To search this blog

Thursday, July 16, 2020

Thiruvadipuram ~ Sri Andal uthsavam 2020


For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] –  is the  most blessed day for all Srivaishnavaites –  marking  the birth of Kothai Piratti [Andal]. This year Thiruvadipuram falls on 24.7.2020 and today is day 2 of Andal Uthsavam.


 தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில்  இன்று இரண்டாம் நாள்.  

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.  ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை.  "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான  நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.



சென்ற வருடம், இந்த புறப்பாடுகளை கண்டு ஆனந்தித்தோம்.   கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும் மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது. எம்பெருமானின் வடிவழகையும், ஆண்டாள் நாச்சியாரின் அழகையும் வெளிப்படுத்தும் சில படங்கள் இங்கே :
[28.7.2019] ரோஹிணி  நக்ஷத்திரம் கூடிய ஏகாதசி .. எனவே திருவல்லிக்கேணியில் ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதியுடன் பெரிய மாடவீதி புறப்பாடு   கண்டருளினார்.  Here are some photos of that grand purappadu.


~ adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16.7.2020














No comments:

Post a Comment