To search this blog

Monday, March 6, 2023

Thiruvallikkeni Adhyapakar Sri U.Ve. Palappur Sowrirajan swami is no more !

 With profound grief heard the passing away of Thiruvallikkeni Adhyapakar Sri U.Ve. Palappur Sowrirajan Swami 



இன்று திருவல்லிக்கேணி அத்யாபகர் ஸ்ரீ உ.வே. சௌரிராஜ அய்யங்கார் சுவாமி மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.  அன்னாருக்கு வயது 74.  

இவர் பரம ஸௌலப்யர் - மிக இனிமையாக இன்சொற்களால் மற்றவருடன் பேசுவார்.  நன்றாக திவ்யப்ரபந்தம் சேவிக்கும் வித்துவான். ஸ்ரீ முதலியாண்டான் திருவடி சம்பந்தம் கொண்ட இவர் திருவல்லிக்கேணியிலும் பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யம் செய்து வந்தார்.  ரயில்வே தபால் அலுவலகத்தில் பணியாற்றினதால் இரயிலில் பல ஊர்கள் சென்று வந்தவர்.  இவரது மகனும் அருளிச்செயல் கைங்கர்யம் செய்து வருகிறார்.   

சில வருஷங்கள் வெங்கட்ரங்கம் தெருவில் விஜய் அவென்யூ முன்பு உள்ள ஸ்ரீபார்த்தசாரதி சபா உள்ள அடுக்ககத்தில் வசித்தார்.  சமீபத்தில் துளசிங்க பெருமாள் 2ம் தெருவில் வசித்து வந்தார்.  சில காலமாக உடல் நலம் சரியின்மையால் அவதிப்பட்டார்.  இவரது மனைவி சமீபத்தில் மறைந்தார்.  

ஸ்வாமி அனைவருடனும் அன்போடு இருப்பார்.  அனைவருக்கும் தன் கையில் உள்ள பிரசாதத்தை வழங்குவார்.  எங்கள் இல்லத்திற்க்கு வந்து பலதடவை பெருமாள் பிரசாதங்களை அளித்ததை கண்ணீருடன் நினைவு கூறுகிறேன்.   

ஸ்வாமியின் மறைவு நமது ஸம்ப்ரதாயத்திற்கு ஒரு பேரிழப்பு.  



அடியோங்களிடத்தில் மிகவும் அன்பும் வாஞ்சையும் காட்டி வந்தார்.  ஸ்வாமியின்  சரமகைங்கர்யம் நாளை 7.3.2023  காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிகின்றோம் சுவாமியை  பிரிந்து வாடும் அன்னாருடைய மகன், மகள்களுக்கு - இந்த பெரிய துயரத்தை தாங்கும் நிலையை அளிக்க எம்பெருமானிடம் வேண்டுவோம்.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்  
6.3.2023

1 comment:

  1. சம்பத்குமார்March 7, 2023 at 3:35 PM

    ஓம் சாந்தி

    ReplyDelete