To search this blog

Tuesday, February 1, 2022

Thai Amavasai 2022 - Thiruvallikkeni purappadu

 இன்று 31.1.2022  தை  அமாவாசை.  வாழ்வில் இன்று ஒரு இனிய மறக்கமுடியாத தருணம் திருவல்லிக்கேணி வாசிகளுக்கு. 



பலமாதங்கள் பிறகு இன்று மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் இன்று திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர். 




மஹாபாரதத்தில் ஆயுதம் எடுக்காமல் பஞ்ச பாண்டவர் பக்கல் நின்று, நீதியை நிலைநாட்டின நம் எம்பெருமான், திருமங்கையாழ்வார் மங்களசாஸனத்தில் - " பஞ்ச பாண்டவர்க்காகி   வாயுரை தூது சென்று இயங்கும்  என்துணை எந்தை தந்தை தம்மானை,   திருவல்லிக்கேணி கண்டேனே !! என அர்ச்சிக்கப்பட்ட நம் எம்பெருமான் திருவீதி வலம் வந்த நன்னாள் இந்நாள். 

இப்பூவுலகில் தீமைகள் எல்லாம் நீங்கி, கொரோனா போன்ற நோய்கள் பறந்தோடி - நாம் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ எம்பெருமானை பிரார்த்திப்போம்.  இன்று ஒரு நல்ல தொடக்கம்.  இனிவரும் நாட்களில் எந்த குறைபாடும் இல்லாமல் உத்சவங்கள் சிறப்புற நடக்க அவ்வெம்பெருமானையே வேண்டுவோம். 


இன்றைய புறப்பாட்டின் சில புகைப்படங்கள் இங்கே ! 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
31.1.2022 (More photos later !)

No comments:

Post a Comment