To search this blog

Monday, November 8, 2010

Sree Parthasarathi Swami Deepavali Purappadu - 05/11/2010


For a Srivaishnavaite,  Wednesday - the 10th of October 2010  is a very important day – it is Thirumoola nakshathiram in the tamil month of Aippasi.   64 decades back, on this day was born the incarnation of Adisesha, the reincarnation of Swami Ramanujacharya. 

Swami Manavala Mamunigal, also known by the Thenkalai followers as Varavaramuni, Yathindra Pravanar,  the Acharya was born on AD 1370 at Alwar Thirunagari near Thirunelveli.

Acharya lived on this earth for 73 years during which period he propogated the tenets of Vaishnavism by his writings and commentaries.  It is believed that at the end of his year long discourse at Thiruvarangam,  Swami Namperumal himself came and uttered the thanian which is now followed by the  Thenkalai sect.

The 10 day celebrations are now on at Thiruvallikkeni and on 5th day (which was Deepavali day), there was grand procession of Mamunigal with Lord Parthasarathi.  It has become a tradition that in Triplicane, that during those 2 hours during veedhi purappadu (procession in mada streets) fireworks will go in air in a spectacular fashion.   Here are some words on Mamunigal alongwith some photos taken during the purappadu at Triplicane

With regards – Srinivasan Sampathkumar

********************************************************************************



திருவல்லிக்கேணி பெருமாள் தீபாவளி புறப்பாடு

தென்னாசார்ய  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருவோணம் மிக சீரிய நாள். மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் அவதரித்த நாள்.  இந்த விக்ருதி வருடம் ஐப்பசி மாதம்  15 (01 11 2010)முதல் ஐப்பசி  24 (10 11 2010) வரை நம் ஆச்சர்ய சுவாமியின் திருநக்ஷத்திர சம்வத்சரோத்சவம் நடைபெறுகிறது.  திருமூலத்தன்று (10.11.2010) சாற்றுமுறையாகும்.  சாற்றுமுறையன்று திருவல்லிக்கேணியில் சிறப்பாக "கைத்தல சேவை" என்று ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும் உபய நாச்சிமார்களையும் கட்டியங்கள் முழங்க அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப் பண்ணும் அழகு பரம போக்யமானது. 

ஸ்ரீ வரவர முனி என்றும் யதீந்திர ப்ரவணர் என்றும் போற்றி தொழப்படும் நம் சுவாமி கி பி  1370 ஆம் ஆண்டு கிடாரம் என்ற கிராமத்தில் அவதரித்தார். சுவாமிகள் நமக்கு அளித்தவை "ஸ்ரீ சைலேச தயாபாத்திரம்" எனும் தனியன் தவிர யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் மற்றும் 19  க்ரந்தங்கள்.

திருவல்லிக்கேணியில் மாமுனிகளுக்கு பத்து நாட்களும் புறப்பட்டு நடை பெறுகிறது.   வெள்ளி 05.11.10 அன்று தீபாவளி திருநாளில் பெருமாள் புறப்பாடு மிக விமர்சையாக நடந்தது.  ஏரளாமான வாண வேடிக்கைகளுடன் புறப்பாட்டை ஆயிரக்கனக்க்கானோர் கண்டு களித்தனர்.  புறப்பாட்டின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே : 








 மேலும் படங்களை இங்கே காணலாம் : Athul Photo album    http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniDeepavali2010

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Monday, November 1, 2010

Sree Sarada Sevashram at Mannivakkam (near Vandalur off Chennai)


அன்பு நண்பர்களே 

இன்று காலை ஒரு செய்தி படித்தேன்.  பிரபல வோல்க்ஸ்வகோன்  நிறுவனம்” ‘ புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் ‘ தங்களது சிறப்பு விளையாட்டு வடிவ கார்  "புகாட்டி  வெயரோன்  16.4  கிரந்த் ஸ்போர்ட்"  மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.  இன்றைய இளைநர்களுக்கு எல்லாவற்றிலுமே சிறந்ததுதான் தேவை. இந்த நவீன சிறப்பு கார் உலகத்தில் எல்லா பணக்கார நாடுகளிலும் ஓடுகிறது.  இந்தியர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது ஞாயமல்ல !!

இந்த காரின் விலை பதினாறு கோடிக்கு மேல்.  இதற்கு முன் மிக விலை உயர்ந்த கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் மேபாச் - இவற்றின் விலை ஐந்து கோடி தான்.  இந்த புகாட்டி  வெயரோன்   மணிக்கு 407 கிமீ செல்ல வல்லது. 2.7 நொடியில்  ஜீரோவிலிருந்து 100 கி மீ வேகம் எடுக்கும். ! பிரமிப்பாக உள்ளதா ??   உலகெங்கும் வருடத்துக்கு இது போன்ற கார்கள் எண்பது மட்டுமே விற்கப்படுகின்றன.  விரைவில் நமது சாதாரண குடிமகனுக்கும் இது போன்ற ஒரு காரை பார்த்து மூக்கில் விரல் வைக்க வாய்ப்பு கிடைக்கும்.,  வசதி படைத்தவர்கள் கார் வாங்கலாமா என்பதோ அவர்கள் தங்கள் சொந்த பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதோ இந்த இடுகையின் நோக்கம் அல்ல.

இன்றைய சமுதாயம் மிக வேகமானது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்  கூட தங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்துள்ளது.  கூட இருப்பவர்களுடன் தன்னை சீர் தூக்கி தனக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.  அவர்கள் தங்கள் ஆசையை விட சற்று குறைந்ததுக்கும் ஒப்ப மாட்டார்கள்.  அவர்களிடம் தெளிவான சிந்தனை, சொல்திறன், ஆங்காரம், அடங்கா மனது எல்லாமும் உள்ளது.  சமுதாய மாறுதல்.  புலம்பி பிரயோஜனமில்லை.

இந்திய தேசம் இன்னமும் கிராமங்களில் வசிக்கிறது. அவர்களை காண நகரத்தில் இருந்து தொலை தூரம் செல்ல அவசியமில்லை. பெருநகரங்களிலும் மிக நிறைய ஏழைகள் உள்ளனர்.  இங்குள்ள குழந்தைகள் ஒரு வேளை நல்ல உணவுக்கும், சற்று ஒதுங்க இருப்பிடத்துக்கும் பரிதவிக்கின்றன. பலருக்கு வாழ்க்கையே போராட்டம் - சாதாரண தேவைகள் கூட ஆடம்பரம்.  நடுத்தர வர்க்கம் என்பதுவும் வழக்கு ஒழிந்து வருகிறது.  நடுத்தர வர்க்க மனிதன் தனது கனவுகளை துரத்துகிறான்.  எப்படியாவது பணக்காரன் ஆக பெரு  முயற்சி செய்கிறான். ஒரு காலத்தில் சேமிப்புக்கு முக்கியம் தந்த சமுதாயம் இப்போது எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்கிறது.  பணம் இல்லை எனில் பிளாஸ்டிக் கார்ட் உள்ளது. கடன் தர வங்கிகள் உள்ளன.

வாழ்க்கையை பகுதி பிரித்தால், இளமை முடிந்தவுடன் மனிதன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பருவம். தற்போதைய சமுதாயத்தினர் பேராசையுடன் ஓடிக்கொண்டே  உள்ளனர்.  நாற்பது வயது என்பது பணம் சம்பாதிக்கும் வயது. எதிர்கால தேவைக்கு எல்லாம் சேர்த்து சம்பாதிக்க வேண்டும்.  இதுதான் குறிக்கோள்.

தவிர திரும்பும் இடம் எல்லாம் சாதனை புரிந்த நடிகர்கள், ஆட்சியாளர்கள், என சாதித்தவர்கள் ப்ளெக்ஸ் போர்டுகளில் மின்னுகின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில், இன்னமும் சிலர் சுய சிந்தை இல்லாமல் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியுடன் செயல் படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு மாணிக்கத்தை 31/10/2010 அன்று மண்ணிவாக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாது யோகி குமார் என்ற இவர் நாற்பது வயது இளைஞர். தனது இளம் வயதில் ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து, இமயமலைக்கு சென்று சன்யாசம் பெற்று, யோகா கலை கற்று  தனது தணியாத தாகத்தை தணித்துகொள்ள சென்னை திரும்பி ஒரு ஆஷரமத்தை நடத்தி வருகிறார்.  இவரது மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து நடத்தி வருவதுதான் "ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம்". இந்த  ஆஷ்ரம் சாது  யோகா குமாரால் துவங்கப்பட்டு, திருவாளர்கள் ரகுராமன், சந்திர சேகரன், விஜய செல்வராஜ், குமர குருபரன்,  பாலசுப்ரமணியம் போன்றோரின்  சீரிய உதவிகளுடன் ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் வாகன மற்றும் மக்கள் கும்பலை தாண்டி வண்டலூர்  அருகே  மண்ணிவாக்கம் என்ற  பகுதியில் மிக தூய்மையாக இந்த ஆஷ்ரமம் அமைந்து உள்ளது. இங்கு  26  சிறார்கள் (மாணவ, மாணவியர்) அன்புடன் தங்க வைக்கப்பட்டு,  உணவு, உடை,  இருப்பிடம், படிப்பு, பாசம் அனைத்தும் சூழ நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.   ஆஷ்ரமம் பாரத தாய் திருநாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஞானியர் முனிவர்கள் மற்றும் தேச பெரியவர்கள் கட்டி தந்த வழிமுறையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நெறிமுறைகளை பின்பற்றி நடத்த பெறுகிறது. திரு சாது குமாரின் குறிக்கோள், இது போன்ற சிறுவர்களை நெறி படுத்தி வாழ்வில் வெற்றி பெற செய்வதே.  இங்கு அவர்களுக்கு நல் ஒழுக்கம், நேர்மையான வாழ்க்கை குறிக்கோள்கள் கற்று தரபடுகின்றன.   அவர்கள் தினமும் அதிகாலை இறை வணக்கத்துடன் நாளை தொடங்கி, யோகா, உடற் பயிற்சி போன்றவற்றுடன் பள்ளி படிப்பு படித்து, ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

இங்கே காற்றில் இருந்து எல்லாமே சுத்தமாக உள்ளது.  சுவாமி இங்கு தேவைக்கு அதிகமாக எதுவும் அவசியம் இல்லை என்று திண்ணமாக சொல்கிறார்.  ஆஸ்ரமத்தின் தேவைகள் சீரிய முறையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.  வாரத்தின் வெவ்வேறு   நாட்களில் என்னென்ன உணவு என்பதும் பட்டியலில் உள்ளது. 

சைமாவில் இருந்து ஒரு குழுவாக நாங்கள் நேற்று (31/10/2010) இங்கு சென்றோம்.   சுவாமியும் மற்ற நிர்வாகிகளும் எங்களை அன்புடன் வரவேற்றனர். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி அவர்களுடன் கலந்து உரையாடி, நாங்கள் களித்தோம். ஆஸ்ரமத்துக்கு எங்காளால் இயன்ற சிறு பொருள் உதவி அளித்து மகிழ்ந்தோம்.  கொஞ்சம் தலை அணைகள், பாய்கள், போர்வைகள், நோட்டு புத்தங்கள், மளிகை பொருள்கள், வாளிகள் போன்றன அளித்தோம். இந்த ஆஸ்ரமத்தின் முகவரி தகவல் தொடர்புக்கு : 
ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம், பதிவு எண்:  751/IV-2006,
No. 1/3 வடக்கு மாட வீதி,
மண்ணிவாக்கம் (சிவன் கோயில் அருகில்)
சென்னை 600048 P: 044 2275 0012; M 99402 08225.

எங்களது வாழ்வில் இந்த நாள் ஒரு இனிய நாளாக இருந்தது. நீங்களும் உங்களுக்கு எளிதான சமயம், இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று இல்ல குழந்தைகளோடு சேர்ந்து இருந்து மகிழ்வீர்.

இந்த ஆஸ்ரம் பற்றிய மேலும் விவரங்கள் அறிய, தயைகூர்ந்து இந்த வலை மனைக்கு செல்லவும்.  :  http://sreesaradasevashram.blogspot.com/


அன்புடன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.



Friday, October 29, 2010

Navarathri Golu at Sri Parthasarathi Swami Temple : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் கொலு

புரட்டாசி மாதம்  ஒரு சிறப்பான மாதம்.  புரட்டாசி ஏழுமலையானுக்கு உகந்தது. திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிகிழமை மிக விசேஷம்.  நவராத்திரி அல்லாத சனி நாட்களில் சாயம் ஐந்து மணிக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடுகண்டு அருள்வார்.  
புரட்டாசி மாதம் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 8 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.    நவராத்திரி  ஒன்பது  நாட்களும் ஸ்ரீ  வேதவல்லி தாயாருக்கு உன்னதமான உத்சவம் நடை பெறுகிறது.  எல்லா நாட்களிலும் தாயார் வாகன புறப்பட்டு கண்டு அருள்கிறார்.  
நவராத்திரியின்போது, வீடுகளில் அழகாக பொம்மை கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும்.  இந்த வருடம் ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்  என்ற நிறுவனம் மிக  அழகாக கொலு ஏற்பாடு செய்து இருந்தனர்.  அழகிய சிங்கர் சன்னதி த்வஜஸ்தம்பம் அருகே திருக்குளம் போன்று அமைத்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு பொம்மைகள் வைக்கபட்டு இருந்தன .   மிகவும் நேர்த்தியாகவும் கலை நயத்துடனும் அழகாகவும் இருந்த பொம்மைகள் பக்தர்கள் அனைவராலும் பாராட்டி பல முறை பார்க்கப்பட்டன. 
சில பொம்மைகள் தங்க முலம் பூச்சுடன் விலை உயர்ந்தன.   கோவில் பொம்மை  கொலுவின் சில புகைப்படங்கள் இங்கே :   Allikkeni Golu
அடியன் சம்பத்குமார். 

Saturday, October 23, 2010

திருவெள்ளறை திவ்ய தேசம் - Sree Vaishnava Divya Desam Thiruvellarai




ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கோவில் என்றாலே மதிள் திருவரங்கம் தான். 

21/10/10 அன்று திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் உள்ள திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் அமைந்தது. திருப் புண்டரீகாக்ஷ  பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை  கோபுரம் உள்ளது.

கோபுரம் கோவில் உள்ளிருந்து பார்க்கும் போது

கோவில் வாசல் மொட்டை  கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் இன்னொரு அழகான கோபுரம் உள்ளது.




இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல திருக்குளமும்   அதன்  முன்பே  பலிபீடமும்,  த்வஜஸ்தம்பமும் உள்ளன. இத் திருக்கோவிலில் பலி பீடத்துக்குக்கூட விசேஷமாக  திருமஞ்சனம் நடை பெறுமாம்.


நாம் சன்னதியை நோக்கி நின்று சேவிக்கும் போது  இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக  உள்ளது.   தாயார்  பங்கஜவல்லி என்ற திருநாமத்துடன்  தனிக்கோவில் நாச்சியார் அழகாக சேவை சாதிக்கிறார்.    த்வஜஸ்தம்பத்தை சேவித்து உள்ளே  சென்றால் பெருமாளின் அழகான வரைபடம் உள்ளது.   மறுபடி பிரதட்சிணமாக சென்று  'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள் உள்ளதை தர்சிக்கலாம். படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால்,   அழகான நின்ற  திருக்கோலத்தில்   எழுந்து அருளி சேவை சாதிக்கும்  புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் சேவை கண் குளிரக்காணலாம்.   

தற்சமயம் தட்சிணாயன காலமானதால்  இந்த வாசல் வழியாக சென்று சேவித்தோம்.  நின்ற திருக்கோலத்தில் நெடிய  பெருமாள் மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருள,   அருகில் ஆதி சேஷனும்  எழுந்து அருளி உள்ளனர். சுவற்றில் சந்திரனும் சூரியனும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கின்றனர்.  பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற திருக்கோலத்திலும், மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும் பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர்.   சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி தந்தமையால் பெருமாளுக்கு ச்வேதபுரி நாதன் எனவும் திருநாமம். புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன் செங்கமலவல்லி தாயார் உள்ளார்.  பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர்.  சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு   தனிச்சன்னிதிகள் உள்ளன.

இந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளகாவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் " சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிதுவாகும்  அழகனே! காப்பிட வாராய்" என மங்களா சாசனம்  செய்துள்ளார்.    திருமங்கை ஆழ்வார்  இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ ! ..................  தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே !  பத்தாவது  பாடலில்   " மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய ...............  எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே "  என மங்களாசாசனம் பண்ணி உள்ளார்.
கோவில் மதிள்   
ஸ்ரீ மணவாளமாமுனிகள் சன்னதி 
இத்திருத்தலத்தில், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகிய இரண்டு  ஆச்சார்யர்கள் திருஅவதாரம் செய்துள்ளனர். உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர்.  இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.  இவர்களது பரம்பரையினர் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து  வருகின்றனர்.  ஆள்  மறைந்தால்தான்   வேதாந்தமே   புரியும்  என உலகுக்கு உரைத்த   பிள்ளை  எங்களாழ்வான் இங்கே அவதரித்தார். ஸ்ரீராமானுஜரின்      மருமகனார்    நடாதூராழ்வான்.  அவருடைய    பேரர்   நடாதூரம்மாள்.    அவர்  பிள்ளை  எங்களாழ்வான்    திருமாளிகையைக்  கண்டறிந்து   விஷய  ஞானம் கற்றார் என பெரியோர் வாக்கு.  எங்களாழ்வான் வம்சாவழி சுவாமி கோவில் அருளப்பாடு கண்டு மாலை மரியாதையுடன் எழுந்து அருளும் காட்சி இங்கே ::.  



அடியேன் ஸ்ரீனிவாச தாசன்