Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Pavithrothsava
sarrumurai purappadu 2026
Thiruvallikkeni Thiru Pavithrothsavam 6 2026
~ மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர் !?!?
இன்று 27.8.2026 திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவத்தில் ஆறாம் நாள்.
Ever
wondered what is the purpose of life ? ~ why were we born .. why did Emperuman
bless us with good hands, legs and tongue ? – what are we to do with the
members of the body ??
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள் கொண்ட ஸ்ரீமன் நாராயணனை எவ்வாறு
அழைத்து களிப்புறுவீர் ? .. மாதவா, கேசவா, வாமனா, மதுசூதனா, நாராயணா, வாசுதேவா, புருடோத்தமா
... .. என நினைவுகள் விரியலாம். நம்
சுவாமி நம்மாழ்வார் அனுபவித்து "என்னுள் கலந்தவன்’ என்று ஒரு திருநாமம் சாற்றுகிறார்.
Our civilization existed
thousands of years ago, colonization took place a few hundreds ago, those who
came here for trade, called themselves modern and we are aping the traditions
of the Western World. They did not come here to reform us, they
looted all our wealth and ensured that we remained slaves !! It is Europe that practised inhuman slavery and believed in
witchcraft !!!
To the Western World, the
emphasis is on different things, that we should only consider
insignificant. Among the many is – witchcraft or
sorcery. Witchcraft, as most commonly understood in both historical
and present-day communities, is the use of alleged supernatural powers of
magic. A witch is a practitioner
of witchcraft. Traditionally,
"witchcraft" means the use of magic or supernatural powers to inflict
harm or misfortune on others. According to Encyclopedia Britannica,
"Witchcraft thus defined exists more in the imagination of contemporaries
than in any objective reality. Yet this stereotype has a long history and has
constituted for many cultures a viable explanation of evil in the world”.
In Europe, belief in
witchcraft traces back to classical antiquity. In medieval and early modern
Europe, accused witches were usually women who were believed to have used black
magic or maleficium against their own community. Usually, accusations of
witchcraft were made by their neighbors and followed from social tensions.
Witches were sometimes said to have communed with evil
beings. Medieval Europe saw the Latin legal term maleficium applied
to forms of sorcery or witchcraft that were conducted with the intention of
causing harm.
The Salem witch trials
were a series of hearings and prosecutions of people accused of witchcraft in
colonial Massachusetts between February 1692 and May 1693. More than 200 people
were accused. Thirty people were found guilty, nineteen of whom were executed
by hanging (fourteen women and five men). One other man, Giles Corey, died
under torture after refusing to enter a plea, and at least five people died in
the disease-ridden jails. Arrests were made in numerous towns beyond Salem
Village (known today as Danvers) and its regional center Salem
Town. It was the deadliest witch hunt in the history of colonial
North America.
The episode is one of
colonial America's most notorious cases of mass hysteria. It was not unique,
but a colonial manifestation of the much broader phenomenon of witch trials in
the early modern period, which took the lives of tens of thousands in Europe.
Alse Young Windsor, Connecticut —was the first recorded instance of execution
for witchcraft in the thirteen American colonies. She had one child, Alice
Beamon (Young), born in 1640, who was also condemned for the same crime thirty
years later but was not hanged.
For us
such things do not impact or cause worry .. .. we
are blessed with the good heart supported by strong and good faculty of hands,
legs, mouth, tongue with its faculty of speech – all provided for
the purpose of praising our Emperuman Sriman Narayanan all the time and to
those who do not indulge in such practices despite have strong limbs, we should
feel sad for such people who make no effort to praise the
Lord get to accrue further Karmas by their act of non-performance !.
‘நம்மை எம்பெருமானான
ஈச்வரன் படைத்தது எதற்கு ? நமக்குக் கைகால், வாய், மூக்கு, நாக்கு போன்ற அங்க அவயங்களை
நல்லபடி தந்தது எதற்கு ?? ~ எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. பகவத்
விஷயத்திலே பல்லாண்டு பாடி எம்பெருமானை துதிப்பதே நம் வாழ்க்கை வழிமுறை என்கிறார் சுவாமி
நம்மாழ்வார் தமது 'பெரிய திருவந்தாதியில்".
வகைசேர்ந்த நல் நெஞ்சும்
நாவுடைய வாயும்*
மிக வாய்ந்து வீழா
எனிலும்* -மிக வாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர்
இதுவன்றே?
மேலைத்தாம் செய்யும்
வினை*
ஞானத்தினால்
எம்பெருமானை அடைந்து உய்வதற்கு மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்,
எம்பெருமானை நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும், இப்புவியில் சேதநராயப்
பிறந்திருக்கிற தாங்கள், நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் போற்றிப் பேசுவதற்கு
இயல்பான நாவோடு கூடிய வாக்கும் கிடைக்கப்பெற்றும், எம்பெருமான் ஸ்ரீமன்
நாராயணனை வாழ்த்தாமல் வெறுமனே இருப்பவர்கள், இனி எஞ்சி இருக்கக்கூடிய காலமும்
கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது - என அங்கலாய்க்கிறார்
சுவாமி நம்மாழ்வார் தமது பெரிய திருவந்தாதி பாசுரத்திலே !
.. .. திருவல்லிக்கேணி
திவ்யக்ஷேத்திரத்தில் இன்று பவித்ரோத்சவத்தின் ஆறாம் நாள். பல்வேறு உத்சவங்களில்
ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம்
அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். இன்று
மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய அழகு மலர் மாலையுடன், கிரீடம், புதுப்பூணூல்
சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப்
பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.
Here are some photos of
Sri Parthasarathi Perumal taken during 6th day of Thiru
Pavithra Uthsava purappadu at Thiruvallikkeni in the evening of 27.8.2026.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
சமீப
காலகட்டத்தில், பெருமாள் புறப்பாடுகள் பலராலும் புகைப்படம், மற்றும் காணொளி என வலைத்தளங்களில்
வலம் வருகின்றன. முந்தைய நூற்றாண்டின் திருவல்லிக்கேணி
புகைப்பட கலைஞர்களில் திரு தஞ்சை மூர்த்தி பிரபலமானவர். கைரவிணி திருக்குளத்தின் வடக்கு குளக்கரை தெருவில்
இவரது புகைப்பட ஸ்டூடியோ அமைந்து இருந்தது. This post
has some photos of 1983 !!
நம்
எம்பெருமானுடைய கடாக்ஷம் பெறப்பெறின் எத்தகைய மனக்களிப்பு உண்டாகும்
? முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ?
- நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ?? : சுவாமி நம்மாழ்வாரின்
வைர வரிகள் :
*பெருங்கேழலார் தம் பெருங்கண்
மலர்ப்புண்டரீகம்
நம்மேல் ஒருங்கே (பிறழுவதே) **
~
அன்று பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹ ரூபாய மயமானவர், எம்பெருமான் தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற
திருக்கண்களை, தன்னை குளிர நோக்கினமை நம்மாழ்வார் கூறியவாறு, நம்மேல் வைத்த கடாக்ஷத்தை
பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம்.
The history of Chennai, is far older than British settlements, the black town area came to be known as George Town from 1911 in honour of King George V when he was crowned, the Emperor of India. The Western part of George Town is the Muthialpet area, traversed by couple of roads running from Madras High Court to Clive Battery, nearer Royapuram Railway. One among the many lanes is Pavalakkaran Street housing Sri Venugopala Temple. It was once the place where diamond and coral trade flourished.
The Jews imported corals, both in the form of beads and in rough. The place in Muthialpet where they lived was known as Pagadalpet [Coral-town] dating back to 1700s. A book titled – ‘The English Gentleman Merchant at Work: Madras and the City of London 1660-1740’ by Soren Mentz, mentions that the financial crisis affecting the English market even ruined some of the private merchants in Madras, through respondentias, as they suffered financial losses when the Captains were declared bankrupt. After a voyage to Madras in 1721, Captain Martin was declared bankrupt and private merchants like John Adams lost their investment.
Pearls
are attractive. Palliative care is an approach, an ethic, a
multi-disciplinary sub-speciality, not just a new element that can be added and
stirred into health systems. Pearl jewellery that glitters needs to be taken
care of nicely. Such news may
not be of any interest to us ~ but this dress adorned by Emperuman, made of Pearl [Muthangi] certainly
does. On day 5 of annual Pavithrothsavam at Thiruvallikkeni, Emperuman adorned
Muthangi.
திருவல்லிக்கேணி
திவ்யதேசத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம்
சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு
இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள்
நடை பெறுகிறது. இன்று 26.8.2026 பவித்ரோத்சவ ஐந்தாம் நாள் புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதி
முத்தங்கி அணிந்து அற்புத சேவை அளித்தார்.
The photographer referred to in the first para, Sri Thanjai Moorthi devotedly offered an ornate Muthangi for Emperuman in 1983 – for
years Emperuman adorned that beautiful ornament in many purappadus. Later in 1995 Thiru Thanjai Murthi again made
a sacred offering of renewed Muthangi.
First are the photos of
Muthangi samarpanai to Sri Parthasarathi Emperuman by Thanjai Moorthi &
family in 1983. The last three photos
(below) are of Sri Parthasarathi Perumal Pavithrothsava purappadu day 5 on
26.8.2026
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar