An imposing 20-foot+ [or more] standing Shiva, His trident rising several
feet higher, against the Himalayan slopes…”
முத்திக்கலப்புரைத்தல்
என்பது முத்தியில் (இறைவனுடன் கலந்த பெருவாழ்வில்) அடைந்த பேரின்ப அனுபவத்தை அல்லது
நிலைமையை எடுத்துக்கூறுதல் ஆகும். மாணிக்கவாசகர்
அருளிய திருவாசகம் நூலில் உள்ள பிடித்த பத்து என்ற பகுதி இத்துறைக்குச் சான்றாகும்.
இதோ இங்கே ஒரு பாசுரம்.:
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்*
.. பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
.. ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
.. தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
.. எங்கெழுந் தருளுவ தினியே.
The big Shiva - “an imposing 20-foot+ standing Shiva, his trident rising several
feet higher, against the Himalayan slopes…”
This Shiva statue stands
on the Rishikesh–Devprayag highway in the Teen Dhara sector, overlooking the
Ganga valley, roughly 9–10 km south-west of Devprayag. Devprayag lies on the Rishikesh–Badrinath
highway and is the sacred confluence where the Bhagirathi and Alaknanda become
the Ganga.
முதலில் கூறிய பாசுர
வரிகள் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம்
திருமுறையில் உள்ள பிடித்த பத்து பதிகத்தின் இறுதிப் பாடலாகும். அற்பமான புலால் உடலை,
கோயிலாக மாற்றி எளியவனாய் என்னை ஆட்கொண்ட ஈசனே என்று இறைவன் அருளைப் போற்றும் வரிகள்
இவை :
இழிந்த
புலால் நாற்றம் அடிக்கின்றது என் உடம்பு . அதில் உள்ள துளைகள் தோறும் நெகிழச் செய்தாய்.
அந்த என் உடம்பைப் பொன்னாலாகிய பெரிய கோயிலாகக் கருதி நீ எழுந்தருளினாய். என் எலும்பனைத்தையும்
உருக்கி எளியனாக எழுந்தருளி ஆட்கொண்ட முதல்வனே!
குற்றமில்லாத மாணிக்கமே! பிறப்பு, இறப்பு , வாழ்வின் துன்பங்கள், அறியாமை என்பவற்றின்
சார்புகள் யாவும் ஒழித்த ஒளி வடிவானவனே! பேரின்பமானவனே!
உன்னை உறுதியாகப் பற்றினேன்: இனி நீ எங்கு எழுந்தருளுவாய்?
Regards
– S Sampathkumar
21.8.2026
Photographed by me on 3.10.2019 – acknowledge :
https://shaivam.org for pasuram and meaning !

No comments:
Post a Comment