To search this blog

Tuesday, August 22, 2023

Sri Azhagiya Singar Jyeshtabishekam 2023 - அவுணனை பங்கமா * இரு கூறு செய்தவன்

Today 22.8.2023 is Avani Swathi  - there would be purappadu of Sri Azhagiya Singar on every Swathi nakshathiram.  Today being Jyeshtabishekam, there was no purappadu but grand thirumanjanam for Emperuman Azhagiyasingar. 





நாரஸிம்ஹ அவதாரம் உக்கிரமானது.  எம்பெருமான் அரக்கனை அழிக்க, தன பக்தனுக்கு நேர்ந்த கஷ்டங்களை கண்டு  சினம் கொண்டு,  மிக மிக உக்கிரகமாக அவதரிக்கும் போது காட்சியளித்த எம்பெருமான் ஹிரண்யனை  வதம்  முடித்த உடனே, அவதார நோக்கம் நிறைவேறி , சாந்த ஸ்வரூபியாக மாறினான். 

நம் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே அவன் அழைத்து அருள் செய்து  வாழ்வளிப்பவன் - மூலவர் யோகநரசிம்மனாகவும் உத்சவர் தெள்ளியசிங்கமாக அழகு ஸ்வரூபனாக அருள் பாலிக்கும் ஸ்ரீஅழகியசிங்கன்.   திருமங்கை மன்னன் தமது திருமொழி - பதினோறாம் பத்து, முதல் திருமொழி, ஐந்தாம் பாசுரத்திலே :- 

அங்கோர் ஆளரியாய் * அவுணனை  பங்கமா * இரு கூறு செய்தவன்

மங்குல் மாமதி * வாங்கவே கொலோ ? பொங்கு மாகடல் * புலம்புகின்றதே

 

ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்  கண்ணன் என்று சொன்ன அந்த கணமே, அவ்விடத்திலேயே, அரக்கன் கை காட்டிய அந்த தூணில் இருந்தே  உக்கிர நரஸிம்ஹ மூர்த்தியாக  அவதரித்து, இரணியன் எனும் அசுரனை,  பங்கம் செய்து, இரு துண்டமாக   கிழித்த  எம்பெருமான், ஆகாசத்திலே விளங்குகின்ற சிறந்த சந்திரனை தன்னிடத்தில் இருந்து அபஹரித்ததனால்  அலைகளை ஆர்ப்பரித்து பொங்கிய கடல்  கோஷிக்கின்றது! - என பக்த ப்ரஹலாதனுக்கு அருளிய வ்ருத்தாந்தத்தை விவரிக்கின்றார்.  







Here are some photos from the morning purappadu  of day 3 of Sri Azhagiya Singar thavana uthsavam on 13.3.2023

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.8.2023. 

No comments:

Post a Comment