To search this blog

Thursday, November 3, 2011

Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam - Sarrumurai


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:

Today is the most important day for Thennacharya Srivaishnavaites – Thirumoolam in the month of Aippasi is the birth thirunakshathiram of Acharyar Swami Manavala Maamunigal. 
On 31st Oct 2011, it was celebrated in a very grand manner.  In the morning immediately after mangalasasanam in all the sannathies in Thiruvallikkeni Divyadesam, there was the unique “Kaithala Sevai” – whence Lord Parthasarathi and his consorts were taken on the palm of kainkaryabara Bhattacharyars infront of hundreds of devotees.  Then there was the morning purappadu which was embellished with 10 pairs of thirukudais (total 20 in nos).
In the evening, again there was grand purappadu of Sri Manavalamamunigal with Lord Parthasarathi.

31/10/2011 இன்று மிக சீரிய "ஐப்பசியில் திருமூலம்".  இன்று  - நம் ஆச்சார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உதித்த  நந்நாள் . "செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள் - அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்"
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  இன்று அதிகாலை எல்லா சன்னதிகளிலும் மங்களாசாசனம் முடிந்து, மாமுனிகள் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் மரியாதைகளை பெற்றுக் கொண்டபின், "கைத்தல சேர்வை" நடைபெறுகிறது.  பெரிய சன்னதியில் இருந்து உடையவர் சன்னதி முன் உள்ள மண்டபம் வரை, முதலில் உபய நாச்சிமார்களையும் அடுத்து ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும், அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப்பண்ணுவர்.  வேறு எந்த திவ்ய தேசத்திலும், இந்த சிறப்பு சேவை உள்ளதாகத் தெரியவில்லை.  ஸ்ரீரங்கத்தில்  கைத்தல சேவை உண்டு - இராப்பத்து உத்சவத்தில், இது நடைபெறுவதாக கேள்விப்பட்டு உள்ளேன்.

திருவல்லிக்கேணியில் பொய் இல்லாத மணவாள மாமுனிகளின் உத்சவ சிறப்புகளில் - கைத்தல சேவையும் ஒன்று.  தீபாவளி புறப்பாடு,  அன்ன கூட உத்சவம் போன்றவை இன்ன பிற.  சாற்றுமுறை அன்று காலை புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதியும் மாமுனிகளும் ஏளுகின்றனர்.   இவ்வமயத்தில் திருக்குடைகள் சிறப்பு.  இன்று காலை பெருமாள் பத்து ஜதை குடைகளுடன் (இருபது குடைகள்) புறப்பாடு கண்டு அருள ஆயத்தம் ஆனபோது, பெருமழை பெய்து, புறப்பாடு இடர்ப்பட்டது. பிறகு மழையில் நனைந்த வீதிகளில் புறப்பாடு அழகாக நடந்தது.  மாமுனிகள் அருளிச்செய்த உபதேச ரத்தினமாலை சேவிக்கப் பெற்றது.

இரவு மாமுனிகளும் ஸ்ரீ பார்த்தசாரதியும் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினார். "திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதி" கோஷ்டி ஆனது. மணவாள மாமுனிகளின் சாற்றுமுறை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்







காலை புறப்பாட்டுக்கு  முன்பு திருக்குடைகள்  தயாராகின்றன





காலை புறப்பாட்டில்  ஸ்ரீ பார்த்த சாரதி


காலை புறப்பாட்டில்  நம் ஆச்சார்யர் - ஸ்ரீ மணவாள மாமுனிகள்





திருக்குடைகள்





மாலை புறப்பாட்டில்  ஸ்ரீ பார்த்த சாரதி




மாலை புறப்பாட்டில்  ஸ்ரீ மணவாள மாமுனிகள்

பட்டாசுகள்

3 comments:

  1. Dear Sir, romba nalla irukku. enjoyed the photos and the write up - Rgds Saratha

    ReplyDelete
  2. how many kudais - exciting - Gopi

    ReplyDelete
  3. photos arputham - aravamudan

    ReplyDelete