To search this blog

Monday, October 21, 2024

Purattasi Sani 5 ~ Thiruvallikkeni 2024

Purattasi Sani 5 ~ Thiruvallikkeni 2024

Sri Azhagiya  Singar purappadu 

 

 

There could be some oddities ! ~ 19th Oct 2024 was day 2 of Tamil month of Aippasi whence we would celebrate Deepavali and the birth celebrations of our Acarya Swami Manavala Mamunigal.  To complete, it was 5th week Purattasi Sanikizhamai and there was grand purappadu of Sri Thelliya Singar at Thiruvallikkeni divyadesam.

இன்று  ஐப்பசி மாதத்தில் 2ம் நாள் - பரணி  நக்ஷத்திரம்.  எனினும் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையாக கொண்டாடப்படுகிறது.    இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீ  அழகிய சிங்கர் எம்பெருமான் பெரிய மாட வீதி புறப்பாடு  கண்டருளினார்.  கோஷ்டியிலே ஸ்ரீபேயாழ்வாரின்  மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.

 

பரபக்தி பரக்ஞான பரமபக்தியையுடையராய், 'ஞான திருப்தஸ்ய யோகின' எனும்படியே, லோக யாத்திரையில் கண்வையாதே அலௌகிகராய், முதல் ஆழ்வார்களில், மாடமாமயிலை என புகழ்பெற்ற தலத்திலே அயோனிஜராய்   அவதரித்து 'மஹ்தாஹ்வயர்' என்கிற தமிழ் தலைவன் பேயாழ்வாரின் அமுத வரிகளில் மூன்றாம் திருவந்தாதி பாடல் இங்கே (இரண்டாம் பாடல்)

 

இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்*

பொன்தோய் வரை மார்பில் பூந்துழாய்*  அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே *  உன்னை

மருக்கண்டு  கொண்டு என் மனம்  ..

 


At Thirukkovalur idaikazhi, standing alongside Poigaippiran and Boothathazhvaar, Sri Peyalwar has darshan of Sriman Narayan with the aid of the lamps lit by the two Azhwaars.  Having had good darshan of that complete Sriman Narayana  along with pirattiyar, holding divine arms – Alwar declares that – the moment, he realized Sriman Narayana, he could rid of all sins as also the continuing trouble of rebirth – the very thought of realization takes him to moksha, is what Alwar proudly declares.


மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில், மற்றைய ஆழ்வார்கள் ஏற்றிய வையம் மற்றும் அன்பு எனப்படுகின்ற திருவிளக்குகளின் ஒளியாலே திவ்யமங்கள ஸ்வரூபனனான  எம்பெருமான்  கண்ட பேயாழ்வார்,   "திருக்கண்டேன்" என்று தொடங்கி, பகவானைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனுடன் கூடிய பிராட்டியைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனோடு கூடிய திவ்ய ஆயுதங்களைத் தரிசிக்கப் பெற்றேன் என்று தான் கண்ட தரிசனத்தை அறிவித்தார். ஆக, அந்த ஆயனான கண்ணனின் தரிசனத்தைப் பெற்றேன் என்று தொடங்கி, "இன்றே கழல் கண்டேன்" என்பதன் மூலம், கண்ணனே! உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன் என்றும், "ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்" என்பதன் மூலம் ஜென்ம பரம்பைரைகள் இனி என்னைத் தொடரமுடியாதபடி ஒழித்திட்டேன் என்றும் உரைக்கிறார். கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைச் சரண் பற்றியதால் கிடைத்த பலன், பிறவித் துன்பம் முடிந்தது என்று அறுதியிடுகிறார் பேயாழ்வார். 

ஸ்ரீமன் நாராயணனைக் கண்டுகொண்ட அந்த க்ஷணத்திலேயே மற்ற  எல்லாப் பிறவிகளையும் இனித் தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன், என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம் கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் பாசுரம் மூலம்.

Here are some photos taken during  Purattasi Sani 5 periya maada veethi purappadu.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravalli Srinivasan  Sampathkumar
21.10.2024
 

நன்றி :  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி உரை ~dravidaveda.org

  





Sunday, October 20, 2024

Ganesha in lights !!

 

 

Beautifully lit Vinayaka at Venkatrangam Street, Triplicane

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு எள்ளளவும்

சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித் தெள்ளியனாய்த்

தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன் உள்ளதை உள்ளபடி

 உகந்தளிப்பாய் கணபதியே

 

3D lighting is the application of light and shadows to a computer-generated scene. Professional lighting artists use different 3D software applications to illuminate a scene.

 


This is no 3D but the innovative design of Lord Vinayaka put up on the foreface of an elephant and its trunk creates a 3D effect

 
S Sampathkumar
20.10.2024

Saturday, October 19, 2024

dancing Sri Krishna at Srirangapatna

 

அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர்காண்மின்

 


ஸ்ரீரங்கப்பட்டணா ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் பிரகாரத்தில் உள்ள 

கல்லால் ஆன துளசி மாடத்தில் எழுந்து அருளிஇருக்கும் கண்ணன்

Dancing Krishna with Sudarshana chakram and Shankam – taken at Srirangapatna, Karnataka.

Friday, October 18, 2024

Thula Sankramana Punniya Kalam 2024

Today 17.10.2024 is significant .. .. Pournami  pirappu – Thula sankramana punya kalam;  Aippaisi pandigai – the month where we celebrate the birth of Muthal Azhwargal and our great Acaryan Swami Manavala Maamunigal.



இன்று சிறப்பான நாள் - ரேவதி நக்ஷத்திரம் - முழு நிலவாக சந்திரன் பவனி வரும் பௌர்ணமி நன்னாள்.  இன்று துலா ஸங்க்ரமண புண்ய காலம்.    துலா மாசம் ஒரு சிறப்பான மாதம்  - துலை (இராசியின் குறியீடு:  துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள்.

ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி - ஆகாயத்தில் க்ரஹங்கள் ஸஞ்சரிக்கும் 360° வட்டப் பாதையை 30° கொண்ட 12 பகுதிகளாகப் பிரிப்பர். சித்ரா நக்ஷத்ரம் நிற்கும் புள்ளியை துலா ராசியின் தொடக்கமாக வைக்கப்படுகிறது.   புண்ய காலங்களில் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் முதலியவற்றைச் அவசியம் செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. செய்தால் மற்ற நாட்களில் கிடைப்பதை விட அதிக புண்யத்தைத் தரும்.  ஸூர்யன் வருடம் தோறும் 6 மாதம் வடக்கு நோக்கி நகருவதை உத்தராயணம் என்றும் 6 மாதம் தெற்கு நோக்கி நகருவதை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.  ஸூர்யனின் இந்த நகர்வினால்  தான் ருதுக்கள் அதாவது பருவ காலங்கள் அமைகின்றன. பருவ காலங்களின் அடிப்படையில் தான் விவசாயம் முதலியவை நடந்து மக்களின் வாழ்க்கையின் பல சிறப்பம்சங்கள் அமைகின்றன.  உத்தராயணம் ஆரம்பித்தவுடன் பாரதத்தில் குளிரும் இரவு நேரமும் குறைந்து வெளிச்சத்தின் காலம் கூடுகிறது. இதன் மூலம் செடிகொடிகளும் அவை மூலம் அனைத்து ஜீவராசிகளும் ஊட்டத்தைப் பெறுகின்றன.  

ஆகவே உத்தராயணத்தின் தொடக்கத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குவது இயற்கையே.  இந்த மாதத்தில் திருக்காவேரியில் புனித ஸ்னானம் செய்வது விஷேஹஸம். காவேரியின் பெருமை புராணங்களில் சொல்லபட்டிருக்கின்றது, அதில் ஐப்பசி துலா ஸ்நானமும் உண்டு.  ஶ்ரீரங்கத்தில், மற்ற மாதங்களில் வடதிருக்காவிரியில் (கொள்ளிடம்) இருந்து நன்னீர் கொணர்ந்து அரங்கனுக்கு திருமஞ்சனம் கண்டருள, இந்த துலா மாதத்தில் மட்டும் தென்திருக்காவிரியில் இருந்து தீர்த்தம் தங்க குடத்தில் கொணர்வர்!



The chants of ‘Jai Jai Maatha, Cauvery Maatha’ and other devotional callings filled the morning air at Talacauvery and the rituals were led by priests.  The chants ‘Ukki Baa Cauvery’ broke the morning mist at Talacauvery as the sacrosanct event of Cauvery Tula Sankramana was witnessed by thousands of devotees.  The holy water gushed out from the ‘Kundike’ at 7.41 am, a minute later than the predicted time. Rituals followed the holy event and the temple towns of Bhagamandala and Talacauvery flourished with devotion on Thursday.  

The roads leading to Bhagamandala and Talacauvery were flooded with devotees from midnight hours even as hundreds of devotees dressed in traditional Kodava attire marched barefoot to the temple from Bhagamandala. A few hundreds of  devotees  carried out ‘padayatra’ from Virajpet and the temple towns were witness to the endless devotions from thousands of devotees. Thousands  took a dip in the holy water even as arrangements were in place to distribute the holy water to the gathered devotees.

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனது பரத்துவத்தை அறுதியிட்டு உரைப்பவர் பக்திசாரர்.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதி பாசுரம் :  


தமராவார்  யாவருக்கும் தாமரை  மேலாற்கும்

அமரர்க்கும் ஆடரவர்த்தாற்கும் - அமரர்கள்

தாள்  தாமரை  மலர்களிட்டிறைஞ்சி, மால்வண்ணன்

தாள்தாமரை   அடைவோமென்று.

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே மிகவும் உயர்ந்தவன்.  அந்த கரியமேனியனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்  பல்வேறு மணம் கமழும் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி  அத்திருவடித்தாமரைகளையே  அடைவோமென்று பக்தராயிருக்குமவர்கள் -  திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்,  ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும், நித்யஸூரிகளுக்கும் மற்றுமெல்லார்க்கும்  மேற்பட்டவராவர். அத்தகைய எம்பெருமானை அனுதினமும் வணங்குவோர்க்கு எல்லா நலன்களும் தானே அமையும். 

Here are some photos of Sri Parthasarathi Perumal siriya mada veethi purappadu on the occasion of Pournami & Thula Sankramana Punya kalam this evening.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.10.2024.