To search this blog

Sunday, September 13, 2026

Avani Amavasai 2026 – நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்

 

Avani Amavasai 2026 – நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்



இப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ?  ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ?? ஆழ்வார் பாடல்களிலே தமிழ் வார்த்தை சொல்லாடலும், மணமும் கமழும்.  தமிழ் தலைவன் என கொண்டாடப்படும் ஸ்ரீ பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதி தனிலே ~ 'அமம், துரகம் ' - என்னே ஒரு சொல்லாடல் !   

Today, 10.9.2026, is Avani Amavasai. On this occasion, Sri Parthasarathi Perumal had Periya Mada Veethi Purappadu at Thiruvallikkeni Divyadesam.

Amavasai is commonly described as the ‘no-moon day’, though its English astronomical equivalent is rather curiously called the New Moon.   Astronomically, the New Moon occurs when the Sun and the Moon are approximately in the same direction as seen from Earth. At this phase, the illuminated side of the Moon faces away from us and the lunar disc is therefore normally invisible to the naked eye.

The New Moon rises and sets roughly along with the Sun and remains close to the Sun in the daytime sky. Its faint disc is lost in the Sun's glare. Only under the special alignment of a solar eclipse does the Moon become dramatically visible as it passes across the face of the Sun.  A day or two later, as the Moon moves away from the Sun in the sky, the first slender crescent becomes visible after sunset. From there begins the waxing phase — the Moon appearing progressively brighter night after night.

The Moon — Nilavu, Chandamama — has always been associated with beauty, serenity and joy. The gradually growing Moon also naturally evokes a sense of hope and renewal. For us, Srivaishnavas, however, our ultimate faith is in surrender at His Lotus Feet. He who sustains the mountains, the vast skies, the winds and the entire universe will surely protect us from every suffering — even from the dreaded Naraka.





Here is a beautiful verse from Sri Peyazhwar’s Moondram Thiruvanthathi, together with photographs from this evening’s Avani Amavasai Purappadu at Thiruvallikkeni Divyadesam.

கிருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலே ஏவப்பட்டு பெரியகுதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நரகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார் பேயாழ்வார். 'அமஞ்சூழ்ந்து' – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படியாக, எனவே இவற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். 'துரகம்' – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி. [நன்றி : திரு கச்சி ஸ்வாமிகள் PBA அண்ணங்கராச்சார்யர் உரை - திராவிடவேதா.org]  

இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,

அமஞ்சூழ்ந்து  அறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்

நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,

துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.  

பனியாலே சூழப்பட்டிருக்கிற வெள்ளிப்பனி  இமயமலையையும், பெரிய ஆகாயத்தையும், வாயுவையும், அமம் சூழ்ந்து (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து, தெள்ளத்தெளிவாக விளங்கி  கண்ணெதிரே வந்து தோன்றின, குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை, திருக்கையால் பற்றி - அந்த அரக்கன் தன்  வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் ஸ்ரீமன் நாராயணன் , நம்மை, யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் !  

Sri Peyazhwar beautifully reminds us of our eternal Protector — Sriman Narayana.

In Krishnavatara, when the mighty asura Kesi came in the terrifying form of a horse to destroy Krishna, the Lord seized him and tore open his mouth, putting an end to the demon.  Peyazhwar assures us that the very Lord who destroyed Kesi will prevent us from approaching the Naraka ruled over by Yama.  The imagery of the pasuram is striking. The enormous horse appears as though it could overwhelm the snow-clad mountains, the vast heavens and even the rushing winds. Yet such terrifying might proved powerless before the Lord. He who protects and sustains the mountains, the skies, the winds and all creation will surely protect those who surrender unto Him.

Let us therefore bow before Sriman Narayana, surrender at His Lotus Feet and seek the protection so beautifully proclaimed by Peyazhwar.

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar













Saturday, September 12, 2026

Srivilliputhur Raja gopuram from distance !

 

ஆன்மீகத்தை சிறப்பிக்கும் பல பழமொழிகள் உண்டு.  கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா !; கோபுர தர்சனம் கோடி புண்ணியம்!! என்றார்கள்.  ஒரு ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு தூரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவு தூரமும் புண்ணிய பூமி என சிறப்பு.  அற்புதமான உன்னத கோவில்களின்  இராஜ கோபுரம், உயரமாக, எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கட்டப்பட்டிருக்கும்.   பண்டை கால மன்னர்கள் அற்புதமான திருத்தலங்களையும் - அங்கே சிற்ப வேலைப்பாடுகள் திளைக்கும்  மிக உயர்ந்த கோபுரங்களையும்  கட்டினார்கள்.

The tall Rajagopuram of Sri Vadabathrasayee  192 ft (59 m), 11- tired tower   is the official symbol of the Government of Tamil Nadu (Sri Vatapatrasayi Temple Tower).   The Rajagopuram is not just a monument; it is a beacon of devotion, guiding countless souls on their spiritual journey.



Photo of Rajagopuram taken few years ago ! from Srivilli Thiruvannamalai temple ~ about 5 km away !!

Friday, September 11, 2026

Brahmothsavam ~ thirukkovil mariyathai for Battacharyar 2022

 

நம் சனாதன தர்மமும் ஹிந்து சமயமும் அற்புத வாழ்வியல் நெறிகள்.  நம்மை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தும் இந்த அற்புத தர்மத்தில் மிக சிறப்பான சடங்கு சம்பிரதாயங்களை நம் பூர்வர்கள் ஏற்படுத்தி உள்ளனர். ஸ்ரீ வைணவ திருத்தலங்களில் ப்ரஹ்மோத்சவம்  சிறப்பானது.  பெரிய வாகனங்கள், பூமாலைகள், அழகு வஸ்திரங்கள், ஒன்று கூடும் மக்கள் என பலப்பல !!  .. .. .. இது எம்பெருமானுக்கு அற்புத கைங்கர்யம் செய்யும் அர்ச்சர்களுக்கு மரியாதை எனும் சிறப்பு ஏற்பாடு பற்றிய பதிவு.

திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம் ~ சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆகதெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி  மாதத்திலே  பிரம்மோத்சவம். கொரோனா காரணமாக 2020ல் உத்சவங்கள் நடைபெறவில்லை.. ..  

ஒவ்வொரு ஆண்டும்  பிரம்மோத்சவம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.  பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து’  எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன் துவங்குகிறது.  அடுத்த நாள்,  அங்குரார்ப்பணம்.   உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்'  - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி  ஏற்றப்படுகிறது.  முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்துஆவாஹனம் செய்து - தினமும்  வாகன புறப்பாடு  முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும்  தேவதைகளுக்கு  பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது.  பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம், சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு சிறப்பு.  திருத்தேர் அதி விசேஷம். ஒன்பதாம் நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம் 'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு  முடிந்து, கொடி  இறங்குகிறது.  

பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது.  ஸ்ரீ பார்த்தசாரதிஆண்டாள் ஏக பீடத்தில்திரு தெள்ளியசிங்கர்சக்கரவர்த்தி திருமகன்,  ஸ்ரீ வரதர்ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர்  ~ மற்றும் அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று -  த்வாதச ஆராதனம் சிறக்கிறது.  பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம்இரண்டாவதாயிரம் (திருமொழி)இயற்பா சேவிக்கப்படுகிறது.  பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவிக்கப்படுகிறது.  இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு நடக்கிறது.  புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது.  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளிபட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால்  மிக அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ளன.  



நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை.  திருக்கோவில் திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர் தம் திருமாளிகைக்கு  சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன் இவ்விழா முடிவடைகிறது.   இவ்வருடம், சிறப்புற நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் – 26.4.2022 நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின் போது அடியேன் எடுத்த ஒரு குறுங்கானொளி இங்கே.

: https://youtu.be/by5sIXGwTCw

Here is a short video  taken by me  on 26.4.2022  depicting  Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar.  Incidentally with this Uthsavam Sri Parthasarathi Battar had performed dwajarohanam 50 times ! which is indeed a significant accomplishment. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
Mamandur Veeravali Srinivasan Sampathkumar

Thursday, September 10, 2026