To search this blog

Thursday, August 13, 2026

Aadi Thiruvathirai 2026 - Udayavar purappadu at Melukote

 

Aadi Thiruvathirai - Udayavar purappadu at Melukote Thirunarayanapuram 2026

Today 10th of August 2026 is – Aadi 25 – Thiruvathirai thirunakshatiram –   of Swami Emperumanar Yathirajar Ramanujacharya.




நலந்தரும் சொல் 'நமோ நாராயணா' என்னும் நாமம்  .. ... ஸ்ரீவைணவர்களான நாம் அனுதினமும் அனுசந்திக்க வேண்டியது - நம் ஆசார்யனின் திவ்யநாமம். ஸ்ரீராமாநுஜ திவ்யநாமத்தை வாயாரச் சொல்லுவோர்க்கு  எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும் என்பது திண்ணம்.  எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப்பெறமாட்டான்;   அத்திருநாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள் - எம்பெருமானாரே !, உடையவரே !!  பாஷ்யகாரரே !  நம்மிராமனுசரே  ~ என விளியுங்கோள் .  !!

Worshipping Sri Ramanujar at his Avathara sthalam and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain.   Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.     

The greatest reformer Sri  Ramanuja gave us many vedantic treatises:  Sri Bashyam, Vedarta sangraha, Vedanta deepa, Vedanta sara, the three Gadyams and more.  Blessed are the people, who regularly recite the 108 songs rendered by his disciple Thiruvarangathu Amuthanar known as “Ramanuja Noorranthathi”.   

We must fall and do service to the lotus feet of Swami Ramanuja ~ immerse ourselves to Him -  “ Ramanujam Yatipatim pranamami moordna”  - prostrate by putting our head at his feet saying  I am worshipping (pranamami!).     There are so many places connected  to him – Thiruvallikkeni, Sriperumpudur, Thirukachi, Thiruputkuzhi, Thiruvarangam, Thiruvellarai, Thirumalai, Maduranthakam, Thirunarayanapuram – the list extends to Delhi, Kashmir, Simhachalam, Puri, Thiruvananthapuram and more 




His birth nakshathiram is celebrated widely ~ at every divya desam, for sure there would be rendering of ‘Ramanuja noorranthathi’ of Thiruvarngathu Amuthanar. 

திருவரங்கத்து அமுதனார், ஒரு அளப்பரிய பக்தர். எம்பெருமானாரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.   அவர் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார்.   இதோ இங்கே ஒரு பாசுரம்.    

இயலும் பொருளும்   இசையத்தொடுத்து, ஈன் கவிகள்   அன்பால்

மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,  மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில்லாத  என் பாவி  நெஞ்சால்

முயல்கின்றனன் அவன்றன்   பெருங்கீர்த்தி மொழிந்திடவே. 

கவிதை பாடுதல் மிகவும் கடினம்.  மொழி இலக்கணம் பழக வேண்டும், நல்ல கருத்தாழமுள்ள பொருளை சரியான சொற்களால், சந்தத்தோடு விவரிக்க தெரிய வேண்டும்.   அத்தகைய விலக்ஷணரான கவிகள், தங்கள் அன்பின் வெளிப்பாடாக சப்தமும் அர்த்தமும்,  நன்கு பொருள் வரும்படியாக  தொடுத்து - அவ்வளவு உயர்ந்தவன் அல்லாதவனும்,   பக்தியற்றதான பாவி நெஞ்சையுடையவனும் ஆன நான்  அவ்வெம்பெருமானாரிடம் பெரும் மையல் கொண்டவனாய் அவரையே துதித்து அவர்தம்  அளவற்றகீர்த்திகளை மொழிந்திட முயல்வது, என் மதியின்மையே !  எனினும் கருணை கடலான நம் இராமானுச முனியை நினைந்துருகி அவரை போற்றி பாடுகிறேன் என்கிறார் - அளவறிய ஞானம் படைத்த திருவரங்கத்து அமுதனார்.  திறமையோ, வார்த்தைகளோ, பக்தியோ முக்கியம் அல்ல, எம்பெருமானார் இராமானுஜரை புகழ்தலே நமக்கு சரியான பாதை.

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்

புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம். 

This year we had the fortune of being at Melukote on 8.8.2026 – and had darshan of Krishna Rajamudi Uthsava theervari at Kalyani Pushkarini.     Here are some photos of Udayavar  purappadu at Melukote Thirunarayanapuram. 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar





Melkote Shri Shelvanarana Swami

 

Panoramic view of the holy Melukote (Thirunarayana Puram), known by several other names such as Vedadri, Yadavagiri, Yadusaila and Dakshina Badarikasrama… — and Jnanamantapa, the pavilion of knowledge.



Sri Cheluva Narayana Swami, photographed near the holy Kalyani Pushkarini thirukulam, with the hill of Sri Yoga Narasimha Temple in the background.

The holy town stands amidst the rocky hill-range of Yadugiri, rising to 3,589 feet (1,094 m) above sea level. It is the only settlement in Mandya district situated above 1,000 metres.

8.8.2026

Sri Kothai Piratti Andal Nachiyar thiruther

 



Today is day 9 of Thiruvadipura Uthsavam – evening will be siriya Thiruther purappadu 

– pic of 2018


Tuesday, August 11, 2026

Sri Andal Thiruvadipura uthsavam 6 – மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்

Sri Andal Thiruvadipura uthsavam 6 –

மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்

 

 


உங்களுக்கு மிகவும் பிடித்த மலர் எது ?   மலர்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு  வருவன : தாமரை; ரோஜா,மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, அல்லி, போன்ற சில.  சங்க இலக்கியங்களில் பல இடங்களில் மலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள் கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். அந்தப் பாடல் சிவனின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில் உ. வே. சாமிநாதையர் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்படும் மலர்கள் சில இங்கே :  குறிஞ்சி – குறிஞ்சி நிலத்தின் முதன்மை மலர்;  வேங்கை – மலைச் சாரலில் மலரும் மரம்; காந்தள் – மலைச் சூழலில் மலரும் மலர்;  நீலம் – சுனைகளில் மலரும் நீல மலர்; வாகை – மலைச் சாரல் மலர்; குருந்தம் – மலைக் காட்டு மலர்; கொன்றை – மலைச் சாரல் மலர்; முல்லை – முல்லை நிலத்தின் முதன்மை மலர்; குருந்தம் – காட்டு மலர்;  காயா – காட்டு மலர்; திலகம் – காட்டு மலர்; பாதிரி – காட்டு மலர்; செருந்தி – காட்டு மலர் - என பல உள்ளன.




சங்க இலக்கியங்களில் மலர்களுக்குப் பின்வரும் குணங்கள் கூறப்படுகின்றன: மணம் – இனிய வாசனை; மென்மை – மென்மையான தன்மை; வண்ணம் – அழகான நிறம்; தூய்மை – தூய்மையான தன்மை; சுவை – இனிமை; ஒளி – ஒளியுடன் கூடியது; எழில் – அழகு; கவர்ச்சி – ஈர்க்கும் தன்மை; மங்கலத்தன்மை – நல்ல காரியங்களுக்கு உகந்தது.

               மாலதி  என்ற பெயர்ச்சொல்லுக்கு, : இளம்பெண்; குடமல்லிகை, மல்லிகை; காட்டுமல்லிகை; சிறுசெண்பகம்; நிலவொளி, சந்திரிகை; விளக்குத்தண்டு இன்னமும் பல அர்த்தங்கள் உள்ளன.   மல்லிகை மணமிக்க  பாரம்பரியமான மலர்.  மல்லிகை மலரில் எசென்ஸ் எடுக்கின்றனர்.  சில ஊர்களில் மல்லி டீ பருகுகின்றனர்.  மல்லிகை மொட்டுக்களால் மட்டும் கட்டப்படும் ‘மண மாலை’ மிகவும் சிறப்பானது. தலையில் சூடுவதற்காகப் பூக்கள் சரம் சரமாக தொடுக்கப்பட்டு விற்பனையாகிறது. மலர்களிலே பல நிறமும், மணமும் இருந்த போதிலும் வெண்மை நிற மல்லிகை தூய்மை, அமைதி, ஆர்வம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக இருக்கின்றது. தனது தனித்துவமான மணத்தினால் மல்லிகைக்கு ஈடு இணையான மலரேதுமில்லை எனலாம்.  "மாலதி" என்ற பெயர் "மலர் போன்ற மென்மையானவள்" என்ற கருத்தைத் தருவதால், பெண்களுக்கு இடப்படும் அழகான பெயராகவும் பயன்படுகிறது.

For Srivaishnavaites, life is blissful – today 10th  August 2026  is day 6  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal .. .. there was siriya mada veethi purappadu of Andal at Thiruvallikkeni with rendering of Thiruvasiriyam and Periya thiruvanthathi.  

சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலர் மல்லிகை. இந்தியாவில் மல்லிகை என்றாலே மதுரை.   மல்லிகை ஆலிவ் குடும்பமான ‘ஒலிசியே’ எனும் புதர் மற்றும் கொடிகள் சார்ந்த பேரினம். ‘ஜாஸ்மினும் சம்பக்’ (Jasminum Sambac) எனும் தாவரவியல் பெயரால் அழைக்கப்படும். 

The capita of Syria, Damascus was built in a strategic site on a plateau 680 m (2,230 ft) above sea level and about 80 km (50 mi) inland from the Mediterranean, sheltered by the Anti-Lebanon mountains, supplied with water by the Barada River, and at a crossroads between trade routes. Damascus is surrounded by the Ghouta, irrigated farmland where many vegetables, cereals and fruits have been farmed since ancient times.  Damascus is  titled the "City of Jasmine".  The Barada River flows through Damascus. Damascus is one of the oldest continuously inhabited cities in the world.

கோதைப்பிராட்டி எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் திருமொழி தனியன் பாசுரத்தில் 'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம்.  வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின்  பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.  கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது.   கோதைப்பிராட்டி   மல்லிநாடாண்ட மடமயில்!. 

கோதைப்பிராட்டி அருளிச்செய்த நாச்சியார் திருமொழியின் தனியன், திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது,  கட்டளைத் கலித்துறையில் அமைந்த பாசுரம்.  இவர், ஸ்ரீமந் நாதமுனிகளின் சஹோதரியின் குமாரர், ஆனி மாத திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில், தரையைச் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை அனவரதமும் செய்து வந்தார். 

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி*

மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்*

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்*

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு. 

மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், இடைக்குல வேந்தன் கண்ணனின் திருமேனிக்குப் பொருந்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள்.  

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 

 

Here are some photos of Kothai Nachiyar Thiruvadi purappadu day  6 at Thiruvallikkeni divyadesam

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.8.2026