To search this blog

Saturday, January 22, 2011

Thirumazhisai Aazhwaar Satrumurai - Thaiyil magam indru


திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்  


For Srivaishnavaites, Azhwaars are of great significance.  The hymns sung by the Twelve great Saints, collectively are known as Naalayira Divya Prabandham.    Bhakthisarar,  well known as Thirumazhisai Azhwar was born in Thirumazhisai.  This is place is near Poonamallee around 20 kms away from Chennai on the Bangalore High Road.   From there as you take a right turn in the road towards Thiruvallur, Tirupathi, this place is located  a few hundred meters away. 
The legend of the temple at Thiruvegha in Kanchipuram is associated with Thirumazhisai azhwaar.  The King insisted on the disciple of Azhwaar by name Kanikannan to sing in his praise.  He refused and promptly was banished outside the kingdom.  Azhwaar followed his disciple and sang to Lord that they are moving out of the town.  The Lord transgressing the immobile idol form, also went following the azhwaar plunging the kingdom in darkness.  The King realizing his folly, then prostrated before the disciple and  azhwaar requesting them to return.  The saint returned and so did the Perumal.  Even now this God is affectionately called “Yathokthakari” – the one who did as told by his devotee. 
His works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120). He was born in the Magam nakshathiram of Thai month.  22nd Jan happened to be His annual celebrations.   Here is a small write up on the Azhwaar with photo of Thirumazhisai temple, Azhwaar at Thirumazhisai’ ; azhwaar and Gajendra Varadhar purappadu in Triplicane.


தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆச்சர்யனான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை".


- உலகு மழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம்  கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி ஞாயிற்றுக்கிழமை கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப் பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம். 

முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்தி சாரர் என திருநாமம் சாற்றினார். இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர்.  பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார்.    இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார்.  அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட  ஆணையிட்டார். கனிகண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ்வார் பெருமாளிடம் "நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்" என பாடி ஊரை விட்டே அகன்றனராம்.   பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக் கொள்ள சீடனும், ஆழ்வாரும், பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் , ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது. 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை  வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள், அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :
தேருங்கால்  தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்
பொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்
தாளால் உலகம் என்ற பாசுரத்தில் "நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார். .
திருத்துழாய் மாலை சூடிய திருமுடி  உடையவனான  திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் - என்று 
"வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- - சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழாவண் கைகூப்பி மதித்து"
என்று பாடிய திருமழிசை செல்வன் பக்திசாரர்  அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம். 
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 
அவதார ஸ்தலத்தில் உத்சவர் திருமழிசைப்பிரான் 


திருவல்லிக்கேணி திருமழிசைப்பிரான் புறப்பாட்டில் ஆழ்வாரும்

 கஜேந்திர வரதரும் 
1948 இல் திருமழிசை ஆழ்வாரின் கதை  சி கண்ணன் பிள்ளை தயாரிப்பில்  எம் எம் தண்டபாணி, பி வி ரங்காச்சாரி  நடித்து திருமழிசை ஆழ்வார் என்ற பெயரில் வெளியிடப்பட்டதாம். 

Tuesday, January 18, 2011

Thiruvallikkeni Kanu Paarvettai Purappadu : கணு பார்வேட்டை புறப்பாடு

16/01/2011 அன்று மாலை திருவல்லிக்கேணியில் கணு பார்வேட்டை புறப்பாடு விமர்சையாக நடை பெற்றது.  விஜய தசமி பார்வேட்டையின் போது பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்வார்.  (விஜய தசமி பார்வேட்டை பற்றிய பதிவை படிக்க இங்கே )
கணு பார்வேட்டை புறப்பாட்டில் பெருமாள் கேடயத்தில் அலங்காரமாக எழுந்து அருளி பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
மேலும் படங்களுக்கு :  http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniKanuPurappadu160111#
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Monday, January 17, 2011

Thiruvallikkeni Sankranthi Uthsavam 2011

15/01/2011  அன்று சாயம்  சங்கராந்தி  ஊர்கோல உத்சவம் சிறப்பாக நடந்தது.


முந்தைய நாள் போகி திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீ பார்த்தரும் ஆண்டாளும் மேல் கூராளம் இல்லாத பல்லக்கில் எதிர் எதிரே அமர்ந்து புறப்பாடு கண்டு அருளினார். பெரிய மாட வீதி புறப்பாட்டில் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்பட்டது. 


புறப்பாட்டின் பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே காண்க.  
அழகான பல்லக்கில் பெருமாளும் ஆண்டாளும் 

ஸ்ரீ பார்த்தசாரதி 
ஸ்ரீ ஆண்டாள் 
திவ்ய பிரபந்த கோஷ்டி 




மேலும் படங்களுக்கு : http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniSankranthiUthsavam2011#


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Saturday, January 15, 2011

Sri Aandal Neeratta Uthsavam 2011 (9) - ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் - 2011 (9)


ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் - 2011 (9)

ஜனவரி 14/1/2011 - மார்கழி 30 இன்று நீராட்ட உத்சவம் ஒன்பதாம் நாள் புறப்பாடு காலை 0830 மணியளவில் நடைபெற்றது. சூடிக் குடுத்த நாச்சியார் ஆண்டாள் சிறிய திருத்தேரில் எழுந்து அருளினார்.
திருவல்லிக்கேணி ஆண்டாள் புறப்பாட்டின் திருகோல புகைப் படங்கள் சில இங்கே:

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்
மேலும் படங்களுக்கு :



தேர் கலசம்
திருத்தேரில் ஆண்டாள்

புறப்பாடு கண்டு அருளும் ஆண்டாள்

சிறிய திருத்தேர்




Tuesday, January 11, 2011

Sri Andaal Neeratta Uthsavam 2011 - Koodarai vellum Seer Govindha

Dear (s)

Today is a very significant day,  27th day of the tamil month of Margazhi.    This day assumes significance from the pasuram of Chudi Kudutha Nachiyar – Andal.  In the month of Margazhi starting from day one, each day one pasuram of Thiruppavai is recited and today is the 27th verse “Koodarai vellum Seer Govinda”

In this pasuram, Kothai Piratti expresses her great joy over the acquirement of the boons that she and her friends entreated Lord Krishna to grant them.  Now She is in the eternal state of bless having been fully blessed by the Lord and is in a celebratory mood.  This pasuram ascribes the benign supremacy of Lord conquering all His opponents with His anantha kalyana gunams like Souryam, souseelyam, soundharyam.  To celebrate, She calls beating the drum, wearing new clothes describing all the ornate ornaments that are to be worn and eating sweet rice prepared in milk with ghee overflowing.  In the early pasurams of Thiruppavai, it is the Paavai Nonbu – now it is nearing completeion and is the time for sanmanam from the Lord for those who observed the vratham.

It is not only getting the benevolence of God but more of sharing them with all bhakthas ‘koodi irunthu kulirnthu’.  Thiruppavai is also about Govindha Naama Sankeerthanam which reaches its peak in the concluding verses where She ponders ‘kurai ondrum illatha Govinda’.  The myriad meanings of Thiruppavai are detailed in many many discourses of Sri Vaishnavaite Periyavars, especially during this month.  Let us all get the great éclat and glory of all the Worlds by adorning ourselves eating rice food prepared using milk with sumptuous ghee and who eats this ksheerannam will stand ever united and remain cool in heart and joyous by the blessings of the Lord.

I offer my obeisance again and again to Goddess Godhadevi – to her alone – who awakened Lord Krishna and binded him with flower wreaths that were already worn by her.  

Sri Andal thiruvadigale saranam.
Here are some photos taken during the Andan Neeratta Uthsavam at Triplicane. 
Sri Andal
Periyamurai Parthasarathi battar & Ameena Seshadri
                                                                       divyaprabandha goshti

For more photos, please  see : 



கூடாரை வெல்லும் சீர்  கோவிந்தா மற்றும் ஆண்டாள் நீராட்டம் உத்சவம்

சூடிக்குடுத்த சுடர்கொடியாம் ஆண்டாளின் திருவிழா - மார்கழி மாதத்தில் வரும் "நீராட்ட விழா". திருவல்லிக்கேணியில் பத்து நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் காலை புறப்பாடு கண்டு அருளி பெரிய தேர் முன்பே அமைந்து இருக்கும் நீராட்ட மண்டபத்தில் எழுந்து அருளி திருமஞ்சனம் கண்டு அருள்கிறார்.
  "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து"  - என கண்ணனின் புகழ் பாடி நீராடி தொழுதல் நானிலத்திற்கே நல்லது.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆண்டாள் புறப்பாட்டின் போது (8/1/11 & 9/1/11) எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே காணலாம். 

இன்று திருப்பாவையின் 27 ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்ற பாசுரம் அனுசந்திக்கப்படுகிறது.  தன்னை அடி பணியாதவர்களைக்கூட வெல்லுகின்ற குணங்களை உடைய கண்ணபிரானை தொழும் இப்பாடலில் 'மூட நெய் பெய்து முழங்கை வடிவார' என சொல்லப்பட்ட படியே திருக்கோவில்களிலும் ஸ்ரீ வைஷ்ணவ இல்லங்களிலும் பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து சக்கரை பொங்கல் செய்து, அதை அனைவருடனும் கூடி இருந்து வயிறு குளிர உண்ணுவார்கள்.

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.

Wednesday, January 5, 2011

ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதைகள் தேவையில்லை. - நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

மிகைப்படுத்துதல் வரை முறை இல்லாமல் பெருகி உள்ள கால கட்டம் இது. தமிழகத்தில் இரண்டு படங்கள் நடித்தால் முதல் அமைச்சர் கனவும் கொஞ்சம் பிரபலம் அடைந்த உடன் கட்சி ஆரம்பிக்கும் தெளிவும் உள்ளது. சினிமா வெளி வரும் நாளில் மிக பெரிய கட் அவுட்டுகள் வைத்து, பெரிய மாலை போட்டு, பால் அபிஷேகம் செய்வதையும் பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளோ பிரம்மாண்டமான மாநாடுகள், ஏராளமான கார்கள் அணிவகுப்பு, தனி மனிதனை பாராட்டி, வாழ்த்தி சுவரொட்டிகள் என கலாச்சாரம் காண்கின்றன. இத்தகைய காலகட்டத்தில், மாலை மரியாதைகள் கூடாது, எப்போதும் கும்பல் சூழ்ந்து புகைப்படங்கள் எடுப்பது எரிச்சலாக உள்ளது என ஒருவர் கூறினால் நம்ப முடியுமா ? - இது உண்மையாகவே நடந்தேறியுள்ளது. கீழே உள்ள தினமலர் செய்தி காண்க :

சென்னை : ""ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதைகள் தேவையில்லை. ஒரு நாட்டிற்காக மட்டும் இல்லாமல் உலக நன்மைக்காகவே ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்தக்கூடாது,'' என்று நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.
சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாடு நடந்து வருகிறது. இதில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவங்கி வைத்து பேசியதாவது: அறிவியல் என்பது நெடுங்கால ஆராய்ச்சிக்கு உட்பட்டது. இந்தியாவில் மட்டும்தான், அதிகமான சம்பிரதாயங்கள் இருப்பதை காண முடிகிறது. இங்கு ஆராய்ச்சியாளர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒன்றாக பார்க்கும் கலாசாரம் உள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதை செய்யாவிட்டால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று கருதுகின்றனர். உங்களுடைய மாலை, மரியாதைகள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆராய்ச்சிதான் முக்கியம்.டார்வின், நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை படித்ததன் மூலம் அவர்கள் என்னை கவர்ந்தனர். அதற்காக நான் என்றும் அவர்களை என் முன்மாதிரியாக நினைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் புத்தகங்களை படித்ததால், அவர்கள் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, நான் அதை திருத்திக் கொண்டேன்.
மாணவர்கள், உங்களுடைய ஆசிரியர்களை மதியுங்கள். ஏனென்றால், ஆசிரியர்கள் தான் உங்கள் வழிக்கட்டிகள். அவர்களால்தான் உங்களுக்கு சரியான வழி காட்ட முடியும். அறிவியல் என்பது முற்போக்கு சிந்தனை உடையது. அறிவியல் அறிஞராகிய நான் ஒன்றும் கிரிக்கெட் நட்சத்திரமோ அல்லது சினிமா நட்சத்திரமோ இல்லை. என்னிடம் ஆட்டோகிராப் வாங்கி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்டர்நெட் என்பது இந்தியாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. இது, இந்திய அறிவியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டர்நெட் மேற்கத்திய நாடுகளில் உருவாகி, இந்தியாவில் அதிகமாக பயன்பட்டு வருகிறது. அறிவியல் எந்த நாட்டிலும் உருவாகலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, காலரா நோயை வங்கதேசத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். ஆனால், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அறிவியலும், ஆராய்ச்சியும் நாடுகளை கடந்து செல்லக்கூடியவை. ஆராய்ச்சி என்பது நாட்டிற்காக செய்யப்படுவது கிடையாது. நான் செய்த ஆராய்ச்சி இந்தியாவிற்காக இல்லை. உலகத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் செய்தேன். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.


Please also read : http://sampspeak.blogspot.com/2011/01/scientists-do-not-require-seek-garlands.html

Sunday, January 2, 2011

Thondaradipodi Aazhwaar Satrumurai : Margazhiyil Kettai : இன்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை :


The main tenet of Vaishnavism is ‘total surrender’ (saranakathi) to God.  In one of his poems – “OOrilen Kaaniyillai” – this Azhwar has sung :
“  I have no place; no properties; no relatives; none other than you; I know only your Lotus feet in this material world and cannot but cling to your Lotus feet; O Lord of Blue hued sky colour! You  are my  only refuge. I am crying towards you, Oh the Lord of Arangam (Srirangam) only you can clear me of all my sins and do good for me”

-   ~~~      That is one of the pasurams of Thondaradipodi Aazhwar whose birthday mahothsavam was celebrated on Sunday – 2nd Jan 2011 (kettai nakshathiram in the month of Margazhi)

Thondaradipodiar gave us the “Thirumalai” (45 songs) and  Thirupalli Ezhuchi (10) which are sung everyday to wake up the Lord.  He sang about Thiruvarangam  and Paramapatham.

This Azhwar at birth was named Vipra Narayanar and is also known as Bhaktanghri renu .  Thondaradippodi Alvar was born in a small village by name 'Thiru mandaggudi' in Prabhava year, Margazhi month, Krishna chaturthi, Tuesday in Kettai (Jyestha) Nakshatram (star).   This Thirumandangudi is in Chozha nadu near Kumbakonam,  the nearest landmark being Thiruvarooran sugars factory.    There is an ancient temple near the birth place, which I understand is not in great shape.


Here is something about the Azhwar and some photos taken during the purappadu yesterday at Thiruvallikkeni
===========================================================
இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம்.   சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில்  பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்  அவதரித்த தினம்.  ஆழ்வார் சாற்றுமுறை இன்று :  

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  
முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய  தலங்கள் ~ : திருவரங்கமும்  நாம் பார்க்க முடியாத பரமபதமும். தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார். 

இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்.  திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது. அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம்.

சூரியன் கிழக்கே தோன்றி விட்டான்; இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் – “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”  என திருவரங்கனை துயில் எழுப்புகிறார். தனது திருமாலையில் திருவரங்கனையும், அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார்.  அங்கே உள்ளதால் காவிரி கங்கையை விட புனிதம் ஆகிறது.
 
கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!

ஆழ்வார்  பூலோக வைகுண்டம் என்று  கொண்டாடப் படும் தலத்தில் எம்பெருமானுக்கு  கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு  உகந்த மலர்களை  வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு  சாற்றி  மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக  இருந்தவர்.


திருவரங்கனை அனுபவிக்கும் சுகத்தை விட இந்திர லோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் கூட வேண்டேன் என பாடிய ஆழ்வாரின் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :




அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்

மேலும் படங்களுக்கு :  :  Azhwar Photos click here

சென்ற நூற்றாண்டின்  நடுவில்  பல புராணங்கள் சினிமா படங்களாக எடுக்கப்பட்டன.  12-12- 1938 இல் 14000  அடியில் எடுக்கப்பட்ட புராண படம்  “விப்ர நாராயண" இயக்கம் – ஏ.நாராயணன், வசனம்-சோமயாஜுலு, இசை.எஸ்.என்.ஆர்.நாதன், பாடல்-நாராயணன் வாத்தியார், ஒளி- டி.வி.கிருஷ்ணையா, கலை-அப்பு குட்டி குரூப்-பாலகிருஷ்ண குரூப். எடிட்டிங் – என்.கே. கோபால்.