*நந்தகோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன்
குழல் கொடு ஊதினபோது*
பெரியாழ்வார் திருமொழி : பரமபதத்தின் எம்பெருமான், வாசுதேவனுடைய புத்திரனும், மதுரையின் மன்னனுமான நந்தகோபாலன் இளவரசு ஆயர்குலச் சிறுவர்களுக்கெல்லாம் தலைவனுமான பால கோபாலன் (கோவிந்தன்) தன் திருவாயால் புல்லாங்குழலை எடுத்து இன்னிசை எழ
ஊதிய
அந்தத் தருணத்தில், தேவலோகத்தைச் சேர்ந்த அரம்பையர்கள் முதலானோர், இசையின் இனிமையில் சொக்கி, மனம் உருகி, தாமரை போன்ற
கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பனித்துத் துளிக்க அப்படியே சித்திரப் பாவைகள் போல மெய்மறந்து நின்றார்களாம்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் உறியடி புறப்பாட்டிற்காக
வாஹன மண்டபம் எழுந்தருளும் அவசரம் இன்று மாலை சில நிமிஷங்கள் முன்னர்
5th
Sept 2026 @ 5.30 pm.

No comments:
Post a Comment