருளினானோ அதேபோன்று சிறிது காட்டு வழிப்பயணம்.   



உத்சவம் என்னமோ சிறப்புதான் !  ஆனால்  'சாலை கிணறு' - சரியாக இல்லை !!.  சில ஆண்டுகள் முன்னர் மிக மோசமாக இருந்ததாம்.  இப்போது - அந்த கிணறு ஒரு சிறிய கேட் பூட்டுடன்.  எம்பெருமானரோடு சம்பத்தப்பட்ட, அவரும் கூரத்தாழ்வானும், நித்யநியமனம் செய்த அனுஷ்டான குளம் - சரியாக பராமரிக்கப்படாமல்.  குளத்தில் நீரும், நிறைய தாமரை மலர்களும் இருந்தன !!  அருகே உள்ள உடையவர் கோவில் பளிச்சென்று இருந்தது - அதற்கு காரணம் வெல்டர் சுந்தரமூர்த்தி என்ற ஒரு சிறந்த மனிதர்.

கடந்த வருஷம் எங்கள் தூசி மாமண்டூர் கிராமம் செல்லும்போது - இங்கே சென்றபோது மூடி இருந்தது.  நேற்று (சனிக்கிழமை 26.7.2025) காலை சென்றபோது கோவில் திறந்து இருந்தது, சன்னதி மூடி இருந்தது.  சில சிறுவர்கள் மண்டபத்தில், தாமரை மலர்களை தொடுத்துக்கொண்டு இருந்தனர்.  அந்த மாலையை உடையவருக்கு சமர்பித்துவிட்டு, எங்கள் கிராமம் சென்று - ஸ்ரீ சுந்தரவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாளை சேவித்து திரும்பி வந்தேன்.




காவி வேஷ்டி கட்டி இருந்த - சுந்தரமூர்த்தி, கற்பூர ஹாரத்தி காண்பித்து, தீர்த்த, திருத்துழாய் பிரசாதங்களும் அளித்து, முதலியாண்டானும் சாதித்தார். மிக்க ஆர்வத்துடன், அங்கே சுரங்க பாதை உள்ளதாகவும், அது நேராக அத்தி வரதர் குளத்துக்கு செல்லும் எனவும் கூறினார்.  சன்னதி உள்ளே சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாம் - சிறிய ஓட்டை ஒன்றில் அத்தி வரதருக்கு அங்கிருந்தே பால் அமுது செய்துவித்தோம்.

இந்த சிறிய திருக்கோவில், ஸ்ரீவரதராஜஸ்வாமி தேவஸ்தானத்துக்கு உட்பட்டது என ஒரு போர்டு உள்ளது.  ஆனால் - கோவிலுக்கு எந்த விதமான சகாயமும் வருவதில்லையாம். வெல்டிங் தொழில் செய்யும்   திரு  சுந்தரமூர்த்தி, 2001ல் தீர்த்தக் கிணறு என்று ஒன்று உள்ளது என்று நண்பர் கூறியதை கேட்டு,அவ்வமயமே  இராமானுஜரை பற்றி கேள்விப்பட்டுள்ளார்.  அவர் தினமலர் பேப்பர் கட்டிங் ஒன்றை காட்டினார் !!  அதில் எழுதி இருந்தது :  அவர் வந்த சமயத்தில்  சிலர் சீட்டாடிக்கொண்டு இருந்தார்கள். நிறையச் சரக்கு பாட்டில்கள் என குற்ற கூடாரமாக இருந்தது. அவருக்கு மனது கஷ்டமாக இருக்க, அவர் தம் நண்பர்கள் சிலர் உதவியுடன்,   புதர் போல வளர்ந்து இருந்த செடிகொடிகளை நீக்கி,  சுத்தம் செய்து, இன்றுவரை பராமரித்து வருகிறார்.  திருவாதிரை திருநாளில், வருபவர்களுக்கு அன்னதானம் முதலியனவும் செய்து வருகிறார். 

ஒல்லியும் ஒடிசலான தேகத்துடன் தான் சைவ சமயத்தினர்  என கூறும் திரு சுந்தரமூர்த்தி, சில நண்பர்கள் உதவியுடன் இந்த சன்னதியை தினமும் பராமரித்து வருகிறார்.  காஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருந்தாலும், கைங்கர்யத்து வேறு எவரும் வருவதில்லை.  இவர் தற்சமயம் சில பள்ளி மாணவர்களையும், நண்பர்களையும் கொண்டு, உடையவருக்கு கைங்கர்யம் செய்து - மிக உயர்ந்தவராக உள்ளார்.   

திரும்பி சென்ற சமயம், காலை பூக்கட்டிக்கொண்டு இருந்த சிறுவன் எங்கே என வினவ, அவன் பள்ளி சென்று விட்டான், இன்று மாலை நீங்கள் சமர்ப்பித்தது மிக்க மகிழ்ச்சி என்கிறார்.  உடையவரை கொண்டாடும் நம் போன்ற ஸ்ரீவைணவர்கள் - இந்த சன்னதி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு - இயன்ற கைங்கர்யங்கள் செய்தல் நன்று !!  அவர் எனக்கு விசுவாவசு வருஷத்திய திருவாதிரை (உடையவர் திருநக்ஷத்திரம்) வரும் நாட்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு மஞ்சள் அட்டையும் வழங்கினார்.



 எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், நம் ஆசார்யனை அனுதினமும் கவனித்துக் கொள்ளும், சுந்தரமூர்த்திக்கு, இந்த சந்நிதிக்கு - ஏதாவது உதவி செய்ய மனம் உள்ளோர், அவரை கைபேசி 9944013217எண்ணில் தொடர்பு கொள்ளவும்.  அடுத்ததடவை திருக்கச்சி திவ்யதேசங்கள் சேவிக்க செல்லும்போது, நிச்சயமாக சாலைக்கிணறு சென்று உடையவராய் சேவித்து விட்டு, அன்பர் சுந்தரமூர்த்தியையும் பாராட்ட வைணவ அடியார்களாகிய நாம் கடமை பட்டுள்ளோம்.

கோவில் பழங்காலத்தில், ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் போன்று  பாறாங்கற்களால் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாக சுந்தரமூர்த்தி கூறினார்.  கோவில் மதிலில் உள்ள பன்றி உருவம் பதித்த விஜயநகர சின்னங்களையும் காட்டினார்.

கோவிலை விட்டு வெளியே வந்த போது, அந்த சிற்றூரில் - ஸ்ரீமத் இராமானுஜர் மளிகை ஸ்டோர் - என உடையவர் பெயரில் கடை நடத்தும் பாகவதர் மனதை வருடினார்.  

ஸ்வாமி எம்பெருமானர்  ஒரு க்ருபாகடாக்ஷசீலர்.   கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.  இதோ இங்கே ஒரு பாசுரம். :

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு

ஆறு ஒன்றும் இல்லை மற்று அச்சரண் அன்றி என்று இப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்

கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே !

நமக்கு  வாய்த்த அற்புதமான செல்வம் சுவாமி எம்பெருமானாரே ! உடையவரே! தேவரீர் திருவடிகளைத்தவிர வேறு குறிக்கோள் ஒன்றுமில்லை. அதைத் தருகைக்கு அத்திருவடிகளைத்தவிர வேறு உபாயம் (வழி) ஒன்றும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஆழ்ந்த ஞானத்தாலே நம்பியிருப்பவர்களுக்கும் அந்த நம்பிக்கை இல்லாத எனக்கும் வித்தியாசம் பார்க்காமல் எனக்கு தேவரீரைத் தந்தருளிய இந்த நேர்மையை உண்மையாகச் சொல்லப் பார்த்தால் வாக்கின் சக்திக்கு உட்பட்டதன்றே. 

                      Here are some photos of the kinaru (Well); Anushtana kulam &  Swami Ramanujar sannathi at Salai Kinaru (SEvilimedu);

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam. 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th  July 2025

அடியேன் சிறிய ஞானத்தன் .. .. .. சற்று மன வலியுடன் எழுதிய நீண்ட பதிவு ! - ஏதாவது தவறு இருப்பின் தயை செய்து பின்னூட்டமாகவோ அல்லது WA மெசேஜ் அல்லது கை பேசியிலோ - சுட்டிக்காட்டவும்.