To search this blog

Monday, May 16, 2022

Sri Madhurakavi Azhwar sarrumurai - Chithiraiyil Chithiral naal 2022

தேவுமற்றறியேனோ மதுரகவியார் போலே !  ?? 

(சற்று விவரமான (நீளத்தில்) பதிவு !  - நேரமும் மனமும் உள்ளவர்கள், படித்து தங்கள் மனக்கருத்தை தெரியப்படுத்தினால் அடியேனும் உகப்பேன் !!) 

 




Today 14.5.2022 is a significant day – Chithirayil Chithirai day .. .. the birth celebrations of Sri Madhurakavi Azhwar – most times, this would fall in Sri Parthasarathi brahmothsavam but once in a few years (when Chithirai comes twice in the same month) – it would provide an occasion for a separate purappadu and celebration of Azhwar anniversary .. ..  

திருக்கோளூர்  மதுரகவிகள் அவதார ஸ்தலம்.   இங்குள்ளது ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் கோயில்.  சுவாமி நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.  மூலவர் கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் நிக்ஷேபவித்தன் (வைத்தமாநிதிப்பெருமாள்). திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்  போலே  இங்கும்   மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார்.   

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள் இங்கு விசேஷம்  திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க  இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி. அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்.  

எம்பெருமானை தேடி அவனிடமே சரணமென அடைந்த தன தலைமகளை குறித்து பாசுரமாக இந்த பத்து பாசுரங்களை ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்  செய்துள்ளார்.  

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,

அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனை,

தினைத்தனையும்  விடாள்   அவன்சேர்   திருக்கோளூர்க்கே,

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே. 

 

தெய்வங்களே! எனக்கு வேறு ஒன்றுமே  தோன்றவில்லை.   பெரிய நீண்ட  கண்களையுடைய இளமான் போன்ற என் மகள், இப்போது சென்று  ஸர்வலோக ஸ்வாமியான அரவிந்தலோசனனை (செந்தாமரைக் கண்ணனை) சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு, அவனது வாசஸ்தலமான  திருக்கோளூரை நோக்கியே சென்றுள்ளாள்.   தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென்பதையும் நினைத்திலள் அவள் என உருகுகிறார்  

Sri Madhurakavigal avathara sthalam is Thirukkolur situate closest to Azhwar Thirunagari, with which place Azhwar’s life was entwined.  At this sthalam is Sri Vaithamanidhi Permual Temple,  one of the Nava Tirupathi thirukovilgal and a divyadesam at that.  Situate in the  southern bank of Thamiraparani river. Thirukolur is a beautiful temple.  

Focus is very important in life.  Focus as the act of concentrating one’s interest or activity on something. Technically, we are capable of doing two things at the same time. It is possible, for example, to watch TV while cooking dinner or to answer an email while talking on the phone !  .. .. however, it is perhaps  impossible, however, to concentrate  on two tasks at once. You're either listening to the TV and the overflowing  sambar  is background noise, or you're tending to the boiling sambar not really following who is batting or how the last wicket fell !!   ~ you may tend to agree or otherwise -  Focus shifts ! and this is about all too different focus, that of a disciple on his master !!  

For ordinary mortals, there is the samanya Sasthram.  Azhwars were totally different – they were blessed with the benevolence of Sriman Narayana and were focused only on Sriman Narayana. This Alwar however was too focussed on the epitome of kainkaryam at the feet of his master and thought of none else.  For him, Sadagopa was the only true guide and preceptor.  He knew or thought of none else; he was too elated in singing holy Upanishad utterances of Sadagopa and realized the ennobling qualities and benign virtues of Swami Nammalwar.   







Today 14.5.2022  is  ‘Chithiraiyil Chithirai thirunaal’ [Chitra Nakshathiram in the month of Chithirai]  ~ the birthday of Sri Madhurakavi Azhwar.  He was born in Thirukkolur as incarnation of Sri Garuda. He sang only one divyaprabandham ~ ‘Kanninun Chiruthambu’ consisting of only 11 hymns;  his life was intertwined with that of Sri NammAzhwar.  

Of the Nava Thirupathi divyadesams, ThirukKurugoor is hailed as Azhwar Thirunagari, as it was here Swami Nammalwar was born.   Mathura Kavigal saw the leading light from Thiru Ayodhya and travelled all the way to Azhwar Thirunagari and identified Nammazhwar in the Puliyamaram.  He as a disciple was attracted to the holy feet of ‘Kurugaip Piran’ [Swami Nammazhwar] that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar ~ an exceptional piece of guru bakthi.   

கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்

பண்டை வல்வினை பாற்றியருளினான்

எண்டிசையுமறிய இயம்புகேன்

ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.  

Azhwar in his exalted state claims that  Nammalwar, the son of Kari transformed him ( a person who was not worthy of any values) by taking care  and being considerate towards him and removed him of his sins by guiding him to the right path, hence he will loudly proclaim the glory of the kindness of the one who is the source of sweet Tamil poets , spreading his fame in all directions (that is he would sing in praise of Nammalwar only) 

 

                                                ************************************** 

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம்சித்திரை மாதம்சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர்.  மதுரகவியாழ்வார்ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது 

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்காபுளியமரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.  அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த  மதுரகவியாழ்வார்,  ஞான முத்திரையுடன்  மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்துஅவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.   "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என  சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்

அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத்  தின்று அங்கே கிடக்கும்"என்றார்.  மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டதுஉயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்துஅனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது. இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார்   அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.  

தேவுமற்றறியேனோ மதுரகவியார் போலே ! - சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை கவிதை வரிகளில் வெளிப்படுத்தின,  மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதி அற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினார்.  ""சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன?'' என்று கேட்டு 81 வைணவப் பெரியார்களின் அருஞ்செயல்களைக் கூறி அத்தகையவர்களின் வைணவ நலங்கள் தனக்கு வாய்க்கவில்லையே என்று வருந்திக் கூறினாள்.  இது  வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது. அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்த ராமானுஜர் அப் பெண்பிள்ளையை திருக்கோளூர் அழைத்துச் சென்று அவளது இல்லத்தில் திருவமுதுண்டு சென்றார்.

 தேவுமற்றறியேனோ மதுரகவியார் போலே ! - என்று விளம்பிய பெண் மேலும் தொடர்ந்தாள்.  மதுரகவிகள் நம்மாழ்வாரைத் தரிசித்த போது நம்மாழ்வாருக்கு பதினாறு வயசு. நம்மாழ்வார் இந்த உலகத்தை விட்டு வைகுண்டம் கிளம்பிய போது முப்பத்திரண்டு வயது.!.  அவ்வாறு வைகுந்தம் ஏகும்போது,  மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைப் பார்த்து உங்களைப் பிரிந்து நான் என்ன செய்வேன்; உங்களை எப்படிப் பூஜிப்பேன் என்று  விசனப்பட, நம்மாழ்வார் “கவலைப் படாதே தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சினால் நான் வருவேன்” என்று இயம்பினார். மதுரகவிகளும் அதே போலக் காய்ச்ச கிடைத்த  விக்ரகம் தான் நாம் இன்று பூஜிக்கும் சுவாமி நம்மாழ்வாரின் திருமேனி.   மதுரகவியாழ்வார் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து, திருவிழாக்கள் ஏற்பாடு செய்து, திருவாய்மொழியைப் பலருக்கு உபதேசம் செய்து, பல ஊர்களில் அதைப் பரப்பினார்.  

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் மறைவுக்கு பின்னர் அவருடைய தங்கத்தினாலான திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார்.  "வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார், திருவாய்மொழிப்பெருமாள் வந்தார், திருநகரிப்பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்" என்று பாட்டுப்பாடிக் கொண்டு செல்வது இவர் வழக்கம்.  

பாடல் அங்கீகரம் என்பது இன்று மட்டுமல்ல அன்றும் பெரிய விஷயம். மதுரைத் தமிழ்ச் சங்கம் இறுதி செய்வதே வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படும். சங்கப்பலகை ஏற்றுக் கொள்ளுதல் என்ற மரபு கடைபிடிக்கப்பட்டது. நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்திற்கு  பாடல் எழுதப்பட்ட ஓலைகளை எடுத்துச் சென்ற மதுரகவிகள் -  அவருடைய எட்டு வரி, நான்கு வரிப் பாடல்களை எல்லாம் விட்டு விட்டு. 

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் 

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே  

என்று திருவாய்மொழி இரண்டு வரிப் பாடலை பலகையில் வைக்க தமிழ்ச் சங்கப் பலகை அதனை ஏற்றுக் கொண்டது.  ஸ்வாமி  நம்மாழ்வாரின் பாசுரப் பெருமைகளை அறிந்த புலவர்கள் அவரைக் குறித்து ஒரே நேரத்தில் அத்தனை புலவர்களும் ஒரே பாடலை இயற்றினார்கள் :

 

ஈயாடுவதோ கருடற்கெதிரே இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ  

நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ  

பேயாடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்  

ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பெறுமோ இவ்வுலகிற்கவியே  ! 

ஆசார்யனையே பூஜித்த மதுரகவிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்த  பதினொரு பாடல்களிலும் எம்பெருமானைப் பற்றி பாடாமல் தனது ஆச்சாரியரான நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடியிருப்பதன் மூலம் ஆச்சாரிய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். . ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை என்று தலையில் வைத்துக் கொண்டாடும் மதுரகவியாழ்வாரைப் போல தான் கொண்டாடவில்லையென என்பதால் அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை அந்த ஊரைவிட்டு செல்வதாகச் சொல்கிறாள் - எம்பெருமானார் வியந்த அந்த   திருக்கோளூர்ப் பெண். 

** தேவு மற்று அறியேன்குருகூர் நம்பிபாவின் இன்னிசை பாடித்திரிவனே.**   

Here are some photos of  sarrumurai purappadu at Thiruvallikkeni of Sri Madhurakavigal and Sri Parthasarathi Emperuman. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar
14.5.2022
 












2 comments:

  1. Very nice. 🙏🙏🙏🙏 for nammazhwar and madurakavi azwar charithram, thirukolur penpillai varthaigal... Thamizh changa palagai etrathu every thing nicely narrated with beautiful photos. 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Adiyan 🙏very nice

    ReplyDelete