To search this blog

Tuesday, January 12, 2021

Sri Andal Neerattam 8 2021 - குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

 


எல்லா இடர்களிடமிருந்தும் நம்மை என்றென்றும் காப்பாற்ற வல்லன் நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே. எண்ணற்ற லீலைகளை   நிகழ்த்தும் எம்பெருமானுக்கு எண்ணற்ற திருநாமங்கள் உள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் தெய்வீகமானவை, இவற்றை உச்சரிப்பதால் அடையும் பலன்களும் தெய்வீகமானவை.  அளப்பரிய திருமலை வேங்கடவனை நாம் சென்று சேவித்து நம் பாவங்களை தொலைப்போம்.  திருமலை - ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே !!   ..  .. திருப்பதி திருமலை என்றாலே  "கோவிந்தா, கோவிந்தா,  கோவிந்தா”  கோஷமும் நினைவுக்கு வரும். வைணவத் தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு "கோவிந்தா' என கேட்கும்  முழக்கம் நமக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றது. 

 




ஹிந்து தர்மம் ~ வேத இதிஹாச புராணங்களினாலே கட்டமைக்கப்பட்ட அநாதியான மதம்.  நாம் மென்மையானவர்கள், ஆண்டவனிடத்திலே ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.  நமக்கு கைங்கர்யமே பிரதானம். எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருத்தல் ~ அதையும் ஒரு தர்மமாக, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்தல் - நமக்கு அமைந்தது.  நமது ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.  ஸ்ரீமந்நாராயனை கண்டவுடன் அவனுக்கு ஒருகுறையும், எவ்வித கண் த்ருஷ்டியும் படலாகாதே என திருப்பல்லாண்டு பாடியவர் நம் பெரியாழ்வார். அவருக்கு மகளாய் பூமி பிராட்டியாய் அவதரித்து, மிக எளிய பாடல்கள் மூலம் நமக்கு பக்தி இலக்கியத்தை, தீந்தமிழில் நாம் அனுதினமும் அனுசந்திக்கப்பண்ணியவர் நம் கோதைப்பிராட்டி.  

கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள் என்று பொருள். கோவிந்தன் என்றால் பசுக்கள் பின்னே செல்பவன்.  கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில்  கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களை கேட்டு இன்புறுகிறான்.   "கோ" என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு.  :  அவற்றுள் சில :  அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு.  

கோ என்றால் பூமி எனக்கொண்டால், படைப்பின் தொடக்கத்தில் சென்ற இடமறியாதபடி கடலில் ஆழ்ந்து மறைந்துவிட்ட பூமியை வராஹமாக சென்று தேடிப் பெற்றவர்.  கோ என்றால் பசு, ஆவினம் எனக்கொண்டால்   பசுக்களுக்குத் தலைவர்; முல்லை நிலத்தவர் - ஆயர்;  ஆநிரை மேய்த்தோன்; கோ என்றால் புலன்கள் என கொண்டால், . புலன்களை அடக்கி ஆள்பவன் கோவிந்தன். இங்கே இந்திரியம் பசு.  கோவிந்தன் - வேதமோதுவதால் அடையக்கூடியவர்; மந்திரங்களால் உணரத்தக்கவர்; உபநிடத வாக்கியங்களால் அறியப்படுபவர், அல்லது அடையப்படுபவர். பக்தியுடன் பெயரிட்டுக் கூப்பிடுதலால் அடையக்கூடியவர்; கூப்பிடுதூரத்தில் இருப்பவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடோடி வருபவர்.  

பக்தி இலக்கியத்தில் அதி உன்னதமான திருப்பாவையில் அவர் ஸ்ரீமன் நாராயணனை விளிப்பது '**குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!**'  ~  அக்கண்ணனிடத்திலே விழைந்தது  எப்பேர்ப்பட்ட உறவு ? என்றென்றும் பிரிவில்லாத, எக்காரணத்தை கொண்டும் விலகாத ஆத்ம உறவு.  ஏதோ கோவத்தில் விலக்கும் சாதாரணமான  பந்தம் அல்ல.  எம்பெருமானிடத்திலே மையல் கொண்டு, அவனிடம் கலந்த பின், அவ்வுறவு என்றென்றும் அழிக்கவே இயலாதது.  'உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது'  ~  எம்பெருமான் கூட அவ்வுறவை மாற்றவல்லனல்லன்.  இதுவல்லவோ உன்னத உயர்ந்த பக்தி நிலை.  

In legal parlance, a trust is a vehicle to pass assets to a trustee, who in turn holds those assets for a third party such as an heir.  People can create trusts and also control how and to whom the assets shall get disbursed.  To ensure that the intended purpose is served, trustees too can be chosen.  People create will, documents, register them trying to create a legacy.  Yet things can go wrong.    

Theoretically there are ‘irrevocable acts’  ~ in contract,  such are not to be changed, reversed , rectified, amended or changed even when circumstances change.  Can you imagine a perfect certain ‘irrevocable bond’ ??   

Lord Sri Krishna took the avathar with birth among those who graze cattle in dense forests, grew among cowherd folks – when we dedicate ourselves to our mighty Lord, the bond with the faultless   Govindha   is irrevocable – eternal and ever lasting – a bond, even God cannot separate.  Thiruppavai and Nachiyar thirumozhi glitter with simple yet most powerful words that lift us and make us surrender to the eternal Sriman Naryaana. 

 

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் *

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் *

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் *

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு *

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது *

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே*

இறைவா  நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

 

எம்பெருமான் மாசற்றவன். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் *  காடுகளிலே கறவையினங்கள் மேய்த்த ஆயரிடையே வந்து உதித்த நம் கோவிந்தனை நமக்கு அருளுபவனாய் பெற்றது நமது பெரும் பாக்கியம்.  ஸ்வாமியான கண்ணபிரானோடு எங்களுக்குண்டான  உறவானது, யாராலும், (உன்னாலும் எம்மாலும்) ஒழிக்க ஒழியமாட்டாது.  ஞானமும் மார்க்கமும் அறியாத சாதாரணர்களான  நாங்கள் மிகுந்த அனுப்பினால் பல்வேறு நாமங்களால் அழைத்ததைக் குறித்தும், ஆச்ரிதவத்ஸலனான  நீ கோபித்தருளாமல், எல்லா அருள்களையும் தந்து, எங்களை காத்து அருள வேண்டும்.  

நம் மதத்தையும் நம் சம்ப்ரதாயத்தையும் கயவர்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.  மாற்று மதத்தினர், மத மாற்றம் மட்டுமே தங்கள் எண்ணமும் செயலுமாக உள்ளோர் - நம்மை ஏளனப்படுத்தும் விஷயங்களை விதைத்து வந்துள்ளனர்.  அவற்றில் ஒன்று தான் :  நம் உன்னதமான திருமண்ணை 'நாமம்' என கேலிபேச்சாகவும்,   'கோவிந்தா கோவிந்தா'  என்றால் கொடுத்தது திரும்பவராது என்னும் தவறான  அர்த்தத்தில் முக்கியமாக திரைப்படங்களிலும் ஏனைய இடங்களிலும்  பரப்ப முயற்சிக்கின்றனர்.  பக்தர்கள். கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும். கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு அர்த்தம் வருமாறு சொல்லலாமா?  இது போன்ற கேனைத்தனமான கூற்றுகளை எதிர்ப்போம். நம் சம்பிரதாயத்திற்கு எந்த பங்கமும் வாராமல் பார்த்துக்கொள்வது நமது தலையாய கடமை என்று உணர்வோம்.  நம் சந்ததியினருக்கும் இவற்றை எடுத்துச்சொல்லி புரிய வைப்போம்.  

Today ~   12.01.2021 (Tues) is  27th day of the tamil month of Margazhi and day 8 of Andal Neeratta Uthsavam.  Here are some photos of morning purappadu.  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் **

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் **  

 

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
12.1.2021 
















No comments:

Post a Comment