To search this blog

Saturday, August 22, 2026

chasing wealth ! - Raiders of lost ark ... Thiruvallikkeni Thirupavithrothsavam 1 2026

 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருப்பவித்ரோத்சவம் 2026

(Thiruvallikkeni ThirupPavithrothsavam)

 


Imp Pre-script … the first portion in English is about a famous movie, treasure hunt, precious metals and mankind’s perennial attachment to wealth ! – you can ignore the first part and move towards ‘எம்பெருமானுடைய  கடாக்ஷம் பெறப்பெறின்  - if you so desire, though I would request you to read ..



Raiders of the Lost Ark, released in 1981  is one of those rare films that almost perfectly defines the treasure-hunt adventure genre. It introduced the world to Indiana Jones, played by Harrison Ford.  The film is set in 1936. Indiana Jones is an American archaeologist and university professor who also happens to be an extraordinarily capable adventurer.

The U.S. government learns that the Nazis are searching for the Ark of the Covenant—the Biblical chest that, according to the Old Testament, contained the stone tablets bearing the Ten Commandments. The Nazis believe the Ark possesses supernatural power and want to obtain it for Hitler. Jones is sent to find it first. And the chase takes him from: University Peru Nepal Egypt ancient Tanis Nazi submarine base with an extraordinary succession of clues, betrayals, fights, traps and archaeological discoveries.

From time immemorial, Humans have decorated themselves for tens of thousands of years. Archaeologists have found ancient beads made from shells, teeth, bone and stone. Long before people had coins or banks, they were already wearing objects that communicated: “This is who I am.”  An ornament could indicate: wealth, marital status, age, social rank, tribe, community, religious affiliation, political authority, fertility, protection, beauty, connection to ancestors and .. ..    jewellery was portable.

Historically, people have been attracted to certain metals and gemstones for a fascinating combination of rarity, beauty, durability, portability, and symbolism. In fact, the things we call “precious” are not necessarily the metals with the highest industrial price today.  Some of the costliest metals include : Rhodium, Iridium, Palladium, Gold, Platinum, Ruthenium, Osmium   .. Silver and then there are diamonds and other stones !! .. among all these - Gold possesses an almost extraordinary combination of properties:  It is rare—but not impossibly rare. There is enough gold for humans to encounter it, but not enough to make it commonplace. Iron eventually becomes a reddish-brown oxide. Copper tarnishes. Silver blackens. Gold can remain essentially unchanged for centuries.  Gold is one of the most malleable metals. A goldsmith can hammer it into extremely thin sheets and draw it into fine wire. So from ancient times, Gold has been an almost perfect store of wealth.

BUT for devout Srivaishnavaites, Gold, Silver, Diamond or anything else might be irrelevant, insignificant – and the only thing that is cared is the divine Golden feet of Sriman Narayana and kainkaryam unto HIM.

 





நம் எம்பெருமானுடைய  கடாக்ஷம் பெறப்பெறின்  எத்தகைய மனக்களிப்பு உண்டாகும் ? முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் : 

*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்  நம்மேல் ஒருங்கே பிறழுவதே **   ~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹ ரூபாய மயமானவர்,  எம்பெருமான் தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை, தன்னை குளிர நோக்கினமை நம்மாழ்வார் கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம். 

Today (22.8.2026) is  day 1  of Thirupavithrothsavam at Thiruvallikkeni –  and Sri Parthasarathi Perumal  had grand purappadu at Thiruvallikkeni.  Apart from the beautiful crown, the big garlands and His most attractive face, one can worship the silken threads (pavithram) adorning Him. 

.. .. திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்தில்  இன்று பவித்ரோத்சவத்தின் முதல் நாள்..  இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், சங்கு சக்கரங்கள் மறைந்தவாறு சாற்றப்பட்ட பெரிய மாலையுடன், அழகு கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். 

திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல் - திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.  

 

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரை கண்கைகமலம்,

திருவிடமே மார்வம் அயனிடமே  கொப்பூழ்,

ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,

ஒருவிடமொன்றின்றி என்னுள்  கலந்தானுக்கே 

 

சுவாமி நம்மாழ்வார் ~ எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தம்மிடம் வந்தடைந்ததை - 'ஒருவு இடம் ஒன்று இன்றி' -  நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) தன்னோடு சேர்ந்தவனாய் உள்ள எந்தை என அதிசயிக்கிறார். அதிஅத்புதமான நம் எம்பெருமான் - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.  திருக்கண்கள் செந்தாமரை மலர்களாயிரா நின்றன; திருக்ககைகள் - தாமரை மலர்களாயின ; அவரது திருமார்பு - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; திருநாபியோ ப்ரம்மதேவனுக்கு  உறைவிடமாயிற்று;  அத்தகைய சிறந்த எம்பெருமானே நாம் அனுதினமும் வணங்கும், நம்மை உய்விக்கும் ஸ்ரீமன் நாராயணன். 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.  It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.   

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.   

During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti.  In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used.     Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings.  

 

திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப்படுகிறது. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திரலோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)  

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.   

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் முதல் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :   

 

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் –
[ Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
22.8.2026 







Allikkeni Raja 2020 ~ ராஜா, ராஜா, ராஜா - அல்லிக்கேணி ராஜா !

 

ராஜா, ராஜா, ராஜா - அல்லிக்கேணி ராஜா !

தூயகனிமுகனே ! யானை தலையோனே !

ஞான வடிவோனே அல்லிக்கேணி ராஜனே !!

வரணும் வரணும், கணபதியே !! –

வேதனை தீர்ப்பானே ! அதர்மத்தை அழிப்போனே !

 


Vinayaka Chathurthi Coming !  ~  Allikkeni Raja oorvalam 2020

Alaka Nanda ~ Bhageerathi Sangamam ~ Deva Prayagai - Kandam enum Kadi Nagar divyadesam

 

A trip to Bhadrinath dham offers great opportunity to bathe in holy Ganges, be it at Haridwar, Rishikesh and … the Pancha Prayags ! – it will be a great sight to see holy rivers flowing along your path as one makes the pilgrimage for darshan of Shri Bhadri Narayanar.



Here is something on Pancha Prayag :  Vishnuprayag Nandprayag Karnaprayag Rudraprayag Devprayag -  the first four Prayāgs are successive confluences along the Alaknanda. It is only at the fifth—Devprayag—that the Alaknanda meets the Bhāgīrathī and the combined river takes the name Ganga. The Uttarakhand Tourism Department explicitly describes Devprayag as the place where the two merge and “take the name Ganga.”

The Panch Prayāgs — upstream to downstream

1. Vishnuprayagai : -        Dhauliganga joins Alaknanda

2. Nandprayagai :             Nandakini joins the now-enlarged Alaknanda

3. Karnaprayagai : Alaknanda  Pindar joins Alaknanda

4. Rudraprayagai: Mandakini—coming from the Kedarnath region—joins Alaknanda

5. Devprayagai :     Bhagirathi joins  Alaknanda      - the combined river becomes GANGA

On the banks of Ganges at Devaprayagai is our Srivaishnava divyadesam – ‘gangaiyin karaimel kaithozha ninra’ – Kandam enum Kadinagar – Devaprayagai – Shri Ragunathji mandir.  :  https://youtu.be/34ial72DyY0



தேவப்பிரயாகை -  திருக்கண்டமென்னும் கடிநகர் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.  பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.   இத்தலத்து எம்பெருமான்  கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் புருஷோத்தமன்..  பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் அலகனந்தாவும் பாகீரதியும் சங்கமிக்கின்றன.   ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். நம் இராமானுசர் மங்களாசாசனம் செய்த புண்ணிய பூமி.  ஆதி சங்கரர் இங்கே விஜயம் செய்து புனர் நிர்மாணம் செய்துள்ளார்.

 


Bhagirathi itself comes from Gangotri/Gaumukh and is traditionally regarded as the Ganga's source, while from the hydrological perspective the Alaknanda is the longer and larger headstream. But the river is officially called Ganga downstream of the Alaknanda–Bhagirathi confluence at Devprayag.

And this makes your Rishikesh Devprayag Rudraprayag Karnaprayag Nandprayag Vishnuprayag Joshimath Badrinath journey particularly interesting: travelling up from Rishikesh, Devprayag is actually the first of the Panch Prayāgs you encounter, and you are travelling progressively backward through the formation of the Alaknanda system.

According to the traditional account, King Bhagiratha's penance brought the celestial Ganga down to earth to redeem his ancestors. The stream descending through the Gangotri region is therefore called Bhāgīrathī, commemorating Bhagiratha.

There is also a geographical convention: the National Mission for Clean Ganga identifies Bhāgīrathī, emerging at Gaumukh from the Gangotri Glacier, as a source stream of the Ganga. It specifically states that at Devprayag, where Bhāgīrathī joins Alaknanda, the river acquires the name Ganga.

One important geographical clarification: if you travel from Badrinath toward Rishikesh, you encounter the Prayāgs in the reverse order:  Badrinath Vishnuprayag Nandprayag Karnaprayag Rudraprayag Devprayag Rishikesh.  The river itself flows the other way, so its sequence of confluences is Vishnu Nand Karna Rudra Deva. The five confluences are all part of the Alaknanda system, with Devprayag being the final merger with Bhāgīrathī.

                      Badrinath is not itself on the Alaknanda's main confluence sequence at Vishnuprayag; the Alaknanda's headwaters are associated with the Satopanth/Bhagirath Kharak glacier region, while Badrinath is the major pilgrimage landmark on this upper route. The District Tehri source also describes Bhāgīrathī as coming from Gangotri and Alaknanda from the Satopanth/Bhagirath Kharak glacier region.

Interesting !

adiyen Srinivasa dhasan –  Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.8.2026

 

Friday, August 21, 2026

Imposing Shiva at Himalayas ~ என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட .. ஈசனே மாசிலா மணியே

 

An  imposing 20-foot+ [or more]  standing Shiva, His trident rising several feet higher, against the Himalayan slopes…” 



முத்திக்கலப்புரைத்தல் என்பது முத்தியில் (இறைவனுடன் கலந்த பெருவாழ்வில்) அடைந்த பேரின்ப அனுபவத்தை அல்லது நிலைமையை எடுத்துக்கூறுதல் ஆகும்.  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நூலில் உள்ள பிடித்த பத்து என்ற பகுதி இத்துறைக்குச் சான்றாகும். இதோ இங்கே ஒரு பாசுரம்.:

   புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்*

.. பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

.. ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்

.. தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

.. எங்கெழுந் தருளுவ தினியே.

 

The big Shiva - “an imposing 20-foot+  standing Shiva, his trident rising several feet higher, against the Himalayan slopes…”  This  Shiva statue stands on the Rishikesh–Devprayag highway in the Teen Dhara sector, overlooking the Ganga valley, roughly 9–10 km south-west of Devprayag.  Devprayag lies on the Rishikesh–Badrinath highway and is the sacred confluence where the Bhagirathi and Alaknanda become the Ganga.

முதலில் கூறிய பாசுர வரிகள்  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையில் உள்ள பிடித்த பத்து பதிகத்தின் இறுதிப் பாடலாகும். அற்பமான புலால் உடலை, கோயிலாக மாற்றி எளியவனாய் என்னை ஆட்கொண்ட ஈசனே என்று இறைவன் அருளைப் போற்றும் வரிகள் இவை :

இழிந்த புலால் நாற்றம் அடிக்கின்றது என் உடம்பு . அதில் உள்ள துளைகள் தோறும் நெகிழச் செய்தாய். அந்த என் உடம்பைப் பொன்னாலாகிய பெரிய கோயிலாகக் கருதி நீ எழுந்தருளினாய். என் எலும்பனைத்தையும் உருக்கி எளியனாக எழுந்தருளி ஆட்கொண்ட முதல்வனே!  குற்றமில்லாத மாணிக்கமே! பிறப்பு, இறப்பு , வாழ்வின் துன்பங்கள், அறியாமை என்பவற்றின் சார்புகள் யாவும் ஒழித்த ஒளி  வடிவானவனே! பேரின்பமானவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன்:  இனி நீ எங்கு எழுந்தருளுவாய்?

Regards – S Sampathkumar

21.8.2026

Photographed by me on 3.10.2019 – acknowledge : https://shaivam.org for pasuram and meaning !