To search this blog

Monday, August 12, 2019

Thiruvallikkeni Aadi Ekadasi - Sri Parthasarathi purappadu 2019


திருவல்லிக்கேணி திவ்யதலத்திலே இன்று  ஆடி மாதத்து ஏகாதசி ~ ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட  வீதி புறப்பாடு.   நம் பார்த்தசாரதி திவ்யமங்கள ஸ்வரூபனாய் ஜாஜ்வல்யமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இன்று ஆளவந்தார் உத்சவத்தில் எட்டாம் நாள் - திருவாய்மொழி எட்டாம் பத்து  சேவிக்கப்பெற்று, வீதிதனில் மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி.  இதோ ஸ்ரீபேயாழ்வாரின் அற்புதவரிகள் :


கலந்து மணியிமைக்கும் கண்ணா * நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும்*  - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.

எம்பெருமான் அழகுக்கு அழகு சேர்ப்பவன்.  ஆபரணங்களும் புஷ்பங்களும் வஸ்த்ரங்களும் அவனுக்கு சாற்றப்பெறுவதன் மூலம் அழகு பெறுகின்றன. 

ஸ்ரீகௌஸ்துப மணி  கலந்து விளங்காநின்ற கண்ணபிரானே!; மரதக ரத்னமானது  ஒளிப்பரப்பையுடைத்தாய்க் கொண்டு  உனது திருமேனியை ஒத்திராநின்றது,  அழகாக விளங்குகின்ற கொத்துகளிலே வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற திருத்துழாய் மாலையணிந்த  ஸர்வேச்வரனாகிய உன்னை ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.  அத்தகைய அருமைபெற்ற எம்பெருமான் நமக்கு தரிசனமளித்தது என்னே நம் பாக்கியம்.  [கச்சி ஸ்வாமிகள் உரை - திராவிட வேதா - நன்றி!]

Today 11.8.2019 is Aadi Ekadasi.  In the evening after Alavanthar goshti, Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu at Thiruvallikkeni.  Here are some photos taken during the purappadu.

~ adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]











No comments:

Post a Comment