To search this blog

Sunday, January 14, 2024

Sri. U.Ve. Velukkudi Ranganathan Swami Thiruppavai discourse at Thiruvallikkeni

ஸ்ரீ: ஆண்டாள் திருவடிகளே சரணம்

 

மார்கழி மாதம் சிறப்பான மாதம் - தநுர்மாதத்தில் பல இடங்களில் கோதை நாச்சியார் அருளிசெய்த திருப்பாவை உபன்யாசங்கள், வித்வான்களால் நடைபெறும்.  

பிரதி வருடமும் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவிலில் திருவாய்மொழி மண்டபத்தில், பல சிறந்த வித்துவான்கள் திருப்பாவை உபன்யாசம் சாதித்துள்ளனர்.  ஸ்ரீ உ வே. வேளுக்குடி வரதாச்சாரியார், அவர் புதல்வர்   ஸ்ரீ உ வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி  - அவர் புதல்வர்  ஸ்ரீ உ வே. வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி இவ்வருக்ஷம் திருப்பாவை காலக்ஷேபம் 30 நாட்கள் சாதித்தார். ஸ்ரீ உ வே வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி - நமது ஸம்ப்ரதாய விஷயங்களில் சிறப்பான புரிதலும், நியாய, பூர்வ மீமாம்ஸ, விசிஷ்டாத்வைத அறிஞராகவும் விளங்கி பல காலக்ஷேபங்கள் செய்து வரும் இளைஞர்.   இன்று இவ்விழா இனிதே நிறைவடைந்தது. முதுமுனைவர் ஸ்ரீ உ.வே மண்டயம் அநந்தான்பிள்ளை வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி சிறப்புரையுடன், திருக்கோவில் மரியாதையுடன் காலக்ஷேபம் நிறைவுற்றது.  

இன்றைய காலை எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே  

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
14.1.2024 












No comments:

Post a Comment