To search this blog

Saturday, March 23, 2013

Thiruvallikkeni Thavana Uthsavam – day 5 ~ morning


Thiruvallikkeni Thavana Uthsavam – day 5 ~ morning

The  Thavana Uthsavam is now on at Thiruvallikkeni and today 24th Mar 2013 is the 5th day of Uthsavam.  Fortunate to have darshan of Sri Parthasarathi, this morning in the purappadu to Thavana Uthsava Bungalow.   Here are some photos taken this morning. :

திருவல்லிக்கேணியில் பக்தர்கள் குறைகள் எல்லாவற்றையும் தீர்க்கும் ஸ்ரீ பார்த்தசாரதி, பாரதப் போரில் பார்த்தனுக்கு சாரதியாய் தேரோட்டி, ஆயுதம் ஏந்தாதவன்.
திருமங்கை மன்னனின் மங்களாசாசனத்தில் "பற்றலர் வீய கோல் கையில் கொண்டு" என்கிறபடியேகுவலயாபீடமென்கிற யானையும் அதன் பாகனையும்  வீழ செற்றவன்..... அவரது திருக்கையில் உள்ளது கதாயுதம் அல்ல;  'கோல்' - சத்ருக்கள் மாளும்படியாக சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு சேவை சாதிக்கும் அதி அழகனான பெருமாள் - நம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்.
இன்று காலை தவன உத்சவம் கண்டருள எழுந்து அருளிய அவசரத்தில் எடுத்த இந்த புகைப்படங்களில் 'ஸ்ரீ பார்த்தசாரதி' அதீத மிடுக்குடன் கோல் கையில் கொண்ட பெருமாளை காட்சி தருவதை கண்டு களிக்கலாம்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 






No comments:

Post a Comment