To search this blog

Wednesday, September 15, 2021

Thiruvallikkeni Thirup Pavithrothsavam 2021 - இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி

Today 15th Sept 2021 is  day 1  of Thirupavithrothsavam at Thiruvallikkeni divyadesam – there is no veethi purappadu!.

இமை - நாம் அனைவரும் அறிந்ததே ! கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு.   கண் சிமிட்டும் நேரம், ஒரு மாத்திரை எனப்படும். 'கண்ணை இமை காப்பது போல்...’ என்பார்கள்  - அவ்வாறு  இமைகள் நம் கண்களை காக்கின்றன.    கண்ணுக்கு அழகும் முகத்துக்குப் பொலிவும் தருவது மட்டும் அல்ல, கண்கள் உலர்ந்து விடாமலும், பாக்டீரியா முதலிய தூசுகள் கண்களில் விழுந்து விடாமல் தடுக்கும் அரணாகவும் கண் இமையில் உள்ள முடிகள் செயல்படுகின்றன.  இன்றைய உலகத்தில் கணினியில் மிக அதிக நேரம் செலுத்துவோர் கண் மற்றும் இமையில் வலி அல்லது மற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.  

The nictitating membrane (from Latin nictare, to blink) is a transparent or translucent third eyelid present in some animals that can be drawn across the eye from the medial canthus to protect and moisten it while maintaining vision.

An eyelid is a thin fold of skin that covers and protects an eye. The levator palpebrae superioris muscle retracts the eyelid, exposing the cornea to the outside, giving vision. This can be either voluntarily or involuntarily. The human eyelid features a row of eyelashes along the eyelid margin, which serve to heighten the protection of the eye from dust and foreign debris, as well as from perspiration. "Palpebral" (and "blepharal") means relating to the eyelids. Its key function is to regularly spread the tears and other secretions on the eye surface to keep it moist, since the cornea must be continuously moist. They keep the eyes from drying out when asleep. Moreover, the blink reflex protects the eye from foreign bodies.  Most mammals have eyelids similar to ours – but other types of animals don’t need eyelids. For example, fish don’t have true eyelids – they live in water that keeps their eyes moist. Fish can’t close their eyes – and neither can snakes. Some lizards have two eyelids – a thin, clear one to protect the open eye – and another pigmented eyelid to close the eye.

‘bat an eyelid’ – would mean to display a subtle emotional reaction, such as consternation, annoyance, sadness, joy, etc. Generally used in the negative to denote that the person in question did not display even a hint of an emotional response. “not bat an eyelid” would mean –  not to  display even a hint of an emotional response, such as consternation, annoyance, sadness, joy, etc.

 இமை - இயற்கை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தந்த வர பிரசாதம்.  'நடிகைகள், மாடலிங் துறையில் இருப்பவர்கள்  போன்ற சிலர் செயற்கை இமை பொருத்தி வந்த காலம் மாறி, தற்போது கல்லூரி பெண்களிடமும் செயற்கை இமை பிரபலமாகி இருக்கிறது. இன்றைய பெண்கள் திருமண நிகழ்ச்சி, ஏனைய விழாக்கள்  மட்டுமில்லாமல் எந்த இடத்திலும் தனித்துவமாகவும், அழகாகவும் தெரியவேண்டும் என்பதற்காக  செயற்கை கண் இமைகளைப் பொருத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

புறநானூறு போர்க்களத்தை விவரிக்கிறது.  படைவீரர்கள் மாண்ட பின்னர் அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர். இதற்கு அறப்போர் போர் என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர். இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் போர்களத்தில் சாய்ந்து கிடந்தன.  இப்படி வீரமரணம் பெற்றவர்கள்  -   வாடாத கற்பகப்பூ மாலையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையும், நறுமணமுள்ள உணவை உண்ணும் தேவர்கள் அனைவரும் மிக அருமையாகப் பெறக்கூடிய விருந்தினை நிரம்பப் பெற்றனர்!!  [இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம்]

ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். .  அவர்கள் தங்கள் செயல் எண்ணம் வார்த்தை ஒவ்வொன்றிலும் எம்பெருமானையே பேணினவர்கள்.  ஆழ்வார் பாசுரத்திலே   "இமையாத கண்"  எனப்பெற்றது ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார் நம் பொய்கையாழ்வார். .


திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல் - திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.  

இதோ இங்கே பொய்கைப்பிரானின் அமுத வரிகள் -   ஆழ்வார் தம் முதல் திருவந்தாதி பாசுரத்தில் இருந்து : - 

இமையாத கண்ணால் இருள்   அகல நோக்கி,

அமையாப் பொறிபுலன்கள்  ஐந்தும் - நமையாமல்,

ஆகத்தணைப்பார்  அணைவரே, ஆயிரவாய்

நாகத்தணையான் நகர்.

இமையாத கண்ணால் -  அதாவது, ஞானத்தில்  மிகுந்த நெஞ்சு எனும் உட்கண்ணாலே அஜ்ஞாநமாகிய இருள்  நீங்கும்படியாக, தமது ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்  உள்ளது, உள்ளபடியே  கண்டும் திருப்தி  பெற்று அடங்கியிராத பொறி புலன்கள் ஐந்தும் அவற்றிற்கு உரிய  பஞ்சவிஷயங்களையும், அடக்காமலே -  பூவுலகத்து மாதர்களின் தேஹத்தை அணைத்துக்கொண்டு கண்டபடி திரிபவர்கள், ஆயிரம்  தலைகளையும் வாய்களையும்  கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை கிட்டப் பெறமாட்டார்கள் !  - எனவே உலகத்து ஆசைகளை ஒழித்து, எம்பெருமானிடம் தங்கள் பாசத்தை செலுத்துமாறு உரைக்கின்றார் பொய்கை ஆழ்வார். 

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் முதல் நாள் புறப்பாட்டின் போது 8.9.2019 எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15th 
 Sept. 2020.

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.  









1 comment: