To search this blog

Friday, October 29, 2010

Navarathri Golu at Sri Parthasarathi Swami Temple : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் கொலு

புரட்டாசி மாதம்  ஒரு சிறப்பான மாதம்.  புரட்டாசி ஏழுமலையானுக்கு உகந்தது. திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிகிழமை மிக விசேஷம்.  நவராத்திரி அல்லாத சனி நாட்களில் சாயம் ஐந்து மணிக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடுகண்டு அருள்வார்.  
புரட்டாசி மாதம் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 8 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.    நவராத்திரி  ஒன்பது  நாட்களும் ஸ்ரீ  வேதவல்லி தாயாருக்கு உன்னதமான உத்சவம் நடை பெறுகிறது.  எல்லா நாட்களிலும் தாயார் வாகன புறப்பட்டு கண்டு அருள்கிறார்.  
நவராத்திரியின்போது, வீடுகளில் அழகாக பொம்மை கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும்.  இந்த வருடம் ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்  என்ற நிறுவனம் மிக  அழகாக கொலு ஏற்பாடு செய்து இருந்தனர்.  அழகிய சிங்கர் சன்னதி த்வஜஸ்தம்பம் அருகே திருக்குளம் போன்று அமைத்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு பொம்மைகள் வைக்கபட்டு இருந்தன .   மிகவும் நேர்த்தியாகவும் கலை நயத்துடனும் அழகாகவும் இருந்த பொம்மைகள் பக்தர்கள் அனைவராலும் பாராட்டி பல முறை பார்க்கப்பட்டன. 
சில பொம்மைகள் தங்க முலம் பூச்சுடன் விலை உயர்ந்தன.   கோவில் பொம்மை  கொலுவின் சில புகைப்படங்கள் இங்கே :   Allikkeni Golu
அடியன் சம்பத்குமார். 

No comments:

Post a Comment