To search this blog

Tuesday, May 3, 2011

உடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி - 3rd May 2011 {Emperumanar Uthsavam - significance of 6th day}

Chithiraiyil seiya Thiruvadirai is most important for Vaishnavaites – as this marks the birth of Sri Ramanujar widely known as Emperumanar, Udayavar, Bhashyakarar.   Yesterday  I had shared something about the annual 10 day Uthsavam of Swami Emperumanar (Ramanujar) which will culminate on his birth anniversary (Chithiraiyil Thiruvathirai) on 7th May 2011.

Today is the 6th day and on the morning, Ramanujar gave darshan on horse with pure white silk dress.  Confounding….  Swami Ramanujar is a sanyasi – in fact named Ethirajar (Yathi Rajar) which would mean that he is the Emperor of all saints.  How and why white dress to a sanyasi… 

The 6th day celebration is known as “Vellai Sathupadi” where Acharyar adorns white garments without tridandam. This is to remember the circumstances under which Acharyar doned vellai veshti of grahasta instead of usual kashaya. History has it that Chozha king Kulothunga 1 ordered Acharyar to subscribe to his faith and Kuresar donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his eyes plucked out.  Swami Emperumanar went out of Cholanadu adorning white dress and went places, reached Melkot, Mandya where he performed many religious discourses and managed temples. He went to Delhi for bringing back the Utsava vigraham of "Ramapriyan" which had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar. Marking this, on sixth day of Udayavar Uthsavam - Emperumanar  alights Kuthirai vahanam donning white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to a place on way to Kanchi. Similar festivity takes place at Triplicane also.

By some historical accounts, these events took place at his ripe age around 80 (probably 1096 AD).  For those who fall at the feet of Udayavar and who takes care of the disciples of Udayavar, there would never be any hardship.

Regards – Srinivasan Sampathkumar.

Here are some photos taken this morning : (3rd May 2011)



"சித்திரையில் செய்ய திருவாதிரை " - இம்மாதம் ஏழாம் தேதி வருகிறது.  அல்லிக்கேணியில் எம்பெருமானாரின் உத்சவம் சிறப்பாக நடை பெற்று வருகிறது.  பிருந்தாரண்ய க்ஷேத்ரமான திருவல்லிக்கேணியில்  ஆசுரி கேசவ சோமாயாஜி தனது மனைவி காந்திமதியுடன் புத்திர காமேஷ்டி யக்ஞம்  பண்ண அவதரித்தவர் - திருவனந்தாழ்வனின் அவதாரமான நம் இராமானுஜர். உலகோர்கள் எல்லாம் ஸ்ரீமன் நாராயணணின் மகிமையை அறிந்து  அவர்கள்  அனைவரும் நாராயணனை  தொழச்செய்தது அவர் தம் பிறவி மகிமை.  


இன்று 3rd May 2011 - உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு  கண்டு அருளினார்.   "தூய்நெறி சேர் - யதிகட் இறைவன்" என அனைத்து யதிகளிலும் சிறந்தவராக கொண்டாடப்பட்ட  எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா ?

காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். வைணவம் திக்கெட்டும் பரவியது. அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்தது. இராமானுஜரின் பெருமை எங்கும் பரவியது. இன்புற்றிருந்த ஸ்ரீரங்கஸ்ரீயில் தலைமைப் பொறுப்பினையேற்ற  உடையவருக்கும் பெருந்துன்பம் ஏற்பட்டது.  சோழமண்டலத்தில்  கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான். வைணவத்தின் தலைவராகயிருக்கும்  இராமானுஜர்  ஒப்புக்கொண்டாலேயொழிய  தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.


இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று கூரத்தாழ்வான் மற்றும் சீடர்கள் உணர்ந்ததால், வட திருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார். வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணித்தார்.  பல தேசங்கள் புறப்பாடு கண்டு அருளின உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். இங்குள்ள மிக பெரிய தொண்டனூர் ஏரி சுவாமியால் ஏற்படுத்தப்பட்டது. தமது எண்பதாவது பிராய சமயம் மேல்கோட் சென்ற உடையவர், சுமார் இருபது வருட காலம் அங்கே திருப்பணிகள் செய்தார்.  அவ்வூர் உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பதாக அறிந்து அங்கு சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா? முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். இப்படியாக எம்பெருமானார் பயணித்த ஆச்சர்யம் இன்று கொண்டாடப்படுகிறது. 


                                                              
ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து  காஞ்சி செல்லும் பாதையில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு உடையவர் இன்று குதிரை வாகனத்தில் எழுந்து அருள்வார். திருவல்லிக்கேணியில் குளக்கரையில் உள்ள 'யதுகிரி யதிராஜ மண்டபத்துக்கு' இன்று எழுந்து அருளி மண்டகப்படி கண்டு அருள்கிறார்.  

இவ்வுலகில் இனியொன்றும் எண்ணாதே நெஞ்சே - இரவு பகல் எதிராஜர் எமக்கினி மேலருளும்.  இராமானுசன் சரணல்லால் நமக்கு கதி வேறு ஒன்றுமில்லை. அவரது தொண்டர்கட்கு அன்புற்று இருத்தல்  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்றென்றும்  பாக்கியம்.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !             அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment