Sri Parthasarathi Emperuman muthangi sevai
– Thiruvallikkeni Pavithrothsavam
day 5 26082026
Thiruvallikkeni
Pavithrothsavam 4 – 2026
திருவல்லிக்கேணி
திவ்யதேசத்தில் திருப்பவித்ரோத்சவம் - தினமும் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
திருவீதி புறப்பாடும், யாகசாலை, திருவாய்மொழி கோஷ்டி என சிறப்புற பரிமளித்து வருகிறது. 25.08.2026 அன்று இவ்வுத்ஸவத்தில்
நான்காம் நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி - ஸ்ரீ கண்ணன் எம்பெருமான், பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரத்யம் பண்ணினவன். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம். எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு அற்புத லீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான். யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர். கண்ணனும் பலராமனும் “காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான். அத்தகைய மணிவண்ணன், யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக் கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள். என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை காண் என்கிறாள்.
இதோ கலியன் திருமங்கை
மன்னனின் வார்த்தைகளில் ஒரு பாசுரம். : -
உந்தம்
அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட
மோதவுங்கில்லேன் நுங்கள்தம் ஆநிரையெல்லாம்
வந்து
புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்
போதங்கு நில்லேல்! ஆழியங் கையனே வாராய்.
திருவாழியினால் அழகு
பெற்ற திருக்கைகளை உடையவனே! எங்கள் கண்ணபிரானே ! நீ செய்கிற
தீமைகளைக் கண்டால், உங்கள் பிதாவாகிய நந்தகோபர் சீற்றம் கொள்வார். [யசோதையாகிற]
நானோ, என் கையிலுள்ள கொம்பினால் உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன், உங்களுடைய
பசுக்கூட்டங்களெல்லாம் காடுகளில் மேய்ந்து திரிந்து, மீண்டு
வந்து ஊர்க்குள் புகும்போது ஆகாசத்திலுள்ள தேவதைகள் கண் எச்சில் படுமாறு காணும்
மாலைப்பொழுதிலே நாற்சந்தியிலே நிற்கவேண்டா, என்னருகே வந்திடாய் என யசோதை
சீராட்டுகிறாள்.
அத்தகைய அழகிய மணிநிறக்
கண்ணபிரான் அற்புதமான திருவபிஷேகம், மலர் மாலைகள், திருவாபரணங்கள், பதக்கங்கள், யக்னோபவீதம், திருபவித்ர மாலைகள் அணிந்து
காட்சியளிக்கும் சில படங்கள் இங்கே.
Here are some photos of
Sri Parthasarathi perumal purappadu – Pavithrothsavam day 4 at Thiruvallikkeni
on 25.8.2026.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
…a candid
capture of a luminous personality who prefers the shadows to the spotlight.
:
Thiruvallikkeni Periya murai archaga kainkaryam – Sri Durai
Sarathi battar
Most people are drawn to the flash, eager to be in the limelight. Then there are those who are camera-shy, preferring to remain quietly in the background—a candid capture of one such bright personality.
A treasure in stone from Halebidu! the countenance of Chaturbhuja Sriman Narayana
“சங்கசக்ர கதாபாணே துவாரகா நிலைய அச்சுத
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம்”
சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் ஸ்ரீமன்
நாரணன் தரித்திருப்பது சரணாகத ரஷணத்துக்கு !’ தன்னை அடைந்தாரை என்றென்றும் காக்கும்
உலகரக்ஷகரே தாமரை போன்ற கண்களையுடையவரே சரணடைந்த என்னைக் காத்தருளும்.
Sriman Narayana stands in
stately samabhaṅga, almost perfectly upright, conveying stability, serenity and
divine sovereignty. The tall kirīṭa-makuṭa, composed of layer upon layer of miniature ornament, rises
like a temple tower above the composed face. The deity is sumptuously adorned: multiple
necklaces and long beaded hāras; elaborate earrings, armlets, bracelets and
anklets; an ornamental girdle and richly patterned lower garment; the sacred
thread and delicate chains carved as though they were pliable jewellery rather
than stone.
Behind Him is an extraordinarily ornate makara-toraṇa. Its curling foliage and fantastic aquatic creatures rise towards the crowning kīrtimukha, forming both a protective arch and a frame of celestial splendour. The smaller figures near His feet are attendant divinities or worshippers, deliberately reduced in scale to emphasise Viṣṇu’s majesty.
The most remarkable feature is the contrast between the deity’s calm,
unperturbed countenance and the almost restless profusion of decoration
surrounding Him. The ornaments, foliage and mythical creatures seem to move and
multiply, while Sriman Narayana remains serenely still at the centre—the
eternal principle of preservation amidst the ceaseless movement of creation.
Halebidu—formerly Dorasamudra—was the
great capital of the Hoysala Empire. Its Hoysaleśvara Temple was begun around
1121 CE under King Viṣṇuvardhana and fashioned mainly from soapstone, whose relative
softness enabled sculptors to produce remarkably minute, jewellery-like detail.
Although the twin temple is dedicated to Śiva, its exterior embraces an
expansive sacred world containing Śaiva, Vaiṣṇava and Śākta imagery. In 2023, Halebidu, Belur and
Somanathapura were jointly inscribed by UNESCO as the Sacred Ensembles of the
Hoysalas.
A photo taken during my visit in Oct 2022
Regards – S Sampathkumar
25.8.2026