Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Avani amavasyai purappadu
2026
: https://youtu.be/5S9FXHf-Ko0
Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Avani amavasyai purappadu
2026
மாலை மறையும் ஆதவன் பின்னே மேற்குவானில்
ஒளிரும் வெள்ளி — சுக்கிரன்; கீழே திருவல்லிக்கேணியான் புறப்பாடு!
A
day after the birth of Bhagwan Shree Krishna 0ccurrs the purappadu of Bala
Krishnan in the morning and Uriyadi purappadu of Sri
Parathasarathi Emperuman in punnai kilai vahanam in the evening.
Here
is a photo of the illuminated Parthasarathi temple gopuram and Perumal purappadu in
punnai kilai vahanam, with Venus above in the evening sky
சுக்கிரன்
என்று நாம் அழைப்பது Venus
—
சூரியனிலிருந்து இரண்டாவது கோள். சூரியன், சந்திரனுக்குப் பிறகு நம் வானில் இயற்கையாகத்
தோன்றும் பொருட்களில் மிகப் பிரகாசமானது சுக்கிரன்தான். அதனால்தான் மாலை வானில் அது
ஒரு பெரிய ஒளிமிக்க நட்சத்திரம் போலத் தெரிகிறது; உண்மையில் அது நட்சத்திரம் அல்ல,
ஒரு கோள்.
தமிழில் பழங்காலத்திலிருந்தே
சுக்கிரன்,
வெள்ளி
என்று அழைக்கப்படுகிறது. அதிகாலையில் தோன்றும்போது விடிவெள்ளி என்றும், மாலையில் சூரியன்
மறைந்த பின்னர் தெரியும் போது மாலை
வெள்ளி என்றும் வழக்கில் கூறுவர். ஆங்கிலத்திலும் இதே காரணத்தால் Venus-க்கு
Morning
Star / Evening Star என்ற பெயர்கள் உண்டு — ஆனால் அது
star
அல்ல.
ஒரு சுவாரசியமான விஷயம்:
சுக்கிரன் சந்திரனைப் போலவே பிறை
நிலைகளைக் (phases)
கொண்டிருக்கிறது. தொலைநோக்கியில் பார்க்கும்போது சில சமயம் முழுமையாகவும், சில சமயம்
அரைவட்டமாகவும், மெல்லிய பிறை போலவும் தெரியும். Galileo இதைக்
கவனித்தது சூரிய மையக் கோட்பாட்டுக்கு முக்கியமான வானியல் ஆதாரங்களில் ஒன்றாயிற்று.
இந்திய மரபில் சுக்கிரன் / சுக்கிராச்சாரியார்
நவக்கிரகங்களில் ஒருவர்; புராண மரபில் அசுரர்களின் குருவாகக் குறிப்பிடப்படுகிறார்.
வெள்ளிக்கிழமை — சுக்கிரவாரம்
— அவரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. வானியலையும் மரபையும் தனித்தனியாகப் பார்த்தால்,
ஒன்று Venus
என்ற
இயற்கைக் கோளை விவரிக்கிறது; மற்றொன்று அதனைச் சுற்றி வளர்ந்த இந்திய சமய–ஜோதிட மரபு.
5.9.2026
மாலை
6.45 மணிக்கு,
திருவல்லிக்கேணியில் மேற்குவானில் தெரிந்த சுக்கிரன்
S Sampathkumar
Thiruvallikkeni Uriyadi Thiruvizha 2026
Sri Parthasarathi thirukkovil ~ lovely innocent moments
- see and hear the voice of the kid !!
: https://youtu.be/POxjAl-ks_s
*நந்தகோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன்
குழல் கொடு ஊதினபோது*
பெரியாழ்வார் திருமொழி : பரமபதத்தின் எம்பெருமான், வாசுதேவனுடைய புத்திரனும், மதுரையின் மன்னனுமான நந்தகோபாலன் இளவரசு ஆயர்குலச் சிறுவர்களுக்கெல்லாம் தலைவனுமான பால கோபாலன் (கோவிந்தன்) தன் திருவாயால் புல்லாங்குழலை எடுத்து இன்னிசை எழ
ஊதிய
அந்தத் தருணத்தில், தேவலோகத்தைச் சேர்ந்த அரம்பையர்கள் முதலானோர், இசையின் இனிமையில் சொக்கி, மனம் உருகி, தாமரை போன்ற
கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பனித்துத் துளிக்க அப்படியே சித்திரப் பாவைகள் போல மெய்மறந்து நின்றார்களாம்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் உறியடி புறப்பாட்டிற்காக
வாஹன மண்டபம் எழுந்தருளும் அவசரம் இன்று மாலை சில நிமிஷங்கள் முன்னர்
5th
Sept 2026 @ 5.30 pm.