நாம்
எம்பெருமானை பல்வேறு வாசனை மலர்கள் அளித்து, மிக அழகான திருவாபரணங்கள் சாற்றி, அற்புதமான
பட்டு பீதாம்பரங்கள் சாற்றி - அவரது திருமேனி அழகை அனுபவிக்கின்றோம். தங்க
அங்கி, வெள்ளி அங்கி, மலர் அலங்காரம் இவைகள் தரிசித்து இருப்பீர்கள்.
எம்பெருமானுக்கு கபாயம் எனும் போர்வையும் சாற்றப்படுகிறது. சில திவ்யதேசங்களில்,
இரவு அல்லது அதிகாலை புறப்பாடு கண்டருளும்போது, எம்பெருமான் பனிப்போர்வை போர்த்திக்கொண்டு
அருள் பாலிக்கிறார்.
திருமயிலை
திரு அரவிந்த மாதவர் பரமபத வாசலுக்கு அதிகாலை புறப்பாடு கண்டு அருளும் போது பனிப்போர்வையுடன் எழுந்து
அருளிய அற்புத வைபவம்.
Vaikunda
Ekadasi – at Thirumylai Sri Madhava Perumal Thirukovil, Sri Aravindha Madhavar (wearing Paniporvai) - 25.12.2020





